ஜம்மு காஷ்மீர்:2-வது கட்டமாக 26 சட்டசபை தொகுதிகளில் நாளை வாக்குப் பதிவு- ஒமர் உட்பட 239 பேர் போட்டி!
ஶ்ரீநகர்: ஜம்மு காஷ்மீர் யூனியன் பிரதேச சட்டசபை தேர்தலில் 2-வது கட்ட வாக்குப் பதிவு நாளை நடைபெறுகிறது. ஜம்மு காஷ்மீரில் 2-வது கட்டமாக மொத்தம் 26 தொகுதிகளில் நாளை வாக்குப் பதிவு நடைபெற உள்ளது. இந்த 26 தொகுதிகளில் முன்னாள் முதல்வர் ஒமர் அப்துல்லா உட்பட மொத்தம் 239 பேர் வேட்பாளர்களாகப் போட்டியிடுகின்றனர்.
ஜம்மு காஷ்மீரில் முதல் கட்டமாக 24 தொகுதிகளில் கடந்த 18-ந் தேதி வாக்குப் பதிவு நடைபெற்றது. இதனைத் தொடர்ந்து 2-வது கட்டமாக நாளை 26 தொகுதிகளில் வாக்குப் பதிவு நடைபெற உள்ளது. 2-வது கட்ட தேர்தலில் 239 வேட்பாளர்கள் போட்டியிடுகின்றனர். இந்த 26 தொகுதிகளிலும் நேற்று மாலையுடன் பிரசாரம் முடிவடைந்தது.

ஜம்மு காஷ்மீர் முன்னாள் முதல்வர் ஒமர் அப்துல்லா, காஷ்மீர் பாஜக தலைவர் ரவீந்தர் ரைனா, ஜம்மு காஷ்மீர் காங்கிரஸ் கமிட்டி தலைவர் தாரிக் ஹமீத் கர்ரா, அப்னி கட்சித் தலைவர் அல்தாப் புகாரி, முன்னாள் அமைச்சர்கள் அலி சாகர், ரஹீம் ராதெர் உள்ளிட்டோர் விஐபி வேட்பாளர்கள்.
26 தொகுதிகளிலும் நாளை காலை 7 மணிக்கு வாக்குப் பதிவு தொடங்குகிறது. ஶ்ரீநகர் மாவட்டத்தில் 8 தொகுதிகளில் அதிகபட்சமாக 93 வேட்பாளர்கள் களத்தில் உள்ளனர். புட்காம் மாவட்டத்தில் 5 தொகுதிகளில் 46 வேட்பாளர்கள் களம் காண்கின்றனர். ரஜோரி மாவட்டத்தில் 5 தொகுதிகளில் 34 பேர் போட்டியிடுகின்றனர். பூஞ்ச் மாவட்டத்தில் 3 தொகுதிகளில் 25 பேர் களத்தில் உள்ளனர். கந்தெர்பால் மாவட்டத்தில் 2 தொகுதிகளில் 21 பேரும் ரேசி மாவட்டத்தில் 3 தொகுதிகளில் 20 பேரும் போட்டியிடுகின்றனர்.
ஜம்மு காஷ்மீர் 2-வது கட்ட தேர்தல் வாக்குப் பதிவுக்காக மொத்தம் 3,502 வாக்குச் சாவடிகள் அமைக்கப்பட்டுள்ளன. இந்த 2-வது கட்ட தேர்தலில் மொத்தம் 25.78 லட்சம் பேர் வாக்காளர்கள்.
ஜம்மு காஷ்மீரில் செப்டம்பர் 18-ந் தேதி நடைபெற்ற முதல் கட்ட தேர்தலில் 61.38% வாக்குகள் பதிவாகி இருந்தன. 3-வது கட்டமாக 40 தொகுதிகளில் அக்டோபர் 1-ந் தேதி வாக்குப் பதிவு நடைபெற உள்ளது. அனைத்து வாக்குகளும் அக்டோபர் 8-ந் தேதி எண்ணப்பட்டு முடிவுகள் அறிவிக்கப்படும்.
ஜம்மு காஷ்மீரில் பிரதமர் நரேந்திர மோடி, மத்திய அமைச்சர் அமித்ஷா, லோக்சபா எதிர்க்கட்சித் தலைவர் ராகுல் காந்தி உள்ளிட்டோர் தீவிர பிரசாரம் மேற்கொண்டனர். ஜம்மு காஷ்மீருக்கு சிறப்பு அந்தஸ்து வழங்கிய அரசியல்; சாசனத்தின் 370-வது பிரிவு ரத்துக்குப் பின்பு நடைபெறும் தேர்தல் என்பதால் பெரும் கவனம் பெற்றுள்ளது.
-
இந்தியாவில் இறங்கிய 7 வெளிநாட்டவர்.. கைமாறிய ஆயுதங்கள்.. சத்தமே இல்லாமல் தட்டி தூக்கிய என்ஏஐ! -
கேஸ் சிலிண்டர் பிரச்சனைக்கு என்ன தான் தீர்வு? திடீரென பறந்த லெட்டர்.. மத்திய அரசு முக்கிய பாயிண்டு -
சல்லி சல்லியாக நொறுங்கிடுச்சே.. துபாய் அஸ்திவாரமே ஆடுதுங்க.. 'சொர்க்க பூமி' இப்படி ஆகிடுச்சே! -
எனக்கு நயன்தாரா வேணும்.. ஸ்டாலின் கனவை நிறைவேற்றுவாரா சி.வி சண்முகம் சர்ச்சை பேச்சு -
திருவள்ளூர் மக்கள் ஏக்கத்துடன் பார்த்த பல ஆண்டு கனவு... ரயில் நிலையத்தில் பார்த்துமே பெரு மகிழ்ச்சி -
தவெக அருண்ராஜ் படத்துடன்.. வாக்காளர்களுக்கு விநியோகம் செய்ய இருந்த சில்வர் பாத்திரங்கள் பறிமுதல்! -
என்னது துணை முதலமைச்சர் பதவி தராங்களா.. விஜய் தான் முதலமைச்சர்.. செங்கோட்டையன் தடாலடி -
அமெரிக்க கடற்படை உலகிலேயே மிகவும் சக்தி வாய்ந்தது.. ஏன் ஹார்முஸ் ஜலசந்தியை பாதுகாக்க முடியவில்லை? -
கொட்டிய ஆலங்கட்டி மழை.. கோவை, ஈரோடு, திருப்பூர் மாவட்டங்களில் ஐஸ் மழை பெய்ததால் மக்கள் மகிழ்ச்சி! -
"இது" இல்லை என்றால் சிலிண்டர் வராது! புக்கிங் விதிகளை திடீரென மாற்றிய மத்திய அரசு! முக்கிய அறிவிப்பு -
இப்போ வேண்டாம்.. தேர்தலுக்கு பின் ஆதரவு தருகிறேன்.. சிஎம் போஸ்ட் தாங்க.. பாஜகவிடம் பேசிய விஜய்? -
தங்க மழை கொட்ட போகுது.. PF வச்சு இருக்கீங்களா? சம்பள உச்சவரம்பு ₹25,000 ஆக உயருது? மாஸ் பிளான்












Click it and Unblock the Notifications