மாவோயிஸ்ட்டுகள் பாணியில் கான்பூர் போலீசார் மீது தாக்குதல் நடத்தி படுகொலை செய்த விகாஸ் துபே கேங்
கான்பூர்: மாவோயிஸ்ட்டுகள் பாணியில் கான்பூர் போலீசார் மீது தாதா விகாஸ் துபே கோஷ்டி கொடூரமாக தாக்கி கொலை செய்திருப்பதாக தகவல்கள் தெரிவிக்கின்றன.
Recommended Video
கான்பூரில் கொலை வழக்கு ஒன்றில் தாதா விகாஸ் துபேவை கைது செய்ய போலீசார் சென்றனர். அப்போது போலீசாருக்கும் விகாஸ் துபே கோஷ்டிக்கும் இடையே மோதல் நடைபெற்றது.

இதில் 8 போலீசார் படுகொலை செய்யப்பட்டனர். படுகொலை செய்யப்பட்ட போலீசாரின் உடல்களை பிரேத பரிசோதனை செய்த மருத்துவர்கள் கடும் அதிர்ச்சி அடைந்தனர்.
மிக கொடூரமாக கோடாரி உள்ளிட்ட ஆயுதங்களால் போலீசார் கொல்லப்பட்டுள்ளனர். ஏகே 47ரக துப்பாக்கிகளை போலீசாரிடம் இருந்து பறிமுதல் செய்து கொள்ளை கும்பல் தாக்குதல் நடத்தியிருக்கிறது.
இதன் உச்சமாக மாவோயிஸ்டுகள் எப்படி போலீசாரை சித்ரவதை செய்து கொடூரமாக படுகொலை செய்வார்களோ அதே பாணியில் கான்பூர் கேங்கும் அரங்கேற்றியிருக்கிறது என்கிற பகீர் தகவலையும் வெளியிட்டுள்ளனர்.
30 ஆண்டுகளாக போலீசார் கண்ணில் மண்ணை தூவிக் கொண்டு நிழல் உலக தாதாவாக வலம் வருகிறது விகாஸ் துபே தலைமையிலான கேங் என்பது குறிப்பிடத்தக்கது.












Click it and Unblock the Notifications