விருப்ப ஓய்வு கேட்டு விண்ணப்பித்துள்ளார் மக்கா மசூதி வழக்கில் தீர்ப்பு வழங்கிய நீதிபதி
ஹைதராபாத்: மக்கா மசூதி வழக்கில் தீர்ப்பு வழங்கிய நீதிபதி ரவீந்தர் ரெட்டியின் ராஜினாமா நிராகரிக்கப்பட்டதை அடுத்து அவர் விருப்ப ஓய்வு கேட்டு விண்ணப்பித்துள்ளார்.
ஹைதராபாத் மக்கா மசூதியில் நடந்த குண்டுவெடிப்பு வழக்கில் சுவாமி அஸிமானந்த் உள்ளிட்ட 5 பேரையும் விடுவித்து என்ஐஏ சிறப்பு நீதிமன்ற நீதிபதி ரவீந்தர் ரெட்டி தீர்ப்பளித்தார்.

கடந்த திங்கட்கிழமை தீர்ப்பு அளித்த உடனே நீதிபதி தனது பதவியை ராஜினாமா செய்வதாக கடிதம் அளித்தார். தனிப்பட்ட காரணங்களுக்காக பதவி விலகுவதாக அவர் ராஜினாமா கடிதத்தில் குறிப்பிட்டிருந்தார்.
அவரின் ராஜினாமா கடிதம் நிராகரிக்கப்பட்டது. தொடர்ந்து பணி செய்யுமாறு அவரை வலியுறுத்தப்பட்டது. இதையடுத்து அவர் நேற்று நீதிமன்றத்திற்கு வந்து வழக்கம் போல் வேலை செய்தார்.
ராஜினாமா நிராகரிக்கப்பட்டதை அடுத்து அவர் விருப்ப ஓய்வில் செல்ல விரும்புவதாகக் கூறி விண்ணப்பித்துள்ளர்.












Click it and Unblock the Notifications