Get Updates
Get notified of breaking news, exclusive insights, and must-see stories!

ஜெயலலிதா மீதான சொத்துக்குவிப்பு மேல்முறையீடு.. சுப்ரீம்கோர்ட்டில் நாளை மீண்டும் விசாரணை

Subscribe to Oneindia Tamil

டெல்லி: தமிழக முதல்வர் ஜெயலலிதா மீதான சொத்துக்குவிப்பு வழக்கின் மேல்முறையீட்டு விசாரணை நாளை மீண்டும் சுப்ரீம் கோர்ட்டில் நடைபெறுகிறது. கர்நாடக அரசு தரப்பில் வழக்கறிஞர் பி.வி.ஆச்சாரியா தனது வாதத்தை தொடர உள்ளார்.

கர்நாடக ஹைகோர்ட் ஜெயலலிதா உள்ளிட்ட நால்வர் மீதான சொத்துக்குவிப்பு வழக்கை தள்ளுபடி செய்த நிலையில், அதை எதிர்த்து, கர்நாடக அரசு, அன்பழகன் தரப்பு தாக்கல் செய்த அப்பீல் மனு மீதான இறுதிகட்ட விசாரணை சுப்ரீம்கோர்ட்டில் நடைபெற்றுவருகிறது.

Jayalithaa DA case- hearing resumes at SC tomorrow

முதலில் கர்நாடக தரப்பில் துஷ்யந்த் தவே வாதத்தை முன்வைத்தார். இதையடுத்து, கடந்த வியாழக்கிழமை ஆச்சாரியா வாதம் முன் வைத்தார். ஹைகோர்ட் தனது தீர்ப்பில் ஏகப்பட்ட பிழைகள் செய்ததாக தவே வாதிட்ட நிலையில், ஜெயலலிதாவின் பினாமி நிறுவனங்கள் என்ற குற்றச்சாட்டுக்கு உள்ளாகியுள்ள நிறுவனங்கள் பற்றி, ஆச்சாரியா வாதிட்டார்.

வாதத்தை கேட்டறிந்த நீதிபதிகள், மார்ச் 15ம் தேதிக்கு வழக்கை ஒத்தி வைப்பதாக, கடந்த வியாழக்கிழமை அறிவித்திருந்தனர். அதன்பேரில் நாளை மீண்டும் விசாரணை நடக்கிறது. அப்போது ஆச்சாரியா மீண்டும் தனது வாதத்தை முன் வைப்பார்.

More From
Prev
Next
Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+