ஜம்மு - காஷ்மீரில் என்கவுண்டர்... 5 தீவிரவாதிகள் சுட்டுக்கொலை
ஸ்ரீநகர்: ஜம்மு காஷ்மீரின் ஸ்ரீநகரில் பாதுகாப்பு படையினருக்கும், தீவிரவாதிகளுக்கும் இடையே நடந்த துப்பாக்கிச் சண்டையில் 5 தீவிரவாதிகள் சுட்டுக்கொல்லப்பட்டனர்.
குல்காம் பகுதியில் தீவிரவாதிகள் பதுங்கி இருப்பதாக தகவல் கிடைத்தது. இதனையடுத்து அந்த பகுதியில் ரோந்து சென்ற பாதுகாப்பு படையினர் மீது தீவிரவாதிகள் பதுங்கி இருந்து திடீர் தாக்குதல் நடத்தினர்.

இதனையடுத்து, தீவிரவாதிகளுக்கு தகுந்த பதிலடி கொடுக்கப்பட்டது. மேலும், என்கவுண்டர் நடந்த அப்பகுதியில் மொபைல் சேவை ரத்து செய்யப்பட்டுள்ளது. கடும் துப்பாக்கி சண்டையின் முடிவில் ஐந்து தீவிரவாதிகள் சுட்டுக்கொல்லப்பட்டனர்.
கொல்லப்பட்ட தீவிரவாதிகளிடம் இருந்து வெடிப்பொருட்கள், துப்பாக்கி உள்ளிட்ட ஆயுதங்கள் பறிமுதல் செய்யப்பட்டன. பாதுகாப்பு படையினர் தொடர்ந்து ரோந்து பணியில் ஈடுபட்டு வருகின்றனர்.
Visuals: Encounter underway between security forces and terrorists in Kulgam district's Kellam Devsar area. #JammuAndKashmir (Visuals deferred by unspecified time) pic.twitter.com/koj3VmH5xC
— ANI (@ANI) February 10, 2019
தாக்குதல் நடத்திய தீவிரவாதிகள் எந்த அமைப்பைச் சேர்ந்தவர்கள் என்பது உடனடியாக தெரியவில்லை. தீவிரவாதிகளின உடல்களை மீட்டு, தொடர்ந்து அடையாளம் காணும் பணி நடந்து வருகிறது. என்கவுண்டரின் போது, தீவிரவாதிகள் கற்களை வீசி தாக்கியதில் நான்கு பாதுகாப்பு படை வீரர்கள் காயமடைந்தனர்.












Click it and Unblock the Notifications