ஜெ. விடுதலையை எதிர்க்கும் அப்பீல் வழக்கில் ஆஜராக கூடுதல் அரசு வழக்கறிஞரை நியமித்தது கர்நாடகா
பெங்களூர்: வருமானத்துக்கு அதிகமாக சொத்து குவித்த வழக்கில் தமிழக முதல்வர் ஜெயலலிதா விடுதலையை எதிர்த்து உச்சநீதிமன்றத்தில் கர்நாடகா அரசு தாக்கல் செய்த மேல்முறையீட்டு மனு மீதான விசாரணையில் ஆஜராக துஷ்யந்த் தவேவை கூடுதல் அரசு வழக்கறிஞராக கர்நாடகா அரசு நியமித்துள்ளது.
1991-96ஆம் ஆண்டு முதல்வராக இருந்த போது வருமானத்துக்கு அதிகமாக ஜெயலலிதா சொத்து குவித்தார் என வழக்கு தொடரப்பட்டது. இவ்வழக்கில் ஜெயலலிதாவுடன் அவரது தோழி சசிகலா மற்றும் இளவரசி, சுதாகரன் ஆகியோரும் சேர்க்கப்பட்டனர்.

இந்த வழக்கை விசாரித்த பெங்களூரு சிறப்பு நீதிமன்ற நீதிபதி குன்ஹா, ஜெயலலிதா உள்ளிட்ட 4 பேருக்கும் 4 ஆண்டுகால சிறைத் தண்டனை விதித்தார். ஜெயலலிதாவுக்கு ரூ100 கோடி அபராதத்தையும் அவர் விதித்தார். இதனால் ஜெயலலிதா முதல்வர் பதவியை இழக்க நேரிட்டது.
இதை எதிர்த்து ஜெயலலிதா உள்ளிட்டோர் கர்நாடகா உயர்நீதிமன்றத்தில் மேல்முறையீடு செய்தனர். இம்மேல்முறையீட்டு மனுவை விசாரித்த கர்நாடகா உயர்நீதிமன்ற தனிபெஞ்ச் நீதிபதி குமாரசாமி, ஜெயலலிதா உள்ளிட்ட 4 பேரையும் விடுதலை செய்தார்.
இதைத் தொடர்ந்து ஜெயலலிதா மீண்டும் முதல்வரானார். பின்னர் ஆர்.கே.நகர் தொகுதியில் போட்டியிட்டு எம்.எல்.ஏ.வானார். இதனிடையே ஜெயலலிதா உள்ளிட்டோரின் விடுதலையை எதிர்த்து உச்சநீதிமன்றத்தில் கர்நாடகா அரசு மேல்முறையீடு செய்தது.
இம்மனுவை விசாரித்த உச்சநீதிமன்றம் இருதரப்பும் தங்களது தரப்பு பதில் மனுக்களைத் தாக்கல் செய்ய உத்தரவிட்டு 8 வார காலத்துக்கு ஒத்திவைத்தது. இருதரப்பும் தங்களது பதில் மனுக்களைத் தாக்கல் செய்துள்ளனர். இம்மேல்முறையீட்டு மனு மீதான விசாரணை வரும் 12-ந் தேதிக்கு வாய்ப்புள்ளதாக கூறப்படுகிறது.
இந்த மேல்முறையீட்டு வழக்கில் கர்நாடகா அரசு சார்பாக மூத்த வழக்கறிஞர் பி.வி. ஆச்சார்யா ஆஜராகிவருகிறார். அவருக்கு உதவியாக கர்நாடக அரசின் கூடுதல் வழக்கறிஞர் ஜோசப் அரிஸ்டாட்டில், உதவி அரசு வழக்கறிஞர் சந்தேஷ் சவுட்டா ஆகியோரும் இருந்து வருகின்றனர்.
இந்நிலையில் இவ்வழக்கில் கூடுதல் அரசு வழக்கறிஞராக துஷ்யந்த் தவேவை நியமிக்க வேண்டும் என்று கர்நாடகா அரசிடம் பி.வி. ஆச்சார்யா கோரியிருந்தார். இதை கர்நாடகா அரசும் ஏற்று டெல்லியை சேர்ந்த மூத்த வழக்கறிஞர் துஷ்யந்த் தவேவை கூடுதல் அரசு வழக்கறிஞராக நியமித்து உத்தரவிட்டுள்ளது.
கர்நாடகா அரசு நியமித்திருக்கும் மூத்த வழக்கறிஞர் துஷ்யந்த் தவே, சென்னை உயர்நீதிமன்றத்தில் இந்திய கிரிக்கெட் கட்டுப்பாட்டு வாரியத்துக்கு எதிராக வழக்கில் சென்னை சூப்பர் கிங்ஸ் அணிக்காக ஆஜரானவர் என்பது குறிப்பிடத்தக்கது.
-
Karnataka Budget 2026 LIVE: கர்நாடகாவில் குழந்தைகள் செல்போன் பயன்படுத்த தடை? சித்தராமையா தகவல் -
பறக்கும் பெங்களூர் மெட்ரோ... டார்கெட் "இதுதான்.." சித்தராமையா சொன்ன மிக முக்கிய தகவல் -
மேகதாது அணை.. உச்சநீதிமன்றத்தில் தமிழகத்தின் மனு தள்ளுபடியை வெற்றி என கொண்டாடிய சித்தராமையா! -
உலக தரத்திற்கு மாறும் பெங்களூர்! உட்கட்டமைப்பு வசதிகளில் பெரிய சேஞ்ச்! வெளியான முக்கிய அறிவிப்பு! -
கர்நாடகாவை தொடர்ந்து.. ஆந்திராவிலும் சிறுவர்கள் சோஷியல் மீடியாக்களை பயன்படுத்த தடை! அதிரடி அறிவிப்பு -
அடுத்த பாண்டிச்சேரியாக மாறும் பெங்களூர்! பீர் விலை அப்படியே குறையுது.. பட்ஜெட்டில் முக்கிய அறிவிப்பு -
“ஒரு சாதாரண வக்கீல்” .. சீண்டிய ஜெயலலிதா.. ப.சிதம்பரம் செய்த சம்பவங்கள்! -
மாமியார்- நாத்தனார் தலையில் முட்டும் மருமகள்கள்.. கர்நாடகாவில் வினோத திருவிழா.. சுவாரசிய பின்னணி -
கொடநாடு கொலை, கொள்ளை வழக்கை இன்னும் முடிக்காமல் இருப்பது ஏன்? சிபிஐக்கு நீதிபதி கேள்வி! -
"அப்படியே ஓடிடுங்க.." தங்கம் அவுட், கேஷ் இன்.! ஆனந்த் சீனிவாசன் சொன்ன மேட்டர் இதுதான் -
ஆரோவில் நிலம் 350 கோடி.. ஆளுநர் ஆர்.என்.ரவி, பெண் ஐஏஎஸ் அதிகாரி மீது பறந்த புகார்.. முழு விவரம் -
2025க்கு முன் ஓய்வு பெற்ற அரசு ஊழியர்களுக்கும் ஜாக்பாட் வருமா? பென்சன் வழக்கில் ஐகோர்ட் நோட்டீஸ்












Click it and Unblock the Notifications