மேகதாது அணை கட்ட அனுமதி வேண்டும்.. பிரதமரை கூட்டாக சந்தித்த கர்நாடக அரசியல் பிரதிநிதிகள்
மேகதாதுவில் அணை கட்ட அனுமதி கோரி கர்நாடக முதல்வர் குமாரசாமி தலைமையில் அம்மாநில அனைத்துக் கட்சிகளின் பிரதிநிதிகள் பிரதமர் மோடியை சந்தித்து உள்ளனர்.
Recommended Video
பெங்களூர்: மேகதாதுவில் அணை கட்ட அனுமதி கோரி கர்நாடக முதல்வர் குமாரசாமி தலைமையில் அம்மாநில அனைத்துக் கட்சிகளின் பிரதிநிதிகள் பிரதமர் மோடியை சந்தித்து உள்ளனர்.
காவிரியில் தற்போதுதான் தண்ணீர் சரியாக வருகிறது. 5 ஆண்டுகளுக்கு பின் காவிரி தண்ணீரால், மேட்டூர் அணை நிரம்பி இருக்கிறது. இதனால் விவசாயிகள் சந்தோசமடைந்து இருக்கிறார்கள்.
இந்த நிலையில், காவிரியின் குறுக்கே மேகதாதுவில் அணைக்கட்டுவது குறித்து தீவிர ஆலோசனை கர்நாடகாவில் நடந்து வருகிறது. இதற்காக கர்நாடக பட்ஜெட்டில் கூட நிதி ஒதுக்கப்பட்டது குறிப்பிடத்தக்கது.
இந்த நிலையில் காவிரியின் குறுக்கே மேகதாதுவில் அணைகட்ட அனுமதிக்க வேண்டும் என்று கர்நாடக முதல்வர் குமாரசாமி பிரதமரிடம் கோரிக்கை வைத்துள்ளார்.
பிரதமரை கர்நாடக முதல்வர் குமாரசாமி நேரில் சந்தித்து கடிதம் அளித்தார். மேகதாது அணைகட்ட அனுமதி வேண்டும் என்று குமாரசாமி கோரிக்கை வைத்துள்ளார்.
அனைத்து கட்சி பிரதிநிதிகளுடன் சென்ற குமாரசாமி கோரிக்கை வைத்துள்ளார். கூட்டாக சென்று கர்நாடக அரசியல் பிரதிநிதிகள் கோரிக்கை வைத்துள்ளனர்.
மேலும் ரூ.1912 கோடி மேகதாது அணைக்கு திட்டம் உள்ளது என்றும் திட்ட வரைவு அறிக்கை ஒன்றை சமர்ப்பித்துள்ளார். இதனால் தமிழக அரசை பேச்சுவார்த்தைக்கு அழைக்க வேண்டும். இரு மாநில உறுப்பினர்களின் பேச்சுவார்த்தைக்கு ஏற்பாடு செய்ய வேண்டும் என்று பிரதமரிடம் கோரிக்கை வைத்துள்ளார்.