ஜாமீன் மறுத்தது மட்டுமல்ல, ஜாமீன் கொடுத்த நீதிபதியும் கர்நாடகாவை சேர்ந்தவர்தான்

Subscribe to Oneindia Tamil

பெங்களூர்: ஜெயலலிதா வழக்கிற்கும் கர்நாடகாவுக்கும் இடையே தொடர்ந்து ஏதோ ஒரு பிணைப்பு இருந்து கொண்டே உள்ளது.

ஜெயலலிதா கர்நாடகாவின் மைசூர் மாவட்டத்தில் பிறந்தவர். பெங்களூர் பிஷப் காட்டன் பள்ளியில் படித்தவர். அவர் தமிழகத்து முதல்வரானார். அப்போது வருமானத்துக்கு அதிகமாக அவர் சொத்து சேர்த்ததாக புகார் எழுந்தது.

ஜெயலலிதா மீதான சொத்துக்குவிப்பு வழக்கு பெங்களூர் சிறப்பு நீதிமன்றத்துக்கு மாற்றம் செய்யப்பட்ட பிறகு, அந்த வழக்கின் தீர்ப்பை கடந்த மாதம் 27ம்தேதி வழங்கியது கர்நாடகாவை சேர்ந்த நீதிபதி மைக்கேல் டி குன்ஹா ஆவார்.

Jayalalitha's link with Karnataka

இதன்பிறகு ஜெயலலிதாவின் ஜாமீன் மனுவை தள்ளுபடி செய்த கர்நாடக ஹைகோர்ட் நீதிபதி சந்திரசேகராவும் கர்நாடகாவை சேர்ந்தவரே.

இதனால் கர்நாடக நீதிபதிகள் சதி செய்துவிட்டதாக அதிமுகவில் சிலர் புகார் கூறினர். போஸ்டர்கள் அடித்து ஒட்டி வந்தனர். இந்நிலையில், உச்ச நீதிமன்றத்துக்கு ஜெயலலிதா ஜாமீன் மனு விசாரணை சென்றது.

அங்கு உச்ச நீதிமன்றத்தின் தலைமை நீதிபதியாகவே பதவி வகிப்பவர் கர்நாடகத்தை சேர்ந்த தத்து தான். மேலும், இந்த ஜாமீன் வழக்கை விசாரித்த பெஞ்சிலும் அவர் இருந்தார்.

தத்து தலைமையிலான அமர்வுதான் ஜெயலலிதாவுக்கு ஜாமீன் வழங்கியுள்ளது. ஜெயலலிதாவுக்கும் கர்நாடகாவுக்கும் இடையேயான தொடர்பும் உச்சநீதிமன்றம் வரை சென்றுள்ளது.

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+