மனித உரிமைகள் ஆணையத் தலைவர் கே.ஜி. பாலகிருஷ்ணன் ஓய்வு! புதிய தலைவராக சதாசிவம்?
டெல்லி: தேசிய மனித உரிமைகள் ஆணையத் தலைவர் பதவியில் இருந்து கே.ஜி. பாலகிருஷ்ணன் ஓய்வு பெற்றார். இதையடுத்து புதிய தலைவராக கேரளா ஆளுநர் சதாசிவம் நியமிக்கப்படலாம் என கூறப்படுகிறது.
நாட்டின் தேசிய மனித உரிமைகள் ஆணையம் 1993-ஆம் ஆண்டு உருவாக்கப்பட்டது. அப்போது முதல் அதன் தலைவர் பதவிக்கு உச்ச நீதிமன்றத்தில் தலைமை நீதிபதியாகப் பணியாற்றி ஓய்வு பெற்றவரை நியமிக்கும் வழக்கம் கடைப்பிடிக்கப்பட்டு வருகிறது.

அந்த வகையில் ரங்கநாத் மிஸ்ரா, வெங்கடாசலையா, எஸ். வர்மா, ஏ.எஸ். ஆனந்த், ராஜேந்திர பாபு ஆகியோர் தேசிய மனித உரிமைகள் ஆணையத்தின் தலைவர்களாக நியமிக்கப்பட்டிருந்தனர்.
இந்த மரபின்படி உச்ச நீதிமன்றத் தலைமை நீதிபதி பதவியில் இருந்து 2010 ஆம் ஆண்டு மே மாதம் ஓய்வு பெற்ற கே.ஜி. பாலகிருஷ்ணன் அதே ஆண்டு ஜூனில் தேசிய மனித உரிமைகள் ஆணையத் தலைவராக நியமிக்கப்பட்டார்.
5 லட்சம் வழக்குகள் விசாரணை
இவரது பதவிக் காலத்தில் 4,93,445 வழக்குகள் தேசிய மனித உரிமைகள் ஆணையத்தால் விசாரிக்கப்பட்டன. அதில், 4,64,079 வழக்குகள் முடிக்கப்பட்டுள்ளன. ஊடகங்களில் வந்த செய்திகளை அடிப்படையாக வைத்து தன்னிச்சையாக சுமார் ஆயிரம் வழக்குகளில் கே.ஜி. பாலகிருஷ்ணன் தீர்ப்பு அளித்துள்ளார். காவல் துறை துப்பாக்கிச்சூடு சம்பவங்கள் தொடர்பான வழக்குகளை விசாரிப்பதில் தேசிய மனித உரிமைகள் ஆணையத்தின் அதிகார வரம்பைத் தெளிவுபடுத்தக் கோரி உச்ச நீதிமன்றத்தில் ஆணையம் சார்பில் முறையீடுகளை முன்வைக்க கே.ஜி. பாலகிருஷ்ணன் பதவிக் காலத்தில் நடவடிக்கை எடுக்கப்பட்டது.
தற்போது பாலகிருஷ்ணனின் ஓய்வைத் தொடர்ந்து ஆணையத்தின் புதிய தலைவராக கேரள ஆளுநராக இருக்கும் ஓய்வு பெற்ற உச்ச நீதிமன்றத் தலைமை நீதிபதி பி. சதாசிவத்தை ஜனாதிபதி விரைவில் நியமிக்கக் கூடும் என மத்திய அரசு வட்டாரங்கள் கூறுகின்றன.
புதிய தலைவர் நியமிக்கப்படும் வரை அப்பொறுப்பை ஆணையத்தின் உறுப்பினரும், நீதிபதியுமான சிரியாக் ஜோசஃப் கவனிப்பார் என்றும் தெரிவிக்கப்பட்டுள்ளது.
-
கோயம்புத்தூர்-க்கு ஓடிவரும் ராகுல் ப்ரீத் சிங்.. ரேஸ் கோர்ஸ் சாலையில் புது ஆரம்பம்! -
பிறந்தநாளன்று புதிய கட்சி அறிவிப்பு? பாஜக மேலிடத்திடம் டைம் கேட்ட அண்ணாமலை.. ரகசிய மூவ்! -
தாய் பத்திரம் தொலைஞ்சிருச்சா? ஆன்லைனில் ஈஸியாக ஒரிஜினலை மீட்க 6 ஆவணங்கள் என்ன? சிம்பிள் ஸ்டெப்ஸ் -
முக்கோணப் போட்டியில் தமிழ்நாடு.. 112 ஐ நெருங்கும் விஜய்? மாஸ் கம்பேக்கில் திமுக.. பதற்றத்தில் அதிமுக -
பனையூர் பாபுவுக்கு ஸ்கெட்ச்! அடுத்து ஆளூர் ஷாநவாஸை நோக்கி குரைக்கிறார்கள்! சிந்தனைச் செல்வன் -
கப்பு முக்கியம் பிகிலு.. விடாபிடியாய் நிற்கும் விஜய்.. ஓசூர்-க்கு ஜாக்பாட்! -
அரசியலுக்கு முழுக்கு.. திமுக பொதுச்செயலாளர் பதவியில் இருந்து விலகும் துரைமுருகன் -
தந்தை இறப்பில் நடந்தது மீண்டும் வேண்டாம்.. தாயார் மறைவில் அஜித் குடும்பம் எடுத்த முடிவு! வருத்தத்தில் ரசிகர்கள் -
தமிழக பள்ளி – கல்லூரி மாணவர்களுக்கு அரசு பஸ்சில் இலவச பயணம்.. அறிவித்தார் போக்குவரத்து அமைச்சர் -
8-வது ஊதியக் குழு அப்டேட்! சாதாரண ஊழியருக்கு 1.5 லட்சம்.. மத்திய அரசு ஊழியர்களுக்கு குஷி -
முதல்வர் விஜய்யை சந்திக்காத மேயர் பிரியா! சுணக்கத்தில் சென்னை மாநகராட்சி.. மோதலா? து.மேயர் விளக்கம் -
திருச்சி-க்கு வரும் தாஜ்.. ஒரே நேரத்தில் 3 மெகா பிராண்ட்.. அதுவும் இந்த ஏரியாவுல!












Click it and Unblock the Notifications