ஜம்மு காஷ்மீர்:2-வது கட்டமாக 26 சட்டசபை தொகுதிகளில் நாளை வாக்குப் பதிவு- ஒமர் உட்பட 239 பேர் போட்டி!
ஶ்ரீநகர்: ஜம்மு காஷ்மீர் யூனியன் பிரதேச சட்டசபை தேர்தலில் 2-வது கட்ட வாக்குப் பதிவு நாளை நடைபெறுகிறது. ஜம்மு காஷ்மீரில் 2-வது கட்டமாக மொத்தம் 26 தொகுதிகளில் நாளை வாக்குப் பதிவு நடைபெற உள்ளது. இந்த 26 தொகுதிகளில் முன்னாள் முதல்வர் ஒமர் அப்துல்லா உட்பட மொத்தம் 239 பேர் வேட்பாளர்களாகப் போட்டியிடுகின்றனர்.
ஜம்மு காஷ்மீரில் முதல் கட்டமாக 24 தொகுதிகளில் கடந்த 18-ந் தேதி வாக்குப் பதிவு நடைபெற்றது. இதனைத் தொடர்ந்து 2-வது கட்டமாக நாளை 26 தொகுதிகளில் வாக்குப் பதிவு நடைபெற உள்ளது. 2-வது கட்ட தேர்தலில் 239 வேட்பாளர்கள் போட்டியிடுகின்றனர். இந்த 26 தொகுதிகளிலும் நேற்று மாலையுடன் பிரசாரம் முடிவடைந்தது.

ஜம்மு காஷ்மீர் முன்னாள் முதல்வர் ஒமர் அப்துல்லா, காஷ்மீர் பாஜக தலைவர் ரவீந்தர் ரைனா, ஜம்மு காஷ்மீர் காங்கிரஸ் கமிட்டி தலைவர் தாரிக் ஹமீத் கர்ரா, அப்னி கட்சித் தலைவர் அல்தாப் புகாரி, முன்னாள் அமைச்சர்கள் அலி சாகர், ரஹீம் ராதெர் உள்ளிட்டோர் விஐபி வேட்பாளர்கள்.
26 தொகுதிகளிலும் நாளை காலை 7 மணிக்கு வாக்குப் பதிவு தொடங்குகிறது. ஶ்ரீநகர் மாவட்டத்தில் 8 தொகுதிகளில் அதிகபட்சமாக 93 வேட்பாளர்கள் களத்தில் உள்ளனர். புட்காம் மாவட்டத்தில் 5 தொகுதிகளில் 46 வேட்பாளர்கள் களம் காண்கின்றனர். ரஜோரி மாவட்டத்தில் 5 தொகுதிகளில் 34 பேர் போட்டியிடுகின்றனர். பூஞ்ச் மாவட்டத்தில் 3 தொகுதிகளில் 25 பேர் களத்தில் உள்ளனர். கந்தெர்பால் மாவட்டத்தில் 2 தொகுதிகளில் 21 பேரும் ரேசி மாவட்டத்தில் 3 தொகுதிகளில் 20 பேரும் போட்டியிடுகின்றனர்.
ஜம்மு காஷ்மீர் 2-வது கட்ட தேர்தல் வாக்குப் பதிவுக்காக மொத்தம் 3,502 வாக்குச் சாவடிகள் அமைக்கப்பட்டுள்ளன. இந்த 2-வது கட்ட தேர்தலில் மொத்தம் 25.78 லட்சம் பேர் வாக்காளர்கள்.
ஜம்மு காஷ்மீரில் செப்டம்பர் 18-ந் தேதி நடைபெற்ற முதல் கட்ட தேர்தலில் 61.38% வாக்குகள் பதிவாகி இருந்தன. 3-வது கட்டமாக 40 தொகுதிகளில் அக்டோபர் 1-ந் தேதி வாக்குப் பதிவு நடைபெற உள்ளது. அனைத்து வாக்குகளும் அக்டோபர் 8-ந் தேதி எண்ணப்பட்டு முடிவுகள் அறிவிக்கப்படும்.
ஜம்மு காஷ்மீரில் பிரதமர் நரேந்திர மோடி, மத்திய அமைச்சர் அமித்ஷா, லோக்சபா எதிர்க்கட்சித் தலைவர் ராகுல் காந்தி உள்ளிட்டோர் தீவிர பிரசாரம் மேற்கொண்டனர். ஜம்மு காஷ்மீருக்கு சிறப்பு அந்தஸ்து வழங்கிய அரசியல்; சாசனத்தின் 370-வது பிரிவு ரத்துக்குப் பின்பு நடைபெறும் தேர்தல் என்பதால் பெரும் கவனம் பெற்றுள்ளது.
-
பாஜகவில் இருந்து விலகி அண்ணாமலை தனிக்கட்சி தொடங்குகிறார்? ரஜினி ஆதரவுடன் திருச்சி கிழக்கில் போட்டி? -
ஆபாசம்.. ஆபாசம்.. யூடியூபர்கள் கிருஷ் ஐஷ்வர்யா மீது கோவை சைபர் க்ரைம் போலீஸில் புகார் -
சென்னையில் நாளை மாலை ‘GenZ DMK’ பிரம்மாண்ட நிகழ்ச்சி.. களமிறங்கும் திமுக உணர்வுள்ள இளைஞர்கள்! -
ஆள் மட்டுமில்லை.. கட்சியையே தவெகவில் இணைக்கும் புகழேந்தி.. புஸ்ஸி - செங்கோட்டையனுடன் சந்திப்பு -
அதிமுகவில் அடுத்த விக்கெட்? சி.வி.சண்முகத்துக்கு இப்படியொரு லட்டு சான்ஸ்? போட்டு தாக்குதே தவெக -
விசில் அடித்து முன்னேறும் கர்நாடகா, ஆந்திரா.. இனி தமிழ்நாடு வேடிக்கை பார்க்கணும்! விஜய் போட்ட பிரேக் -
ரேஷன் கார்டுதாரர்களுக்கு ஹேப்பி நியூஸ்.. ஜூன் 2, 3ல் வீடு தேடி வரும் சர்ப்ரைஸ்.. கலெக்டர் அதிரடி -
பசிக்கு இரண்டு சமோசா.. கல்வி கடன்.. ஐஐடி-யில் தோற்றவர் துபாயில் சரித்திரம் படைத்த இந்திய இளைஞன் -
சிவகுமார் போட்ட மாஸ்டர் ஸ்கெட்ச்.. ராகுலுக்கு நேரமில்லை? டெல்லியில் மிஸ்டர் விஜய்னு கூப்பிட்டது யாரு -
GH-ல் கடைநிலை ஊழியர்கள் மீது நடவடிக்கை எடுத்த ரமேஷுக்கு அர்ச்சகர்கள் மீது ஆக்ஷன் எடுக்க தாமதம் ஏன்? -
கோயம்புத்தூர்-க்கு ஓடிவரும் ராகுல் ப்ரீத் சிங்.. ரேஸ் கோர்ஸ் சாலையில் புது ஆரம்பம்! -
பூந்தமல்லி டூ வடபழனி இனி 20 நிமிடங்களில்.. ஆளில்லா மெட்ரோ ரயில் சேவைக்கு கிடைத்த பச்சை சிக்னல்












Click it and Unblock the Notifications