ஜெ.விற்கு அளித்த சிகிக்சை என்ன.. எய்ம்ஸ் குழுவின் அறிக்கையை டெல்லியில் வெளியிட்டது தமிழக அரசு
மறைந்த ஜெயலலிதாவிற்கு எய்ம்ஸ் டாக்டர்கள் கொடுத்த சிகிச்சை குறித்த அறிக்கை டெல்லியில் தமிழக அரசு வெளியிட்டுள்ளது.
டெல்லி: கடந்த டிசம்பர் மாதம் அப்பல்லோ மருத்துவமனையில் மறைந்த ஜெயலலிதாவிற்கு எய்ம்ஸ் டாக்டர்கள் குழு அளித்த சிகிச்சை விவரங்கள் குறித்த அறிக்கையை டெல்லியில் தமிழக அரசு வெளியிட்டுள்ளது.
சென்னை அப்பல்லோ மருத்துவமனையில் செப்டம்பர் 22ம் தேதி முன்னாள் முதல்வர் ஜெயலலிதா காய்ச்சல் மற்றும் நீர் சத்து குறைவு காரணமாக அனுமதிக்கப்பட்டார். தொடர்ந்து 75 நாட்கள் சிகிச்சை பெற்று வந்த அவர் டிசம்பர் 5ஆம் தேதி மரணமடைந்தார்.
இந்த 75 நாட்களில் 5 முறை டெல்லி எய்ம்ஸ் மருத்துவர்கள் ஜெயலலிதாவிற்கு சிகிச்சை அளித்தனர். அப்போது அளிக்கப்பட்ட சிகிச்சை குறித்து எய்ம்ஸ் மருத்துவர்கள் தமிழக அரசிடம் அறிக்கையை தாக்கல் செய்து உள்ளனர்.

ஜெ. மரணத்தில் மர்மம்
ஜெயலலிதாவின் மரணத்தில் மர்மம் இருப்பதாக பலரும் தெரிவித்து வருகின்றனர். குறிப்பாக, அதிமுகவில் சசிகலா தலைமையை ஏற்காமல் போட்டி அதிமுகவை உருவாக்கியுள்ள ஓபிஎஸ் தலைமையிலான அணியினர் கடுமையாக குற்றம் சாட்டி வருகின்றனர்.

லண்டன் டாக்டர் விளக்கம்
இதனையடுத்து, லண்டன் ரிச்சர்ட் தலைமையில், அப்பல்லோ மருத்துவர்கள் செய்தியாளர் சந்திப்பு நடத்தி ஜெயலலிதாவிற்கு அளிக்கப்பட்ட சிகிச்சை குறித்து விளக்கம் அளித்தனர். அப்போது, ஜெயலலிதாவிற்கு சிகிச்சை அளித்த எய்ம்ஸ் மருத்துவர்கள் அறிக்கை தாக்கல் செய்யாதது ஏன் என்ற கேள்வி எழுந்தது.

எய்ம்ஸ் அறிக்கை
இதனையடுத்து, எய்ம்ஸ் மருத்துவர்கள் அறிக்கை தாக்கல் செய்ய வேண்டும் என்று தமிழக அரசு கேட்டுக் கொண்டது. இதனையேற்று டெல்லி எய்ம்ஸ் துணை இயக்குநர் ஸ்ரீநிவாஸ் தமிழக சுகாதாரச் செயலர் ராதாகிருஷ்ணனிடம் ஜெயலலிதா சிகிச்சை குறித்த 5 அறிக்கைகளை ஒப்படைத்தார்.

சிகிச்சை அறிக்கை வெளியீடு
இதனைத் தொடர்ந்து, இன்று தமிழ்நாடு சுகாதாரத் துறை செயலாளர் ராதாகிருஷ்ணன், எய்ம்ஸ் டாக்டர்கள் அளித்த அறிக்கையை டெல்லியில் வெளியிட்டார்.
-
திருச்சி கிழக்கு இடைத்தேர்தல்.. தவெக வேட்பாளராக சிரஞ்சீவி? மேடையில் முதல்வர் விஜய் தந்த செம ஹிண்ட் -
நன்றி மறக்காத விஜய்.. தவெகவின் முதல் ராஜ்யசபா எம்பி யார்? ரேசில் முன்னணியில் ’லெஃப்ட் - ரைட்’ ஹேண்ட் -
“தவெகவுக்கு ஓட்டு போடாத தென்காசி மக்களும் பாதிக்கப்படுகிறோம்”.. நள்ளிரவில் எழுந்த திடீர் போராட்டம்! -
"பச்சை துரோகம்.. வாக்கு அறுவடை முடிந்ததும் ரிசர்வ் வங்கியை காரணம் காட்டுவதா?" தங்கம் தென்னரசு தாக்கு -
திமுகவிற்கு விஜய் சொன்ன 'நோ'.. ஸ்விட்ச் ஆப் ஆன போன்.. மேஜைக்கு வந்த உளவுத்துறை ரிப்போர்ட்! -
SP Velumani: வேலுமணிக்கு வில்லனாக மாறிய முனுசாமி.. பதவிக்கு விழுந்த வேட்டு! -
கொ*யில் முடிந்த பார் டான்ஸ்.. கொதித்துப் போன கோயம்பேடு! யான்சிக்கு இப்படியா சாவு வரனும்! ஷாக்! -
Annamalai New Party LIVE:தனிக் கட்சி தொடங்குகிறார் அண்ணாமலை? பிறந்தநாளன்று வெளியாகும் அப்டேட்? -
விஜய்க்கு பெரிய தலைவலி.. ஒரே நாளில் வீட்டுக்கு போன 5000 ஊழியர்கள் ஓய்வு! ஆட்டம் காணும் அரசு துறைகள் -
நான் பார்த்துகிறேன் நண்பா.. உறுதியாக சொன்ன விஜய்.. அஜித் தாய் மறைந்த இரவு.. நடந்தது என்ன? -
பிளாக் அண்ட் ஒயிட் கோட் சூட் அணிவது இதற்காகத் தான்.. ரகசியத்தை போட்டு உடைத்த விஜய்! -
காலியான ராஜ்யசபா எம்பி பதவி! இன்று வேட்புமனு தாக்கல் தொடக்கம்! தவெகவின் முதல் எம்பி யார்?












Click it and Unblock the Notifications