ஜெ. விடுதலைக்கு எதிரான வழக்கு: சட்டசபை தேர்தலுக்கு முன் வருமா தீர்ப்பு? பரபரக்கும் அரசியல் களம்
டெல்லி: தமிழக சட்டசபை தேர்தலில் அரசியல் கட்சிகளால் மிகவும் எதிர்பாக்கப்பட்ட ஒன்றாக இருக்கிறது சொத்து குவிப்பு வழக்கில் இருந்து ஜெயலலிதா விடுதலை செய்யப்பட்டதற்கு எதிரான மேல்முறையீட்டு வழக்கின் தீர்ப்பு. சட்டசபை தேர்தல் நடைபெறும் மே 16-ந் தேதிக்கு முன்னர் தீர்ப்பு எப்படி வந்தாலும் அது மிகப் பெரிய தாக்கத்தை ஏற்படுத்தும் என்றே கூறப்படுகிறது.
உச்சநீதிமன்றத்தில் நீதிபதிகள் பினாகி சந்திரகோஷ், அமித்வாராய் ஆகியோர் அடங்கிய பெஞ்ச் ஜெயலலிதா விடுதலைக்கு எதிரான மேல்முறையீட்டு மனுக்களை விசாரித்து வருகிறது. கர்நாடகா அரசின் சார்பில் மூத்த வழக்கறிஞர்கள் துஷ்யந்த் தவே, பிவி ஆச்சார்யா ஆகியோர் தங்களது இறுதிவாதங்களை முன்வைத்துவிட்டனர். இவ்வழக்கின் முதல் மனுதாரரான சுப்பிரமணியன் சுவாமியும் வாதத்தை நிறைவு செய்துவிட்டார்.

மேல்முறையீட்டு மனுவைத் தாக்கல் செய்த திமுக பொதுச்செயலர் அன்பழகன் தமது எழுத்துப்பூர்வமான வாதங்களை தாக்கல் செய்திருக்கிறார். தற்போது ஜெயலலிதா தரப்பு வாதங்கள் முன்வைக்கப்பட்டு வருகின்றன. வரும் 5-ந் தேதி மீண்டும் தொடங்கும் விசாரணையில் ஜெயலலிதா வழக்கறிஞர் வாதத்தைத் தொடர உள்ளார். அவர் குறைந்தபட்சம் ஒரு வார காலம் தமது வாதத்தை முன்வைக்க வாய்ப்புள்ளது. அப்போது நீதிபதிகள் கேள்வி ஏதேனும் எழுப்பினால் அதற்கு பதிலளிக்க வேண்டும். ஆக ஏப்ரல் 5-ந் தேதி முதல் அதிகபட்சமாக 10 நாட்கள் இவ்வழக்கின் விசாரணை நடைபெறும்.
அதன் பிறகு கர்நாடகா அரசு மேல்முறையீட்டு மனுவைத் தாக்கல் செய்ய முடியுமா?என்பது குறித்த விசாரணையும் நடைபெற உள்ளது. இவ்வழக்கைப் பொறுத்தவரையில் உச்சநீதிமன்ற நீதிபதிகள், திரும்ப திரும்ப முன்வைக்கப்படும் வாதங்களை நிராகரித்துவிடுகின்றனர். புதிய வாதங்கள் இருந்தால் அதை முன்வைக்குமாறு நீதிபதிகள் கோருகின்றனர். கர்நாடகா அரசு, சுப்பிரமணியன் சுவாமி மற்றும் அன்பழகன் தரப்பு மூவருமே, கர்நாடகா உயர்நீதிமன்றம் (நீதிபதி குமாரசாமி) ஜெயலலிதாவை விடுதலை செய்தது தவறு என்பதை வலியுறுத்தியுள்ளனர்.
அனைத்து விசாரணைகளும் முடிவடைந்த நிலையில் வழக்கில் தீர்ப்பு ஒத்திவைக்கப்படும். தீர்ப்பு என்பது 10 நாளிலும் வழங்கப்படலாம் அல்லது 2 மாதங்கள் கழித்தும் கூட தரப்படலாம்.
இதில் மிக முக்கியமானது தமிழக சட்டசபை தேர்தல் வாக்குப் பதிவு நடைபெறும் நாளுக்கு முன்னர் அதாவது மே 15-ந் தேதியன்று உச்சநீதிமன்றத்துக்கு கோடைகால விடுமுறை தொடங்கிவிடுகிறது.
ஆகையால் ஜெயலலிதா வழக்கின் தீர்ப்பு தேர்தலுக்கு முன்னர் வருமா? தேர்தலுக்கு பின் வருமா? என்கிற பெரும் எதிர்பார்ப்பு தேர்தல் களத்தில் நிலவுகிறது.
-
அண்ணாமலை போட்ட அந்த ஒரு கண்டிஷன்.. ஆடிப் போன டெல்லி மேலிடம்.. பிம்ப அரசியல் உடைகிறதா? இனி என்னாகும் -
ஆரம்பமே அலங்கோலம்.. பெரம்பூர் விஜய் பிரச்சாரத்தில் தவெகவினரால் அடுத்தடுத்து அசம்பாவிதம் -
Gold Price Today: தங்கம் விலை அதிரடியாக உயர்ந்தது.. காலையில் சரிந்து மாலையில் எகிறியது! நகை பிரியர்கள் கலக்கம்! -
ஆரணியில் கால் வைத்த மகாலட்சுமி.. 75 வருட ரூல்ஸை உடைத்து திமுக முதல்முறை சாதனை.. அதிரும் திருவண்ணாமலை! -
தவெக விஜய்க்கு சான்ஸே இல்லை.. 3வது இடம்தான்.. ஆனால் அதிலும் பெரிய சறுக்கல்.. சுடசுட வெளியான சர்வே -
தமிழகத்தில் 2010 ல் RI ஆக வேலைக்கு சேர்ந்தவர் 2026ல் எவ்வளவு சம்பளம் வாங்குவார் தெரியுமா? -
மாதம்பட்டி ரங்கராஜன் டிஎன்ஏ டெஸ்ட் ரிசல்ட் வந்தாச்சு..! ஜாய் கிரிஸில்டா குழந்தை விஷயத்தில் வெளியான தகவல்! -
நான் ஒருமுறை குடிச்சேன்.. ஐஏஎஸ் ஆக வேண்டிய பொண்ணு! வாழ்க்கை மாறிய காரணம்! நடிகை கஸ்தூரி ஓபன் -
பாண்டியன் ஸ்டோர்ஸ் 2: மீனா கேட்ட கேள்வி.. பாண்டியனின் எதிர்பாராத முடிவு.. சரவணன் நிலைமை? செம சம்பவம் -
இததான் ஒட்டிகிட்டு இருந்தீங்களா? அமெரிக்காவை லெஃப்ட் ஹேண்ட் டீல் செய்யும் ஈரான்! கோடிக்கணக்கில் லாஸ் -
விஜய்க்கு பெரம்பூரில் பிரபல நடிகை வைத்த செக்.. பிரச்சாரம் தொடங்கும் முன்பே இப்படியா பஞ்சாயத்து? -
நேத்து வந்த ஸ்ரீநாத்துக்கு சீட்.. தூத்துக்குடி அஜிதா ஆக்னல் செய்த சம்பவம்! சொதப்பிய விஜய்!












Click it and Unblock the Notifications