ஜெ. விடுதலைக்கு எதிரான வழக்கு: சட்டசபை தேர்தலுக்கு முன் வருமா தீர்ப்பு? பரபரக்கும் அரசியல் களம்
டெல்லி: தமிழக சட்டசபை தேர்தலில் அரசியல் கட்சிகளால் மிகவும் எதிர்பாக்கப்பட்ட ஒன்றாக இருக்கிறது சொத்து குவிப்பு வழக்கில் இருந்து ஜெயலலிதா விடுதலை செய்யப்பட்டதற்கு எதிரான மேல்முறையீட்டு வழக்கின் தீர்ப்பு. சட்டசபை தேர்தல் நடைபெறும் மே 16-ந் தேதிக்கு முன்னர் தீர்ப்பு எப்படி வந்தாலும் அது மிகப் பெரிய தாக்கத்தை ஏற்படுத்தும் என்றே கூறப்படுகிறது.
உச்சநீதிமன்றத்தில் நீதிபதிகள் பினாகி சந்திரகோஷ், அமித்வாராய் ஆகியோர் அடங்கிய பெஞ்ச் ஜெயலலிதா விடுதலைக்கு எதிரான மேல்முறையீட்டு மனுக்களை விசாரித்து வருகிறது. கர்நாடகா அரசின் சார்பில் மூத்த வழக்கறிஞர்கள் துஷ்யந்த் தவே, பிவி ஆச்சார்யா ஆகியோர் தங்களது இறுதிவாதங்களை முன்வைத்துவிட்டனர். இவ்வழக்கின் முதல் மனுதாரரான சுப்பிரமணியன் சுவாமியும் வாதத்தை நிறைவு செய்துவிட்டார்.

மேல்முறையீட்டு மனுவைத் தாக்கல் செய்த திமுக பொதுச்செயலர் அன்பழகன் தமது எழுத்துப்பூர்வமான வாதங்களை தாக்கல் செய்திருக்கிறார். தற்போது ஜெயலலிதா தரப்பு வாதங்கள் முன்வைக்கப்பட்டு வருகின்றன. வரும் 5-ந் தேதி மீண்டும் தொடங்கும் விசாரணையில் ஜெயலலிதா வழக்கறிஞர் வாதத்தைத் தொடர உள்ளார். அவர் குறைந்தபட்சம் ஒரு வார காலம் தமது வாதத்தை முன்வைக்க வாய்ப்புள்ளது. அப்போது நீதிபதிகள் கேள்வி ஏதேனும் எழுப்பினால் அதற்கு பதிலளிக்க வேண்டும். ஆக ஏப்ரல் 5-ந் தேதி முதல் அதிகபட்சமாக 10 நாட்கள் இவ்வழக்கின் விசாரணை நடைபெறும்.
அதன் பிறகு கர்நாடகா அரசு மேல்முறையீட்டு மனுவைத் தாக்கல் செய்ய முடியுமா?என்பது குறித்த விசாரணையும் நடைபெற உள்ளது. இவ்வழக்கைப் பொறுத்தவரையில் உச்சநீதிமன்ற நீதிபதிகள், திரும்ப திரும்ப முன்வைக்கப்படும் வாதங்களை நிராகரித்துவிடுகின்றனர். புதிய வாதங்கள் இருந்தால் அதை முன்வைக்குமாறு நீதிபதிகள் கோருகின்றனர். கர்நாடகா அரசு, சுப்பிரமணியன் சுவாமி மற்றும் அன்பழகன் தரப்பு மூவருமே, கர்நாடகா உயர்நீதிமன்றம் (நீதிபதி குமாரசாமி) ஜெயலலிதாவை விடுதலை செய்தது தவறு என்பதை வலியுறுத்தியுள்ளனர்.
அனைத்து விசாரணைகளும் முடிவடைந்த நிலையில் வழக்கில் தீர்ப்பு ஒத்திவைக்கப்படும். தீர்ப்பு என்பது 10 நாளிலும் வழங்கப்படலாம் அல்லது 2 மாதங்கள் கழித்தும் கூட தரப்படலாம்.
இதில் மிக முக்கியமானது தமிழக சட்டசபை தேர்தல் வாக்குப் பதிவு நடைபெறும் நாளுக்கு முன்னர் அதாவது மே 15-ந் தேதியன்று உச்சநீதிமன்றத்துக்கு கோடைகால விடுமுறை தொடங்கிவிடுகிறது.
ஆகையால் ஜெயலலிதா வழக்கின் தீர்ப்பு தேர்தலுக்கு முன்னர் வருமா? தேர்தலுக்கு பின் வருமா? என்கிற பெரும் எதிர்பார்ப்பு தேர்தல் களத்தில் நிலவுகிறது.
-
NDA கூட்டணியில் தவெக? துணை முதல்வராகிறாரா விஜய்? சாணக்கியத்தனத்தை சொல்லி கொடுத்த பிரபல நடிகர் -
“சவுதியிலிருந்து உடனே வெளியேறுங்கள்..” முதல் முறையாக அறிவித்த அமெரிக்கா! ஆக்ரோஷமான ஈரான் -
விஜய்க்கு எதிராக வெளியான வீடியோ.. அதிர்ந்து போன நடிகை அம்பிகா! ஆதங்கத்துடன் பதிலடி -
அமெரிக்கா மீது இடியை இறக்கிய ஈரான்! டிரம்ப் மீது மக்கள் அதிருப்தி! இதுக்கு சும்மாவே இருந்திருக்கலாம் -
திருப்பூரில் இப்படியும் ஒரு புருஷன்.. எந்த கணவனும் செய்யக்கூடாத காரியம்.. ஆடிப்போன மனைவி -
Next CM: தமிழகத்தில் ஆட்சியை பிடிப்பது யார் தெரியுமா? சித்தர் கணிப்பை பாருங்க! அப்போ விஜய்? -
நியூசிலாந்து தொடரால் உடைந்துவிட்டேன்.. கிரிக்கெட் கடவுள் செய்த அட்வைஸ்.. நெகிழும் சஞ்சு சாம்சன்! -
எடப்பாடி கோட்டையில் திமுகவுக்கு ஷாக்! அதிமுகவுக்கு தாவிய முன்னாள் எம்.எல்.ஏ! -
படக்குனு 10 கிராமாவது வாங்கிப் போடுங்க! 19,000 சரிவில் தங்க விலை! அள்ளிப் போட இது தான் சரியான நேரம்! -
90, 60, 55, 25: தமிழகத்தின் அடுத்த முதல்வர் இவர்தான்? 2 துணை முதல்வர்கள் யார்? பலே பாஜக.. அப்ப விஜய் -
செவ்வாழை ரகசியம்: 48 நாட்கள் தொடர்ந்து பழத்தை சாப்பிட்டால் உடலில் நடக்கும் அந்த அதிசயம்..! -
வாடகை வீடுகளில் வசிக்கிறீங்களா? வந்தது 'பம்பர்' பரிசு.. மத்திய அரசின் புது வாடகை விதி! நோட் பண்ணுங்க












Click it and Unblock the Notifications