தாய் வீட்டுக்கு துரோகம் செய்த ஜெயலலிதா.. கன்னட அமைப்பினரின் வித்தியாச கூவல்கள்!

Subscribe to Oneindia Tamil

பெங்களூரு: பிறந்த தாய் வீட்டுக்கு ஜெயலலிதா துரோகம் செய்துவிட்டதாக கன்னட அமைப்பினர் ஆர்ப்பாட்டத்தின்போது கோஷம் எழுப்பினர்.

Kannada organization members rally

மேகதாது அணையை விரைவில் கட்ட வேண்டும் என்றும், அதை எதிர்க்கும் தமிழக அரசை எதிர்த்தும், கன்னட அமைப்பினர் பெங்களூருவில் இன்று பேரணி நடத்தினர்.

பெங்களூரு கேஜி ரோடு பகுதியிலுள்ள டவுன்ஹால் முதல் மகாராணிகல்லூரி ரோடு அமைந்துள்ள சுதந்திர பூங்கா வரை இன்று மதியம் கன்னட அமைப்பினர் ஊர்வலம் நடத்தினர்.

கர்நாடக ரக்ஷனாவேதிகே, ஜெய் கர்நாடகா, கன்னட சலுவளி வாட்டாள் கட்சி உள்ளிட்ட பல கன்னட அமைப்புகளை சேர்ந்த நூற்றுக் கணக்கானோர் ஊர்வலத்தில் பங்கேற்றனர்.

அவர்கள் பேரணியில் எழுப்பிய கோஷங்கள் வித்தியாசமானவையாக இருந்தன. அதில் கோஷங்களின் தமிழாக்கம் இவைதான்.

Kannada organization members rally

நமதே, நமதே காவேரி நமதே,

என்ன வேண்டுமென்றாலும் வரட்டும், ஒற்றுமை மட்டும் இருக்கட்டும்,

பிறந்த வீட்டுக்கு துரோகம் (ஜெ.பிறந்த மாநிலம் கர்நாடகம்) செய்த ஜெயலலிதா,

தமிழக முதல்வர் பன்னீர்செல்வம் ஒழிக,

வேண்டும், வேண்டும், மேக்கேதாட்டு வேண்டும்,

வேண்டும், வேண்டும் நியாயம் வேண்டும்,

தமிழக அரசியல்வாதிகள் ஒழிக.

இதுபோன்ற கோஷங்களை அவர்கள் எழுப்பினர். கர்நாடகா, கன்னடம் தொடர்பாக புகழ் பரப்பும் வகையில் வெளியான திரைப்பட பாடல்கள் ஊர்வலத்தில் ஒலிபரப்பப்பட்டன.

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+