ஜார்க்கண்ட் 3-வது கட்ட சட்டசபை தேர்தல்.. ஓட்டுப்போட்ட தோனி
Recommended Video
ராஞ்சி: ஜார்க்கண்ட் மாநிலத்தில் சட்டசபை தேர்தலுக்கான 3-வது கட்ட வாக்குப் பதிவு காலை முதல் நடைபெற்று வருகிறது. பகல் 1 மணி வரை 45% வாக்குகள் பதிவாகி உள்ளன.
நக்சலைட்டுகள் அச்சுறுத்தல் உள்ள ஜார்க்கண்ட் மாநிலத்தில் சட்டசபை தேர்தல் நடந்து வருகிறது. 3ம் கட்டமாக 17 தொகுதிகளில் வாக்குப்பதிவு இன்று நடக்கிறது.
தலைநகர் ராஞ்சி, ராம்கர், ஹசாரிபாக், கோடேர்மா, சத்ரா, கிரிடி மற்றும் சரிகேலா-கர்சவன் ஆகிய மாவட்டங்களில் இந்த தொகுதிகள் வருகின்றது. வாக்குப்பதிவு காலை 7.00 மணிக்கு தொடங்கியது.
ஆனால் பாதுகாப்பு காரணங்களால், நக்சல் பாதிக்கப்பட்ட 12 தொகுதிகளில், மாலை 3 மணிக்கு வாக்குப்பதிவு நிறைவடைகிறது மீதமுள்ள ராஞ்சி, ஹதியா, காங்கே, ராம்கர் மற்றும் பர்கத்தா ஆகிய ஐந்து தொகுதிகளில் மாலை 5 மணி வரை வாக்குப்பதிவு நடக்கிறது.
Jharkhand: Mahendra Singh Dhoni leaves after casting his vote at a polling station in Ranchi. #JharkhandAssemblyPolls pic.twitter.com/V8UXJbXn6s
— ANI (@ANI) December 12, 2019
#JharkhandAssemblyElections: People queue up to cast their votes at a polling station in Bokaro during the third phase of voting for assembly elections. pic.twitter.com/5u9mMgl0cI
— ANI (@ANI) December 12, 2019