சுப்ரீம் கோர்ட் நீதிபதியாக பதவியேற்றார் பானுமதி... தமிழகத்தைச் சேர்ந்த முதல் பெண் நீதிபதி!
டெல்லி: உச்சநீதிமன்றத்தின் முதல் தமிழ்ப் பெண் நீதிபதி என்ற பெருமையைப் பெற்றுள்ளார் தமிழகத்தைச் சேர்ந்த நீதிபதி பானுமதி. இன்று அவர் உச்சநீதிமன்ற நீதிபதியாக பதவியேற்றுக் கொண்டார்.
அவருக்கு உச்சநீதிமன்ற தலைமை நீதிபதி ஆர்.எம்.லோதா பதவிப்பிரமாணம் செய்து வைத்தார். அவர் தவிர மேலும் 3 நீதிபதிகளும் இன்று உச்சநீதிமன்ற நீதிபதியாக பதவியேற்றனர்.
தமிழகத்தைச் சேர்ந்த பெண் நீதிபதி ஒருவர் உச்சநீதிமன்ற நீதிபதியாவது இதுவே முதல் முறை என்பதால் பானுமதிக்குத் தனிப் பெருமையும் கிடைத்துள்ளது. இதுவரை ஜார்க்கண்ட் மாநில உயர்நீதிமன்ற தலைமை நீதிபதியாக இருந்து வந்தார் பானுமதி.

வரலாற்றுச் சிறப்பு வாய்ந்த தீர்ப்புகள்
தமிழகத்தில் நீதிபதி பானுமதி பணியாற்றிய காலத்தில் பல வரலாற்றுச் சிறப்பு வாய்ந்த தீர்ப்புகளை அளித்து அனைவரையும் தன் பக்கம் திரும்பிப் பார்க்க வைத்தவர் நீதிபதி பானுமதி.

தர்மபுரி
தர்மபுரி மாவட்டம் அரூர்தான் நீதிபதி பானுமதியின் சொந்த ஊராகும். 33 வயதில் மாவட்ட நீதிபதியாக சட்டப் பணியைத் தொடங்கியவர்.

பிரேமானந்தா வழக்கில்
பெரும் பரபரப்பை ஏற்படுத்திய பிரேமானந்தா வழக்கில் அவருக்கு இரட்டை ஆயுள் தண்டனை வழங்கியவர் நீதிபதி பானுமதி. அப்போது அவர் திருச்சி நீதிபதியாக இருந்தார். இந்த வழக்கில் நீதிபதி பானுமதியின் பெயர் பிரபலமானது.

2003 முதல்
கடந்த 2003ம் ஆண்டு சென்னை உயர்நீதிமன்ற நீதிபதியாக உயர்ந்தார். 2013 நவம்பர் 12ம் தேதி ஜார்க்கண்ட் தலைமை நீதிபதியாக மாற்றப்பட்டார்.

7 வருட காலம்
உச்சநீதிமன்ற நீதிபதியாக இவர் 7 வருட காலம் பணியாற்றுவார் என்பது குறிப்பிடத்தக்கது.
பானுமதி தவிர நீதிபதிகள் அபய் மனோகர் சப்ரே, பிரபுல்ல சந்திர பந்த், உதய் உமேஷ் லலித் ஆகியோரும் இன்று உச்சநீதிமன்ற நீதிபதிகளாகப் பதவியேற்றுக் கொண்டனர். இதன் மூலம் உச்சநீதிமன்றத்தின் தற்போதைய நீதிபதிகள் எண்ணிக்கை 30 ஆக உயர்ந்துள்ளது.
-
கோயம்புத்தூர்-க்கு ஓடிவரும் ராகுல் ப்ரீத் சிங்.. ரேஸ் கோர்ஸ் சாலையில் புது ஆரம்பம்! -
பிறந்தநாளன்று புதிய கட்சி அறிவிப்பு? பாஜக மேலிடத்திடம் டைம் கேட்ட அண்ணாமலை.. ரகசிய மூவ்! -
தாய் பத்திரம் தொலைஞ்சிருச்சா? ஆன்லைனில் ஈஸியாக ஒரிஜினலை மீட்க 6 ஆவணங்கள் என்ன? சிம்பிள் ஸ்டெப்ஸ் -
முக்கோணப் போட்டியில் தமிழ்நாடு.. 112 ஐ நெருங்கும் விஜய்? மாஸ் கம்பேக்கில் திமுக.. பதற்றத்தில் அதிமுக -
பனையூர் பாபுவுக்கு ஸ்கெட்ச்! அடுத்து ஆளூர் ஷாநவாஸை நோக்கி குரைக்கிறார்கள்! சிந்தனைச் செல்வன் -
கப்பு முக்கியம் பிகிலு.. விடாபிடியாய் நிற்கும் விஜய்.. ஓசூர்-க்கு ஜாக்பாட்! -
அரசியலுக்கு முழுக்கு.. திமுக பொதுச்செயலாளர் பதவியில் இருந்து விலகும் துரைமுருகன் -
தந்தை இறப்பில் நடந்தது மீண்டும் வேண்டாம்.. தாயார் மறைவில் அஜித் குடும்பம் எடுத்த முடிவு! வருத்தத்தில் ரசிகர்கள் -
தமிழக பள்ளி – கல்லூரி மாணவர்களுக்கு அரசு பஸ்சில் இலவச பயணம்.. அறிவித்தார் போக்குவரத்து அமைச்சர் -
8-வது ஊதியக் குழு அப்டேட்! சாதாரண ஊழியருக்கு 1.5 லட்சம்.. மத்திய அரசு ஊழியர்களுக்கு குஷி -
முதல்வர் விஜய்யை சந்திக்காத மேயர் பிரியா! சுணக்கத்தில் சென்னை மாநகராட்சி.. மோதலா? து.மேயர் விளக்கம் -
திருச்சி-க்கு வரும் தாஜ்.. ஒரே நேரத்தில் 3 மெகா பிராண்ட்.. அதுவும் இந்த ஏரியாவுல!












Click it and Unblock the Notifications