For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts
Oneindia App Download

சிறையில் இட்லி, பொங்கலுடன் உற்சாகமாக நாளை ஆரம்பித்த ஜெயலலிதா

By Veera Kumar
Google Oneindia Tamil News

பெங்களூர்: சிறையில் இருந்து ஜாமீனில் வெளியே வர உள்ள ஜெயலலிதா இன்று மிகுந்த உற்சாகத்துடன் அனைத்து பணிகளையும் மேற்கொண்டு வருகிறார்.

பெங்களூர் மத்திய சிறையில் இன்று காலை 6.30 மணிக்குதான் ஜெயலலிதா தூக்கத்தில் இருந்து விழித்துள்ளார். வழக்கமாக 5.30 மணிக்கெல்லாம் எழுந்துகொள்ளும் ஜெயலலிதா நிம்மதியாக தூங்கியதாலோ என்னவோ, இன்று ஒரு மணி நேரம் காலதாமதமாக எழுந்துள்ளார்.

Jayalalitha

சிறிது வாக்கிங் சென்ற பிறகு தமிழ், ஆங்கில பத்திரிகைகளை வாசித்துள்ளார் ஜெயலலிதா. ஒரு பக்கம் விடாமல் அனைத்து பத்திரிகைகளையும் கவனமாக படித்துள்ளார்.

இதன்பிறகு குளித்துவிட்டு, சிறை வளாகத்திலுள்ள துளசி மாடத்திற்கு பூஜைகள் நடத்தியுள்ளார். பூஜைக்கு பிறகு, இட்லி, பொங்கல் ஆகியவற்றை சாப்பிட்டுவிட்டு மேற்கொண்டு பழச்சாறு பருகியுள்ளார். இவற்றை ராஜ்யசபா அதிமுக எம்.பி செல்வகுமார் வாங்கி கொடுத்துள்ளார்.

மொத்தத்தில், வழக்கத்தைவிட இன்று ஜெயலலிதா மிகுந்த உற்சாகத்துடன் இருப்பதாக சிறைத்துறை வட்டாரங்கள் தெரிவித்தன.

English summary
Jayalalitha looks enthusiastic in jail today as she will release on bail today.
 
 
 
உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X