யூதர்களுக்கு சிறுபான்மை அந்தஸ்து.. அதிரடி முடிவெடுத்த மகாராஷ்டிரா அரசு!
மும்பை: யூத இன மக்களுக்கு மகாராஷ்டிரா அரசு சிறுபான்மை அந்தஸ்து வழங்க முடிவு செய்துள்ளது. முதல்வர் தேவேந்திர பட்னாவிஸ் தலைமையில் இன்று நடைபெற்ற அம்மாநில அமைச்சரவை கூட்டத்தில் இந்த முடிவு எடுக்கப்பட்டுள்ளது.
2011-ம் ஆண்டு மக்கள் தொகை கணக்கெடுப்புபடி இந்தியாவில் யூதர்கள் எண்ணிக்கை 4650. இதில் மகாராஷ்டிராவில் மட்டும் 2466 பேர் வசிக்கிறார்கள். ஆந்திரா மற்றும் வடகிழக்கு மாநிலங்களில் சொற்ப எண்ணிக்கையில் இவர்கள் வாழ்கிறார்கள்.

தங்களை சிறுபான்மையினத்தவர்களாக அறிவிக்க வேண்டும் என்பது மகாராஷ்டிர மாநில யூதர்களின் பல்லாண்டு கோரிக்கையாகும். இக்கோரிக்கையை ஏற்று, அமைச்சரவை இன்று இந்த முடிவை எடுத்துள்ளது. இதன்மூலம், யூத இனத்தை சேர்ந்த மாணவர்களுக்கு கல்வி உதவி தொகை கிடைக்கும், திருமணங்களை எளிதாக பதிவு செய்ய முடியும், கல்வி நிறுவனங்களை அவர்கள் துவங்க முடியும்.
இந்தியாவில் வேறு எந்த மாநிலமும் யூதர்களை சிறுபான்மையினர் என இதுவரை அறிவிக்கவில்லை என்று கூறப்படுகிறது. அமெரிக்காவில் அதிகார மையங்களில் யூதர்கள் இருப்பது குறிப்பிடத்தக்கது.
-
கிழிந்தது இரட்டை இலை.. அறிவாலயத்துக்கு பறக்கும் விராலிமலை விஜயபாஸ்கர்! சேர்ந்ததும் இந்த பொறுப்பா? -
இனி அதிகபட்சமே ஆண்டுக்கு 4 சிலிண்டர் தான்.. எக்ஸ்ட்ரா சிலிண்டருக்கு ரூ.300 அதிகமாம்.. வெளியான தகவல் -
"தவெகவா? அண்ணாமலையா? தனி கட்சியா?"... லாரன்ஸ் அரசியல் என்ட்ரி சஸ்பென்ஸ்.. அந்தணன் சொன்ன சீக்ரெட் -
தலைமை செயலகத்தில் மர நாற்காலிக்கு பதிலாக சொகுசு நாற்காலிக்கு மாறிய விஜய்! விலையை கேட்டால் அதிருதே! -
"திருமணமாகாதவர்கள் உறவு கொள்வது தப்பில்லை! அதை தடுக்க சட்டத்தில் இடமில்லை!" உச்ச நீதிமன்றம் தீர்ப்பு -
வளர்த்த கடா..மார்பில் பாய்ந்ததடா! முதுகில் குத்திய கூட்டணி! மு.க.ஸ்டாலின் எடுத்த மிகப் பெரிய முடிவு! -
அதிமுக எம்எல்ஏக்கள் தகுதி நீக்க நடவடிக்கை.. சபாநாயகருக்கு அப்பாவு எழுப்பிய மூன்று கேள்விகள் -
டிரான்ஸ்பார்மர் முறைகேடு வழக்கு.. செந்தில் பாலாஜி மீது இறுகும் பிடி.. வழக்குப்பதிவு செய்தது சிபிஐ! -
ஆட்சிக்கு வந்த 1 மாதத்திற்குள்.. இன்ஸ்ட்டா முழுக்க தவெக எதிர்ப்பு அலை.. அப்படியே தலைகீழாக இருக்கே! -
முதல்வர் விஜய் ஆட்சி எப்படி இருக்கு? ஒரே வார்த்தையில் பதில் சொன்ன பாடகர் வேடன்.. இதிலும் சர்ச்சையா? -
Maridhas: நள்ளிரவில் யூடியூபர் மாரிதாஸ் ஜாமீனில் விடுதலை.. அவதூறு வழக்கில் நீதிபதி பிறப்பித்த முக்கிய உத்தரவு -
நான் என்ன செஞ்சேன்.. இப்படி விட்டுட்டு போறீங்களே.. மனம் உடைந்த திருமாவளவன்.. விசிகவில் கலக்கம்!












Click it and Unblock the Notifications