எல்லையில் பாகிஸ்தான் ராணுவம் மீண்டும் அத்துமீறி தாக்குதல்... இந்திய ராணுவ அதிகாரி பலியால் பதற்றம்
ஸ்ரீநகர் : ஜம்மு காஷ்மீர் மாநிலம் குப்வாரா மாவட்டத்தில் பாகிஸ்தான் ராணுவம் அத்துமீறி நடத்திய தாக்குதலில், இந்திய ராணுவ வீரர் ஒருவர் பலியானார்.
பாகிஸ்தான் ராணுவம் போர்நிறுத்த ஒபபந்தத்தை மீறி எல்லைப்பகுதியில் உள்ள இந்திய நிலைகளை குறி வைத்து தாக்குதல் நடத்துவதும், இதற்கு இந்திய வீரர்கள் பதிலடி கொடுப்பதும் தொடர்ந்து நடைபெறும் நிகழ்வாகிவிட்டது.

இந்நிலையில், நேற்று குப்வாரா மாவட்டத்தில், எல்லைப்பகுதியை ஒட்டியுள்ள நவ்கார் செக்டாரில் இந்திய நிலைகள் மீது பாகிஸ்தான் ராணுவம் திடீரென துப்பாக்கி சூடு நடத்தியது.
இதில், ராணுவத்தின் இளநிலை அதிகாரி ஒருவர் படுகாயம் அடைந்தார். பின்னர் சிறிது நேரத்தில் அவர் இறந்துவிட்டதாக ராணுவ செய்தித் தொடர்பாளர் தெரிவித்தார்.
இந்த தாக்குதலைத் தொடர்ந்து இந்திய படைகள் உஷார்படுத்தப்பட்டுள்ளன. இதனால் அங்கு பதற்றமான சூழ்நிலை நிலவுகிறது.
இந்நிலையில் டெல்லியில் உள்துறை அமைச்சர் ராஜ்நாத் சிங்கை தேசிய பாதுகாப்பு ஆலோசகர் அஜித் தோவல் சந்தித்தார். அப்போது பாகிஸ்தான் ராணுவத்தினர் எல்லையில் தொடர்ந்து அத்துமீறுவது உள்ளிட்டவை குறித்து அவர்கள் அவசர ஆலோசனை நடத்தியதாகக் கூறப்படுகிறது.
கடந்த 23 ஆம் தேதி இந்தியாவுடன் தேசிபாதுகாப்பு ஆலோசகர்கள் மட்டத்திலான பேச்சுவார்த்தையை பாகிஸ்தான் அரசு ரத்து செய்த நிலையில் அந்நாட்டு ராணுவம் மீண்டும் அத்துமீறியுள்ளது.
-
அழகிரி தந்த கிரீன் சிக்னல்.. தவெகவில் இணைகிறார் அழகிரியின் மகள் கயல்விழி.. விஜய் சொன்ன ஒரு வார்த்தை -
ஆதார் கார்டு வைத்திருப்பவர்களுக்கு ஜாக்பாட்.. இலவசமாக புதுப்பிக்க ஒரு வருடம் கால அவகாசம் நீட்டிப்பு! -
224 யூனிட்டுகளுக்கு 200 யூனிட் இலவசம் என்றால் 112 தானே வரனும்.. ஏன் 312 காட்டுகிறது.. விளக்கம் -
5 ஆண்டுக்கு ஒருமுறை சம்பள உயர்வு; ₹69,000 அடிப்படைச் சம்பளம்... மத்திய அரசு போடும் ஸ்வீட் பிளான்! -
ஒரு கூட்டு கிளியாக ஒரு தோப்பு குயிலாக! கோபத்தில் குட்டி சிறுத்தைகள்! வெள்ளைக் கொடியோடி தாய் சிறுத்தை -
சரண்டரான சி.வி.சண்முகம் டீம்.. மீண்டும் இணைகிறது அதிமுக.. எடப்பாடி போட்ட கண்டிஷன்! -
கூண்டோடு காலியாகிறது.. விசிக டாப் தலைகள் மொத்தமாக திமுகவில் ஐக்கியம்? சில்லு சில்லாக சிதறுது! -
கிண்டலுக்குள்ளாகும் தவெக அமைச்சர்கள் பிரஸ் மீட்.. நடிகர் சரத்குமார் தந்த அறிவுரை -
நடிகை ரம்பா வீட்டில் ஏற்பட்ட துயரம்.. "உலகமே வெறுமையாகி விட்டது” என உருக்கமான பதிவு -
கோவை சூலூர் சிறுமியை கொன்றது ஏன்? குற்றவாளி கார்த்தி பரபரப்பு வாக்குமூலம் -
சஞ்சு சாம்சன் மூலமாக சிஎஸ்கே அணிக்குள் நுழைய முயற்சிக்கும் அஸ்வின்.. பின்னணியில் நடப்பது என்ன? -
கூட்டுறவு வங்கிகளில் விவசாயிகள் பெற்ற பயிர்க்கடன் 100 சதவீதம் தள்ளுபடி! யாருக்கெல்லாம் கிடைக்கும்?












Click it and Unblock the Notifications