ஆடு என்று நினைத்து நாயைத் துரத்திக் கொண்டு ஓடி.. பக்ரீத் நாளன்று ஏமாந்த வாலிபர்!
லக்னோ: ஆடு என நினைத்து நாயை துரத்தி சென்று பக்ரீத் நாளன்று இளைஞர் ஒருவர் ஏமாந்தார்.
கான்பூரை சேர்ந்தவர் அஷ்ரப். இவர் பக்ரீத் என்னும் ஈகைத் திருநாளையொட்டி தன்னிடம் இருந்த 3 ஆடுகளை திங்கள்கிழமை இரவு விற்பதற்காக ஜஜ்மா சுங்கி எனப்படும் ஆடு விற்பனை மார்க்கெட்டுக்கு சென்றார்.
அப்போது அவர் தன்னிடம் இருந்த இரண்டு ஆடுகளை எப்படியோ விற்றுவிட்டார். மூன்றாவது ஆட்டை விற்க யாரேனும் வரமாட்டார்களா என எதிர்பார்த்து காத்திருந்தார்.

ஆட்டை துரத்தி கொண்டு
அப்போது அங்கு வந்த ஒரு நபர் உங்களது ஆடு ஒன்று தப்பி ஓடிவந்து என் பின்னால் நின்று கொண்டிருக்கிறது என்று அஷ்ரப்பிடம் கூறியுள்ளார். இதை உண்மை என்று நம்பிய அஷ்ரப் அவர் தனது ஆட்டை கட்டி வைத்திருந்த இடத்தை பார்க்காமல் அந்த நபர் சொன்ன ஆட்டை துரத்தி கொண்டு ஓடினார்.

குரைத்தது
அந்த ஆட்டின் கழுத்தில் பூக்களால் அலங்காரம் செய்யப்பட்டு கழுத்தில் கட்டியிருந்த கயிறு அஷ்ரப் தனது ஆட்டுக்கு கட்டியதை போல் இருந்தது. இதனால் அந்த ஆட்டை பிடிக்க சென்றபோது அது குரைத்தது. இதனால் திடுக்கிட்ட அஷ்ரப் தனது இடத்துக்கு வந்து பார்த்தார்.

ஆட்டைய போட்டார்
அப்போது இவர் கட்டி வைத்திருந்த இடத்தில் ஆடு இல்லை. இருட்டை தனக்கு சாதகமாக்கிக் கொண்ட அந்த மர்ம நபர் நாயை ஆடு என அஷ்ரப்பை நம்ப வைத்து உண்மையான ஆட்டை ஆட்டைய போட்டது புரிய வந்தது. இதுகுறித்து அங்கிருந்த மக்களிடம் அவர் கூறியுள்ளார்.

வீட்டுக்கு ரிட்டர்ன்
இதை கேட்டு அனைவரும் சிரித்தனர். இதையடுத்து தனது விதியை நொந்து கொண்டு மார்க்கெட்டை விட்டு வீட்டுக்கு சென்றார். இதை பார்க்கும் போது செந்தில் ஒரு படத்தில் ஆட்டு தோல் விற்பவரிடம் ஒரு தோலை வாங்கி அதை நாய்க்கு போட்டு ஆடு என்று கவுண்டமணியிடம் விற்பனை செய்ததுதான் நினைவுக்கு வருகிறது.
-
கருணாநிதி என்ற என் இயற்பெயரை கருணாஸ் என மாற்றினேன்.. அந்த பெயர் தான் மீண்டும் எனக்கு.. : கருணாஸ் -
"ஹார்முஸ் மோதலில்.. மாலுமிகளை இழந்த ஒரே நாடு நாங்கள் தான்.." போருக்கு நடுவே இந்தியா சொன்ன வார்த்தை -
உதயநிதி மகனின் சொத்து, விஜய் மகனுக்கு தந்த கடன்.. கார்த்தி சிதம்பரம் சொன்ன முக்கியமான பாயிண்ட் -
காங்கிரஸ் தலைவர் பதவியில் இருந்து விலகுகிறேன்.. அறிவித்தார் செல்வபெருந்தகை! பின்னணி இதுதான் -
ஆளூர் ஷாநவாஸ் செய்த அயோக்கியத்தனம்.. விசிகவில் சீட் கொடுக்காதது ஏன்? கொந்தளித்த சங்க தமிழன் -
திண்டுக்கல் எஸ்ஐக்கு மனமகிழ் மன்றத்தில் இருந்து வந்த அழைப்பு.. கனவிலும் நினைக்காத சம்பவம் -
சிறகடிக்க ஆசை: விஜயாவை லெப்ட் ரைட் வாங்கிய மீனா.. அண்ணாமலை கொடுத்த ஐடியா! மாஸ் காட்டிய முத்து -
அடுத்தடுத்து அண்ணாமலையை சந்தித்த கோவை அதிமுக வேட்பாளர்கள்.. டெல்லிக்கு வேலுமணி க்ளியர் மெசேஜ் -
பாஜக சிட்டிங் எம்.எல்.ஏவுக்கு சீட் மறுப்பு.. தொகுதி மாறிய 2 MLAக்கள்! வேட்பாளர் பட்டியலில் ட்விஸ்ட்! -
வில்லிவாக்கத்தில் நானே வேட்பாளர் என நினைத்துக் கொள்ளுங்கள்.. நண்பனுக்காக களம் இறங்கிய சபரீசன் பேட்டி -
கிரவுண்ட் ஜீரோ ரிப்போர்ட்.. தரைதட்டிய களப்பணி.. கிரவுண்டில் திணறும் தவெக.. விஜய்க்கு சிம்ம சொப்பனம் -
பாஜக வேட்பாளர் பட்டியல் வந்ததுமே அண்ணாமலை கொடுத்த முதல் ரியாக்ஷன்!












Click it and Unblock the Notifications