ஜெயலலிதாவின் ஜாமீன் நீட்டிக்கப்படுமா?: மே 12ல் சுப்ரீம் கோர்ட் விசாரணை!

Subscribe to Oneindia Tamil

டெல்லி: சொத்துக் குவிப்பு வழக்கில், முன்னாள் முதல்வர் ஜெயலலிதாவின் ஜாமீன் கெடு மே 12ம் தேதியோடு முடிவடைய உள்ளதை தொடர்ந்து, அன்று மீண்டும் ஜாமீன் மனு விசாரணைக்கு வர உள்ளது.

ஜெயலலிதா, சசிகலா, சுதாகரன் மற்றும் இளவரசி ஆகிய நால்வரும் சொத்துக்குவிப்பு வழக்கில் குற்றவாளிகள் என்று பெங்களூரு சிறப்பு நீதிமன்றம் தீர்ப்பளித்தது. இதில் ஜெயலலிதாவுக்கு நான்காண்டு சிறை தண்டனையும், ரூ.100 கோடி அபராதமும் விதிக்கப்பட்டது. மற்றமூவருக்கும், 4 ஆண்டு சிறை தண்டனையும், 10 கோடி ரூபாய் அபராதமும் விதிக்கப்பட்டது.

Jayalalithaa appeal verdict on May 11th, bail plea on May 12th

சொத்துக்குவிப்பு வழக்கில் தண்டனை பெற்ற ஜெயலலிதா உள்ளிட்ட நால்வருக்கும், ஹைகோர்ட் ஜாமீன் மறுத்த நிலையில், அக்டோபர் 17ம்தேதி, உச்ச நீதிமன்றம் ஜாமீன் வழங்கியது. இதன்பிறகு உச்சநீதிமன்றம் மே 12ம் தேதி வரைக்கும் ஜாமீனை நீட்டித்தது.

எனவே, ஜாமீன் மனு மீதான விசாரணை, மே 12ம் தேதியான வரும் செவ்வாய்க்கிழமை மீண்டும் விசாரணைக்கு வருகிறது. அதற்கு ஒருநாள் முன்பாக, அதாவது, மே 11ம் தேதிதான், ஹைகோர்ட்டில், ஜெயலலிதா அப்பீல் மனு மீதான தீர்ப்பு வெளியாக உள்ளது. எனவே அந்த தீர்ப்பு, ஜாமீன் மனு விசாரணையில் தாக்கத்தை ஏற்படுத்தும் என்று தெரிகிறது.

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+