எம கண்டம் முடிந்த பிறகு சிறையிலிருந்து வெளியே வந்த ஜெயலலிதா
பெங்களூர்: மதியம் 3.30 மணிக்கு மேல் நல்ல நேரத்தில்தான், சிறையில் இருந்து வெளியே வர வேண்டும் என்று ஜெயலலிலா குடும்ப ஜோதிடர்கள் ஆலோசனை தெரிவித்தபடியே அவரது விடுதலை நிகழ்ந்துள்ளது.
இன்று மதியம் 1.30 மணி முதல் 3 மணிவரை எமகண்டம் இருந்ததால், அதன்பிறகுதான் ஜெயலலிதா சிறையில் இருந்து வெளியே வர வேண்டும் என்று அவரது குடும்ப ஜோதிடர்கள் கூறியதாக தகவல் வெளியாகியிருந்தது.
அதேபோல, சூரியன் அஸ்தமனமான பிறகுதான் போயஸ்கார்டன் வீட்டுக்குள் ஜெயலலிதா கால் வைக்க வேண்டும் என்பதும் சென்னையிலுள்ள அதிமுக தலைமைக்கு நெருக்கமான சில ஜோதிடர்கள் ஆலோசனையாம்.

எனவே 3.30 மணிக்கு மேல் சிறையில் இருந்து ஜெயலலிதாவை வெளியேவருவதையே அவரது வக்கீல்கள் விரும்பினார்கள் என்று தெரிகிறது.
அதேபோல ஜெயலலிதா, மாலை 3.15 மணிக்கு சிறையில் இருந்து வெளியே வந்தார்.
தீர்ப்பு தேதியன்று கோர்ட் வளாகத்திற்குள் ஜெயலிலதா நுழைந்தபோதும், எமகண்ட நேரம் முடிந்திருந்தது. அதை கணக்கிட்டு கோர்ட் வளாகத்துக்குள் அவர் சென்றதாக கூறினர். இப்போது குறுகிய காலத்திலேயே ஜெயலலிதாவுக்கு ஜாமீன் கிடைத்துள்ளதால் அதேபோல ஜோதிடர்கள் தங்கள் அறிவுரைகளை தெரிவித்திருந்ததாக கூறப்படுகிறது.












Click it and Unblock the Notifications