ஊடக சுதந்திரத்தை முடக்குகிறதா மத்திய அரசின் 'ஃபேக் நியூஸ்' உத்தரவு? பத்திரிகையாளர்கள் எதிர்ப்பு
பொய் செய்தி வெளியிடும் பத்திரிகையாளர்கள் அங்கீகாரம் ரத்து செய்யப்படும் என்று மத்திய அரசு அறிவித்துள்ளது. இதற்கு பத்திரிகையாளர்கள் கடும் கண்டனம் தெரிவித்துள்ளனர். பத்திரிகைகள் மீதான தாக்குதல் என்று
Recommended Video

டெல்லி: பொய் செய்திகள் வெளியிடும் பத்திரிகையாளர்களின் அங்கீகாரம் ரத்து செய்யப்படும் என்று மத்திய அரசு அறிவித்துள்ளதற்கு, மூத்த பத்திரிகையாளர்கள் கடும் கண்டனம் தெரிவித்துள்ளனர். இது பத்திரிகைகள் மற்றும் பத்திரிகையாளர்கள் மீதான தாக்குதல் என்று எதிர்ப்பு தெரிவித்துள்ளனர்.
பல பத்திரிகைகள், டிவி சேனல் உள்ளிட்ட ஊடகங்களில், பொய்யான செய்திகள் வெளிவருவதாகவும், இவ்வாறு பொய்யான செய்திகளை வெளியிடும் நிருபர்களுக்கு அளிக்கப்படும் அரசு அங்கீகாரம் ரத்து செய்யப்படும் என்றும் மத்திய தகவல், ஒலிபரப்புதுறை அமைச்சர் ஸ்மிருதி இரானி நேற்று கூறினார்.

பொய் செய்தி வெளியிடும் நிருபர்கள் குறித்து, பிரஸ் கவுன்சில் மற்றும் தேசிய தொலைக்காட்சி கூட்டமைப்பு ஆகியவை விசாரிக்கும் என்று அவர் கூறினார்.
ஒரு முறை விதி மீறினால் 6 மாத தடை, இரண்டாவது முறை என்றால் 1 ஆண்டு தடை, 3வது முறை விதி மீறினால் நிரந்தரமாக அங்கீகாரம் தடை செய்யப்படும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.
இந்த அறிவிப்புக்கு பல பத்திரிகையாளர் அமைப்புகள், மூத்த பத்திரிகையாளர்கள் கடும் கண்டனம் தெரிவித்துள்ளனர். "இது பத்திரிகையாளர்கள் மற்றும் பத்திரிகைகள் மீதான நேரடி தாக்குதல். இது முன்னாள் பிரதமர் ராஜிவ் காந்தி கொண்டு வந்த அவதூறு தடுப்பு சட்டத்தை போன்றது. இதை எதிர்த்து அனைத்து பத்திரிகையாளர்களும் ஒற்றுமையுடன் போராட வேண்டும்" என்று மூத்த பத்திரிகையாளர் சேகர் குப்தா கூறியுள்ளர்.
பொய் செய்தி எது என்பதை திட்டவட்டமாக தீர்மானிக்க முடியாத சூழலில், செய்தி வெளியிடுவதற்கே இது தடை விதிக்கும் செயல் என பத்திரிகையாளர்கள் கருதுகிறார்கள்.












Click it and Unblock the Notifications