காவிரியில் தண்ணீர் திறக்கும் உரிமை எங்களிடமே இருக்க வேண்டும்.. உச்சநீதிமன்றத்தில் கர்நாடகா பிடிவாதம்
காவிரியில் தண்ணீர் திறக்கும் உரிமை எங்களிடமே இருக்க வேண்டும் என்று உச்சநீதிமன்றத்தில் கர்நாடக வழக்கறிஞர்கள் வாதிட்டுள்ளனர்.
Recommended Video

டெல்லி : காவிரி நதி நீர் பங்கீடு தொடர்பான வழக்கில், காவிரியில் தண்ணீர் திறக்கும் உரிமை தங்களிடமே இருக்க வேண்டும் என்று உச்சநீதிமன்றத்தில் கர்நாடக அரசு தனது தரப்பு வாதத்தை முன் வைத்துள்ளது.
காவிரி நதி நீர் தொடர்பான வழக்கில் திட்ட வரைவு அறிக்கையை மத்திய அரசு உச்சநீதிமன்றத்தில் சமர்பித்துள்ள நிலையில், அந்த வழக்கு மீண்டும் இன்று விசாரணைக்கு வந்தது. மேலும், உச்சநீதிமன்றம் வரைவு அறிக்கையில் சொல்லியிருந்த திருத்தங்களையும் மத்திய அரசு செய்துள்ளது.

இந்நிலையில், தங்களது அணையில் இருக்கும் நீர் இருப்பைத் தெரிவிக்க கர்நாடகா மற்றும் கேரள அரசுகள் மறுத்துவிட்டன. மேலும், காவிரி அணையில் நீர் திறந்துவிடும் உரிமை மாநில அரசுக்கே இருக்க வேண்டும் என்று கர்நாடக அரசு சார்பில் வழக்கறிஞர்கள் தங்களது வாதத்தை முன்வைத்தனர்.
இதுதொடர்பாக தமிழக அரசு ஆட்சேபம் செய்ததை உச்சநீதிமன்றம் ஏற்றுக்கொண்டுள்ளது. மேலும், இரு தரப்பு வாதத்தையும் கேட்ட நீதிபதிகள் திருத்தப்பட்ட திட்ட வரைவு மீதான தீர்ப்பு நாளை மாலை வெளியாகும். அப்படி இல்லாவிட்டால் 22, 23ம் தேதிகளில் வெளியாகும் என்று சொல்லி வழக்கைத் தள்ளிவைத்தனர்.
-
தமிழ்நாடு 69% இட ஒதுக்கீடு.. உச்சநீதிமன்றத்தில் இன்று முக்கிய விசாரணை.. விஜய்க்கு பெரிய சவால் -
விஜய் கொஞ்சம் அட்ரஸை மாற்றி அனுப்பி இருந்தால்.. பிரச்சனை சரி ஆகி இருக்கும்! மேகதாது கேசில் சொதப்பல் -
ஒரே ட்வீட்.. உதயநிதி, எடப்பாடி டோட்டல் டேமேஜ்.. காவிரி விவகாரத்தில் மாணிக்கம் தாகூர் நறுக் -
விஜய்க்கு முதல் அக்னி பரீட்சை.. காரணம் வேற யாரும் இல்லை காங்கிரஸ் தான்.. அடுத்து என்ன? -
இனிமேலாவது வீரவசனம் பேசாமல் மாற்றத்தைக் கொடுங்கள் CM விஜய் சார்! அன்பில் மகேஷ் பதிவு -
அவசரப்பட்டு கையெழுத்து போட்டுட்டோமோ? முட்டி மோதும் 3 அதிமுக ’மாஜி’ எம்எல்ஏக்கள்! தவெக கொடுத்த ஆஃபர்! -
ஸ்டாலினின் எச்சரிக்கை.. பதறிப்போய் ஆளை தூக்கிய விஜய்.. பயத்தில் அவசர அவசரமாக வியூகம்.. நடந்தது என்ன? -
மும்மொழி.. மத்திய அரசுக்கு எதிராக அண்ணாமலை முதல் முறையாக கருத்து? -
பிரதமர் மோடியை வணங்கி.. பத்மஸ்ரீ விருது பெற்ற சிலம்ப கலைஞர் பழனிவேல்! தமிழருக்கு பெரிய கவுரவம் -
மாசம் ரூ.10000 கோடி செலவு.. படிச்சு படிச்சு மோடி சொல்ல இதுதான் காரணம்..! -
அண்ணன் வர்றாரு! என்னப்பா ஆரம்பிச்சுருவோமா? அண்ணாமலை ஆரம்பிக்கும் ’பார்ட்டி’.. இதுதான் கொடி, சின்னமா? -
விஜய் செய்த சாணக்கியத்தனம்.. சத்தமில்லாமல் வெளியேற்றப்பட்ட கம்யூனிஸ்ட்கள்! இதை யாரும் கவனிக்கலையே!












Click it and Unblock the Notifications