காஷ்மீரில் பயங்கரவாதிகள் வெறியாட்டம்- 3 நாட்களில் 3 தாக்குதல்கள்- உச்சகட்ட பதற்றம்- பாதுகாப்பு!
ஶ்ரீநகர்: ஜம்மு காஷ்மீரில் கடந்த 3 நாட்களில் 3 பயஙரவாத தாக்குதல்கள் நடத்தப்பட்டுள்ளன. இதனையடுத்து ஜம்மு காஷ்மீர் யூனியன் பிரதேசம் முழுவதும் உச்சகட்ட பதற்றம் நிலவுகிறது. அங்கு பாதுகாப்பு ஏற்பாடுகள் பலப்படுத்தப்பட்டுள்ளன.
நாட்டின் பிரதமராக நரேந்திர மோடி பதவியேற்ற ஜூன் 9-ந் தேதி முதல் ஒவ்வொரு நாளும் ஜம்மு காஷ்மீரில் பயங்கரவாதிகள் தொடர்ச்சியாக தாக்குதல்களை நடத்தி வருகின்றனர். ரேசி என்ற பகுதியில் பக்தர்கள் சென்ற பேருந்து மீது பயங்கரவாதிகள் கண்மூடித்தனமாக துப்பாக்கிச் சூடு நடத்தினர்.

பயங்கரவாதிகளின் தாக்குதலில் பக்தர்களுடன் சென்ற பேருந்து பள்ளத்தில் கவிழ்ந்தது. இத்தாக்குதலில் மொத்தம் 10 பேர் பலியாகினர். 33 பேர் படுகாயமடைந்தனர். இந்த சம்பவம் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியிருந்தது.
ஆனால் பயங்கரவாதிகள் மீண்டும் கதுவா மவட்டத்தில் சுகாய் என்ற கிராமத்தில் திடீர் தாக்குதல் நடத்தினர். இது சர்வதேச எல்லைக் கட்டுப்பாட்டு அருகே உள்ளது. இந்த கிராமத்தில் பொதுமக்களின் வீடுகளின் மீது கண்மூடித்தமாக பயங்கரவாதிகள் துப்பாக்கிச் சூடு நடத்தி இருந்தனர்.
இதனைத் தொடர்ந்து ஜம்மு காஷ்மீரின் தோடா மாவட்டத்தில் பாதுகாப்புப் படையினரின் தற்காலிக முகாம் மீது பயங்கரவாதிகள் தாக்குதல் நடத்தினர். இதனால் பாதுகாப்புப் படையினருக்கும் பயங்கரவாதிகளுக்கும் இடையே துப்பாக்கிச் சண்டை நடைபெற்றது. இந்த மோதலில் பாதுகாப்பு தரப்பில் மொத்தம் 6 பேர் படுகாயமடைந்தனர். அனைவரும் மருத்துவமனையில் தீவிர சிகிச்சைக்காக அனுமதிக்கப்பட்டுள்ளனர்.
ஜம்மு காஷ்மீரின் தோடா தாக்குதலுக்கு பாகிஸ்தானில் இருந்து செயல்படும் ஜெய்ஷ்- இ - முகமது பயங்கரவாதிகள் பொறுப்பேற்பதாக அறிவித்துள்ளனர். முந்தைய 2 தாக்குதல்கள் குறித்து இந்த இயக்கம் எந்த கருத்தும் தெரிவிக்கவில்லை.
3-வது முறையாக நாட்டின் பிரதமராக மோடி பதவியேற்ற நாள் முதலே ஜம்மு காஷ்மீரில் பயங்கரவாதிகள் அடுத்தடுத்து தொடர்ச்சியாக தாக்குதலை நடத்தி வருகின்றனர். கடந்த 3 நாட்களில் 3 பயங்கரவாத தாக்குதல்கள் நடைபெற்றுள்ளன.
இதனையடுத்து ஜம்மு காஷ்மீர் யூனியன் பிரதேசம் முழுவதும் உச்சகட்ட பதற்றம் நிலவுகிறது. ஜம்மு காஷ்மீரில் பாதுகாப்பு ஏற்பாடுகளும் பலப்படுத்தப்பட்டுள்ளன.
-
மகளிர் உரிமைத்தொகை ரூ.3,000.. கல்வி கடன் தள்ளுபடி.. ராமதாஸ் வெளியிட்ட தேர்தல் வாக்குறுதிகள்! -
₹10 லட்சம் லோன் எடுத்தா ஒரு பகுதி இலவசமா? கூட்டுறவு வங்கியில் மானியம்.. பிசினஸ் லாபம் சூப்பர் சான்ஸ் -
சென்னையில் 2 லட்சம் பேருக்கு பறந்த நோட்டீஸ்.. வீடு, கட்டிடம் வைத்துள்ளவர்களுக்கு முக்கிய அறிவிப்பு -
பாதாளத்தில் விழும் தங்கம்.. "ரூ.10,000க்கு கூட போகலாம்.." மெகா இன்ப செய்தியை சொன்ன ஆனந்த் சீனிவாசன் -
சிறகடிக்க ஆசை: போலீஸ் சொன்ன விஷயம்! சந்தோஷத்தில் முத்து! அண்ணாமலை வீட்டில் கொண்டாட்டம்! விஜயா முடிவு -
லால்குடியில் களமிறங்கிய ஆதவ் அர்ஜுனா மாமியார்.. அதிமுகவில் இணைந்த 1 மாதத்தில் சீட் கொடுத்த எடப்பாடி -
ஆபரண தங்கம் 6 சவரன் 15 வருடம் முன் வாங்கினீங்களா? அப்போ ₹1 லட்சம், இப்ப ரேட் தெரிஞ்சா ஷாக் ஆவீங்க -
அண்ணாமலை கடும் ‘அப்செட்’.. தேர்தலில் போட்டியிட மறுப்பது ஏன்? எடப்பாடியால் கலங்கும் பாஜக! 2 மேட்டர் -
தெற்கு ரயில்வேயில் 827 கி. மீ தூரத்திற்கு நடந்த நல்ல விஷயம்.. பயணிகள், பொதுமக்களுக்கு இனி நிம்மதி -
சென்னையில் அதிமுகவுக்காக இறங்கும் 13 பேர்.. 3 பெண்களுக்கு வாய்ப்பு.. கொளத்தூரில் யாருக்கு வாய்ப்பு? -
ரசிகர்கள் எதிர்பார்த்த வீடியோவை வெளியிட்ட திரிஷா.. ஒரு வழியாக எல்லோரும் கேட்டது நடந்துடுச்சு.. குவியும் பாராட்டு -
"பதிலடி தாக்குதல் நடத்துவோம்.." ஈரானுக்கு எதிராக ஒன்றுகூடும் வளைகுடா.. 6 நாடுகள் கூட்டாக அறிக்கை












Click it and Unblock the Notifications