For Daily Alerts
Just In
ஜார்க்கண்ட்: போலீஸ் என்கவுண்டரில் 12 நக்சலைட்டுகள் சுட்டுக் கொலை...!
பலாமு, ஜார்க்கண்ட்: ஜார்க்கண்ட் மாநிலம் பலாமு மாவட்டத்தில் இன்று அதிகாலையில் நடந்த போலீஸ் என்கவுண்டரில் 12 நக்சலைட்டுகள் சுட்டுக் கொல்லப்பட்டனர்.
ஒரு ஸ்கார்ப்பியோ காரில், சத்பர்வா காவல் நிலையம் அருகே நக்சலைட்டுகள் சென்று கொண்டிருப்பதாக போலீஸாருக்குத் தகவல் கிடைத்தது. இதையடுத்து போலீஸ் படை அந்தப் பகுதிக்கு விரைந்து சென்றது. பின்னர் மறைவிடத்தில் பதுங்கிக் காத்திருந்தனர். சம்பந்தப்பட்ட ஸ்கார்ப்பியோ கார் வந்தபோது மறைந்திருந்த போலஸீார் அதிரடியாக சுட ஆரம்பித்தனர். பதிலுக்கு நக்சலைட்டுகளும் சுட்டனர்.
இதில் 12 பேர் சுட்டுக் கொல்லப்பட்டனர். யாரேனும் தப்பினரா என்பது தெரியவில்லை.
சம்பந்தப்பட்ட காரிலிருந்து ஏகே 47 உள்ளிட்ட அதி நவீன துப்பாக்கிகளும் பறிமுதல் செய்யப்பட்டன என்று போலீஸார் கூறியுள்ளனர்.
Comments
English summary
12 suspectedf naxalites were killed in a police encounter in Jharkhand this morning.
Story first published: Tuesday, June 9, 2015, 8:10 [IST]