நில மோசடி புகார்: ஹரியாணா அரசிடம் அறிக்கை சமர்ப்பிப்பு.. சிக்கலில் ராபர்ட் வதேரா !
சண்டிகர்: வர்த்தக வளாகங்கள் கட்டுவதற்கு ராபர்ட் வதேராவின் நிறுவனத்துக்கு அனுமதி அளித்ததில் நடந்த முறைகேடுகள் குறித்த தனது அறிக்கையை விசாரணை கமிஷன் தலைவர் திங்ரா ஹரியாணா அரசிடம் சமர்ப்பித்தார்.
காங்கிரஸ் தலைவர் சோனியா காந்தியின் மகள் பிரியங்கா. இவரது கணவர் ராபர்ட் வதேரா. ஹரியாணாவில் பூபிந்தர் சிங் ஹூடா தலைமையிலான ஆட்சியின் போது, ராபர்ட் வதேரா நிறுவனம் மற்றும் சில நிறுவனங்களுக்கு குர்கான் செக்டார் 83 மற்றும் சில இடங்களில் நிலம் ஒதுக்கப்பட்டதில் முறைகேடு நடந்ததாக புகார் எழுந்தது.

பின்னர் ஆட்சிக்கு வந்த பாரதிய ஜனதா கட்சி இது குறித்து விசாரணைக்கு உத்தரவிட்டது. இது அரசியல் பழிவாங்கும் நடவடிக்கை என ராபர்ட் வதேரா கூறினார். இதுகுறித்து விசாரணை நடத்த டெல்லி உயர் நீதிமன்றத்தில் ஓய்வு பெற்ற நீதிபதி எஸ்.என்.திங்ரா தலைமையில் ஹரியாணா அரசு கமிஷன் அமைத்தது.
கடந்த ஆண்டு மே மாதம் அமைக்கப்பட்ட இந்த கமிஷன் வதேராவின் நிறுவனம் மற்றும் பிற தனியார் நிறுவனங்கள் வர்த்தக வளாகங்கள் கட்டுவதற்கு அனுமதி அளிக்கப்பட்டதில் நடந்த முறைகேடுகள் குறித்து தீவிர விசாரணை நடத்தியது. இந்நிலையில், தனது விசாரணை அறிக்கையை ஹரியாணா அரசிடம் நீதிபதி திங்ரா நேற்று சமர்ப்பித்தார்.
அதில், 6 வழக்குகளில் எப்ஐஆர் பதிவு செய்ய வேண்டும் என்று பரிந்துரை செய்துள்ளதாகக் கூறப்படுகிறது. குறிப்பாக குர்கான் செக்டார் 83-ல் வர்த்தக வளாகங்கள் கட்டுவதற்காக நிலம் கையகப்படுத்தியதில் பல்வேறு முறைகேடுகள் நடந்துள்ளதாக தெரிய வந்துள்ளது. இந்த வழக்கில் எப்ஐஆர் பதிவு செய்ய பரிந்துரை செய்யப்பட்டுள்ளதாக தெரிகிறது.
இதுகுறித்து செய்தியாளர்களிடம் பேசிய திங்ரா, நில ஒதுக்கீட்டில் நடந்த பல்வேறு முறைகேடுகள், அதன் பின்னணியில் செயல்பட்டவர்கள் குறித்த விவரங்களை அறிக்கையாக சமர்ப்பித்துள்ளேன். அதுபற்றிய விவரங்களை இப்போது வெளியிட முடியாது. ஹரியாணா அரசு வெளியிடும் போது தெரிய வரும் என்றார். மேலும் இந்த முறைகேடு தொடர்பான 182 பக்க அறிக்கையில் அரசு அதிகாரிகள் மற்றும் தனி நபர்களை பற்றி குறிப்பிட்டுள்ளதாகவும் அவர் கூறினார்.
இதற்கிடையே, ஹரியானாவின் முன்னாள் முதல்வரும், காங்கிரஸ் மூத்த தலைவருமான பூபிந்தர் சிங் ஹூடா, சோனியா காந்தி மருமகன் ராபர்ட் வதேரா ஆகியோருக்கு இந்த மோசடியில் நேரடி தொடர்புள்ளதாக செய்திகள் வெளியாகி உள்ளன. இதனால் இருவருக்கும் நெருக்கடி ஏற்பட்டுள்ளதாக கூறப்படுகிறது.
-
கடைசி பஸ் பிடிக்க போற மாதிரி அவசரப்பட்டது எல்லாம்.. இதுக்குத்தானா? வேட்பாளரை அறிவிக்காத காங்கிரஸ்! -
கன்னியாகுமரியில் கடன் தந்த வங்கிக்கு ட்விஸ்ட் தந்த காங்கிரஸ் பெண் பிரமுகர்.. பாய்ந்த வழக்கு -
இதென்ன லிஸ்ட்.. வேலைக்கு ஆகாது.. தமிழக காங்கிரஸ் வேட்பாளர் பட்டியலை.. விட்டு வீசிய ராகுல் காந்தி -
முடங்கும் துபாய், அபுதாபி! அடியோடு மங்கும் தங்கம் மார்க்கெட்! ஆடிப்போன இந்திய ஜுவல்லரி நிறுவனங்கள் -
மனைவி தனது பெற்றோரிடமிருந்து பெற்ற சொத்தில் கணவருக்கு உரிமை உண்டா? ஐகோர்ட் தீர்ப்பு முழு விவரம் -
இல்லத்தரசி கூப்பன் திட்டத்தில்.. நுணுக்கமான விஷயமே இதுதான்.. டிஆர்பி ராஜா சொன்ன சுவாரசிய தகவல் -
அண்ணாமலை போட்ட அந்த ஒரு கண்டிஷன்.. ஆடிப் போன டெல்லி மேலிடம்.. பிம்ப அரசியல் உடைகிறதா? இனி என்னாகும் -
ஆரம்பமே அலங்கோலம்.. பெரம்பூர் விஜய் பிரச்சாரத்தில் தவெகவினரால் அடுத்தடுத்து அசம்பாவிதம் -
Gold Price Today: தங்கம் விலை அதிரடியாக உயர்ந்தது.. காலையில் சரிந்து மாலையில் எகிறியது! நகை பிரியர்கள் கலக்கம்! -
ஆரணியில் கால் வைத்த மகாலட்சுமி.. 75 வருட ரூல்ஸை உடைத்து திமுக முதல்முறை சாதனை.. அதிரும் திருவண்ணாமலை! -
தவெக விஜய்க்கு சான்ஸே இல்லை.. 3வது இடம்தான்.. ஆனால் அதிலும் பெரிய சறுக்கல்.. சுடசுட வெளியான சர்வே -
தமிழகத்தில் 2010 ல் RI ஆக வேலைக்கு சேர்ந்தவர் 2026ல் எவ்வளவு சம்பளம் வாங்குவார் தெரியுமா?












Click it and Unblock the Notifications