பவானி சிங்கை நீக்க கோரிய வழக்கில் 2 நீதிபதிகள் மாறுபட்ட தீர்ப்பு!: வழக்கு வேறு பெஞ்சுக்கு மாற்றம்
டெல்லி: ஜெயலலிதா வழக்கில் பவானிசிங்கை நீக்க கோரிய மனு மீதான வழக்கில் இன்று உச்சநீதிமன்ற நீதிபதிகள் மாறுபட்ட தீர்ப்பை வழங்கியதால், வழக்கு வேறு பெஞ்சுக்கு மாற்றப்பட்டுள்ளது.
ஜெ.மேல்முறையீட்டு வழக்கில், அரசு வக்கீலாக பவானிசிங் ஆஜராக கூடாது என்று திமுகவின் அன்பழகன் தரப்பில், உச்சநீதிமன்றத்தில் மனு தாக்கல் செய்யப்பட்டது. இதை நீதிபதிகள் மதன் லோகூர் மற்றும் பானுமதி ஆகியோர் அடங்கிய இரு நீதிபதிகள் பெஞ்ச் விசாரித்து வந்தது.
விசாரணை முடிந்த நிலையில், தீர்ப்பு ஏப்ரல் 15ம்தேதி வழங்கப்படும் என்று அறிவிக்கப்பட்டிருந்தது. அதன்படி இன்று மதியம், 1 மணிக்கு தீர்ப்பு வழங்கப்பட்டது.

நீதிபதிகள் மதன் லோகூர், பானுமதி அடங்கிய இரு நபர் பெஞ்ச் இந்த தீர்ப்பை இன்று வழங்கியது. முதலில் மத ன் லோகூர் தீர்ப்பை வெளியிட்டார். தனது தீர்ப்பில் "பவானிசிங்கை நீக்கிவிட்டு வழக்கை மீண்டும் விசாரிக்க வேண்டும்" என்று தீர்ப்பளித்தார். ஆனால், இதற்கு அடுத்தபடியாக தீர்ப்பை வாசித்த நீதிபதி பானுமதி, "பவானிசிங் நியமனத்தில் தவறில்லை" என்று தீர்ப்பு வழங்கினார்.
இரு நீதிபதிகள் பெஞ்ச் மாறுபட்ட கருத்தை கூறியதால், கூடுதல் நீதிபதிகள் அடங்கிய பெஞ்சுக்கு வழக்கை மாற்றுவதாக அறிவித்தார், மதன் லோகூர்.
மதன் லோகூர் அளித்த தீர்ப்பில் ஜெயலலிதா தரப்பை கடுமையாக கண்டித்துள்ளார். ஒரு கிரிமினல் வழக்கை எப்படி நடத்த கூடாது என்பதற்கு இந்த வழக்கு ஒரு உதாரணம்..பவானிசிங் ஹைகோர்ட்டில் ஆஜரானதால் வழக்கின் தன்மை பாதிக்கப்பட்டுவிட்டது என்று லோகூர் கூறினார்.
ஆனால், சிறப்பு நீதிமன்றத்தில், பவானிசிங் ஆஜராக கர்நாடக அரசு பிறப்பித்திருந்த உத்தரவை, அதன்பிறகு ரத்து செய்யவில்லை என்பதால், பவானிசிங் ஆஜரானதில் தவறில்லை என்று பானுமதி தீர்ப்பளித்தார். "2013ம் ஆண்டு பிப்ரவரி 2ம்தேதி, கர்நாடக அரசு, பவானிசிங்கிற்கு வழங்கிய அனுமதியை, அந்த அரசு ரத்து செய்யும்வரை பவானிசிங்கிற்கு, மேல் கோர்ட்டுகளில் வாதிடவும் அனுமதி உண்டு" என்று பானுமதி திட்டவட்டமாக கூறிவிட்டார்.
ஆனால், வழக்கு விசாரணையின்போது, ஹைகோர்டில் நடைபெறும் ஜெ. மேல்முறையீட்டு மனு மீதான வழக்கில், வாதாட கர்நாடக அரசு, பவானிசிங்கிற்கு அனுமதி வழங்கவில்லை என்று கர்நாடக மாநில அரசு வக்கீல் கூறியிருந்தார் என்பது குறிப்பிடத்தக்கது.
-
பதவியைக் காக்க கருணாநிதியிடம் ஆதரவு கேட்ட ஜானகி? 1988இல் ஆட்சி கலைப்பு.. ஜெயலலிதா எடுத்த சபதம்? -
இன்னும் சில மணி நேரத்தில் அமெரிக்கா எடுக்கும் முடிவு.. தங்க மார்கெட்டை தாக்க போகும் சூறாவளி! -
ஆதவ் அர்ஜுனா உடைத்த அடுத்த பர்னிச்சர்.. தவெக நிர்மல்குமாரின் பதிவும் ஒரே வார்த்தையில் காலி -
லுலு மால் கோயம்புத்தூர்..நூல் நூலாக தொங்கிய சிக்கன் லாலிபாப்.. அடுத்து கோவையில் நடந்த பெரிய ட்விஸ்ட் -
சிவி சண்முகம் சர்ச்சை பேச்சு.. இன்ஸ்டா போஸ்டில் நயன்தாரா பதிலடி.. இப்படி சொல்லிட்டாரே! குவியும் கமெண்ட்ஸ்! -
மொத்த பவரையும் காட்டிய இந்தியா.. கச்சா எண்ணெயுடன் குஜராத் வந்தது இந்திய டேங்கர் கப்பல்! -
PHH, AAY ரேஷன் கார்டுதாரர்களுக்கு ஷாக்! அதிரடியாக தூக்கப்பட்ட ரேஷன் கார்டுகள்! 41.41 லட்சம் குளோஸ்! -
அன்று 10 ஆயிரம் போட்டிருந்தால் இன்று ஒரு கோடி.. ஆச்சரியமாக வளர்ந்த பிரபல நிறுவனம் -
திருவண்ணாமலை கிரிவலப் பாதையில் கண்ட காட்சி.. ஆடிப்போன பொதுமக்கள்.. அதிர வைத்த ஊழியர்கள் -
கடன் சுமை.. வீட்டை ஜப்தி செய்த அதிகாரிகள்.. தெருவோரம் தூங்கிய சீரியல் நடிகை.. நெகிழ வைத்த மாற்றம்! -
29 தொகுதிகள்.. காங்கிரஸை விட 1 கூடுதலாக.. நாளை மறுநாள் அதிமுக - பாஜக ஒப்பந்தம் கையெழுத்து? -
”90 சீட், 2.5 வருடம் முதல்வர்” பேரம் பேசுனாங்க.. விஜய் சொன்ன ஒரே வார்த்தை! போட்டு உடைத்த ஆதவ் அர்ஜுனா












Click it and Unblock the Notifications