காஷ்மீரில் உள்ளாட்சி தேர்தல்.. பலத்த பாதுகாப்பிற்கு இடையே இன்று இரண்டாம்கட்ட வாக்குப்பதிவு!
காஷ்மீரில் உள்ளாட்சி அமைப்புகளுக்கு இன்று இரண்டாம்கட்ட தேர்தல் நடக்க உள்ளது.
ஸ்ரீநகர்: காஷ்மீரில் உள்ளாட்சி அமைப்புகளுக்கு இன்று இரண்டாம்கட்ட தேர்தல் நடக்க உள்ளது.
ஜம்மு காஷ்மீரில் தற்போது உள்ளாட்சி அமைப்புகளுக்கு தேர்தல் நடந்து வருகிறது. அங்கு இதனால் பலத்த பாதுகாப்பு போடப்பட்டுள்ளது.
கடந்த 8 தேதி அங்கு முதற்கட்ட தேர்தல் நடந்தது.முதல் கட்டமாக 422 நகராட்சி வார்டுகளுக்கு தேர்தல் நடந்தது. நகராட்சி தேர்தல்களில் வாக்குப்பதிவு இயந்திரம் அங்கு முதன்முறையாக பயன்படுத்தப்பட உள்ளது.
தேர்தல்கள் தனி தனியாக நடக்கும். நகராட்சி அமைப்புகளுக்கும், உள்ளாட்சி அமைப்புகளுக்கு தேர்தல்கள் தனியே நடக்கும். இந்த முறை இந்த தேர்தல் நான்கு கட்டமாக நடத்தப்பட உள்ளது. அந்த வகையில் உள்ளாட்சி அமைப்புகளுக்கான முதல் கட்ட தேர்தல் இன்று நடைபெறுகிறது.
Voting underway for 384 wards in 13 districts of #JammuAndKashmir in the second phase of urban local bodies elections; #visuals from a polling station in Katra pic.twitter.com/NhuhY5JUAC
— ANI (@ANI) October 10, 2018
பாதுகாப்பு கருதி இந்த நடைமுறை பின்பற்றப்படுகிறது. இந்த தேர்தலை முக்கியமான கட்சிகள் எல்லாம் புறக்கணிக்கிறது.
[இன்று அதிகாலை அந்தமானில் நிலநடுக்கம்.. மக்கள் பீதி!]
காஷ்மீரில் உள்ளாட்சி அமைப்புகளுக்கு இன்று இரண்டாம்கட்ட தேர்தல் நடக்க உள்ளது. மொத்தமாக 13 மாவட்டங்களுக்கு இன்று தேர்தல் நடக்க உள்ளது.
காஷ்மீரில் கடந்த சில நாட்களாக தீவிரவாத தாக்குதல்கள் அதிகரித்து இருக்கிறது. இதனால் தற்போது அங்கு பாதுகாப்பு பலப்படுத்தப்பட்டு இருக்கிறது. முதல்வர் மெகபூபா முப்தியும், தேசிய மாநாட்டு கட்சி தலைவர் பரூக் அப்துல்லாவும் தேர்தலை புறக்கணிக்கிறார்கள்.