For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts
Just In
Oneindia App Download

கட்டிய மனைவியை அடித்துக் கொன்ற கொலைகாரனை கட்டி பிடித்து "கிஸ்" அடித்து பாராட்டிய போலீஸ் அதிகாரி!

Google Oneindia Tamil News

கான்பூர்: கட்டிய மனைவியை அடித்துக் கொலை செய்த கொலைகாரனை கட்டி அணைத்து, முத்தமிட்டு பாராட்டிய போலீஸ் அதிகாரியால் பெரும் பரபரப்பு ஏற்பட்டுள்ளது.

உத்தர பிரதேச மாநிலம், கான்பூரைச் சேர்ந்த தொழிலதிபர் ஒருவரின் மகன் ஷ்யாம் என்பவர். இவருக்கு மற்றொரு பெண்ணுடன் தொடர்பு ஏற்பட்டது. இதனை அவருடைய மனைவி தட்டிக் கேட்ட காரணத்தினால், அவரை அடித்துக் கொலை செய்து விட்டார் ஷ்யாம்.

கடந்த ஜூலை 28 ஆம் தேதி அன்று கொலை செய்யப்பட்ட ஜோதியின் சடலம், ஷ்யாம் தசானியின் காரில் இருந்து கண்டெடுக்கப்பட்டது.

இந்நிலையில் அவருடைய வழக்கை விசாரணை செய்ய நாயக் என்ற காவல்துறை அதிகாரி நியமிக்கப்பட்டிருந்தார். ஷ்யாமிடம் விசாரணை நடத்தினார் நாயக். இந்த விசாரணையின் போது குற்றவாளியான ஷ்யாமை கட்டி அணைத்து, நெற்றியில் முத்தமிட்டு "நல்ல பையன்" என்று காவல்துறை அதிகாரி நாயக் பட்டம் கொடுத்துள்ளார்.

அங்கிருந்த மற்ற காவல்துறையினரில் சிலர் இக்காட்சியை செல்போனில் பதிவு செய்து விட்டனர். இத்தகவல் காவல்துறை ஐஜியான ஆஷுதேஷ் பாண்டேவிடம் சென்றடைந்தது.

இச்செய்தியை அறிந்த அவர், இவ்வழக்கு விசாரணையில் இருந்து நாயக்கை நீக்கினார். மேலும், அவரை எஸ்பி அலுவலகத்திற்கு மாற்றி உத்தரவு பிறப்பித்தார்.

English summary
A senior police official probing the murder of a woman, daughter-in-law of a leading businessman of Uttar Pradesh, was taken off the investigation on Friday after he kissed the main accused, the woman's husband, on the forehead.
 
 
 
உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X