செய்தி தெரியுமா | 12-12-2019 | Morning News | oneindia tamil
ராஞ்சி: ஜார்க்கண்ட் மாநிலத்தில் சட்டசபை தேர்தலுக்கான 3-வது கட்ட வாக்குப் பதிவு காலை முதல் நடைபெற்று வருகிறது. பகல் 1 மணி வரை 45% வாக்குகள் பதிவாகி உள்ளன.
நக்சலைட்டுகள் அச்சுறுத்தல் உள்ள ஜார்க்கண்ட் மாநிலத்தில் சட்டசபை தேர்தல் நடந்து வருகிறது. 3ம் கட்டமாக 17 தொகுதிகளில் வாக்குப்பதிவு இன்று நடக்கிறது.
தலைநகர் ராஞ்சி, ராம்கர், ஹசாரிபாக், கோடேர்மா, சத்ரா, கிரிடி மற்றும் சரிகேலா-கர்சவன் ஆகிய மாவட்டங்களில் இந்த தொகுதிகள் வருகின்றது. வாக்குப்பதிவு காலை 7.00 மணிக்கு தொடங்கியது.
ஆனால் பாதுகாப்பு காரணங்களால், நக்சல் பாதிக்கப்பட்ட 12 தொகுதிகளில், மாலை 3 மணிக்கு வாக்குப்பதிவு நிறைவடைகிறது மீதமுள்ள ராஞ்சி, ஹதியா, காங்கே, ராம்கர் மற்றும் பர்கத்தா ஆகிய ஐந்து தொகுதிகளில் மாலை 5 மணி வரை வாக்குப்பதிவு நடக்கிறது.
Dec 12, 2019, 4:21 pm IST
ராஞ்சி: ஜார்கண்ட் சட்டசபை தேர்தலையொட்டி ராஞ்சியிலுள்ள வாக்குச்சாவடியில், இந்திய கிரிக்கெட் வீரர் தோனி வாக்குப்பதிவு செய்தார்
தேர்தல் நடைபெறும் தொகுதிகளில், மாநில அமைச்சர்கள் சிபி சிங், நீரா யாதவ், ஜார்கண்ட் விகாஷ் மோச்சா தலைவர் பாபு லால் மராண்டி உள்ளிட்ட முக்கிய புள்ளிகள் போட்டியிடுகிறார்கள்
Dec 12, 2019, 5:25 am IST
நக்சலைட் பாதித்த பகுதிகள் பல இருப்பதால், பாதுகாப்பு பலப்படுத்தப்பட்டுள்ளது. துணை ராணுவ படை, மாநில போலீஸ் கூடுதலாக குவிக்கப்பட்டுள்ளனர்.
Dec 12, 2019, 5:25 am IST
ராஞ்சி
பிரதமர் நரேந்திர மோடி, பாஜகவுக்கு ஆதரவாகவும், ராகுல் காந்தி காங்கிரசுக்கு ஆதரவாகவும் தீவிர பிரச்சாரத்தில் ஈடுபட்டிருந்தனர்.
5:25 AM, 12 Dec
ராஞ்சி
பிரதமர் நரேந்திர மோடி, பாஜகவுக்கு ஆதரவாகவும், ராகுல் காந்தி காங்கிரசுக்கு ஆதரவாகவும் தீவிர பிரச்சாரத்தில் ஈடுபட்டிருந்தனர்.
5:25 AM, 12 Dec
நக்சலைட் பாதித்த பகுதிகள் பல இருப்பதால், பாதுகாப்பு பலப்படுத்தப்பட்டுள்ளது. துணை ராணுவ படை, மாநில போலீஸ் கூடுதலாக குவிக்கப்பட்டுள்ளனர்.
5:25 AM, 12 Dec
தேர்தல் நடைபெறும் தொகுதிகளில், மாநில அமைச்சர்கள் சிபி சிங், நீரா யாதவ், ஜார்கண்ட் விகாஷ் மோச்சா தலைவர் பாபு லால் மராண்டி உள்ளிட்ட முக்கிய புள்ளிகள் போட்டியிடுகிறார்கள்
9:31 AM, 12 Dec
17 தொகுதிகளில் காலை முதல் விறுவிறு வாக்குப் பதிவு நடைபெற்று வருகிறது