For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts
Just In
Oneindia App Download

சொத்துக்குவிப்பு வழக்கிலிருந்து ஜெ. பெயரை நீக்குங்கள்.. சுப்ரீம் கோர்ட்டில் கர்நாடகா இன்று மனு

By Veera Kumar
Google Oneindia Tamil News

டெல்லி: உச்சநீதிமன்றத்தில் நடைபெற்று வரும் சொத்து குவிப்பு மேல்முறையீட்டு வழக்கில் இருந்து ஜெயலலிதா பெயரை நீக்குமாறு கர்நாடகா அரசு இன்று மனுதாக்கல் செய்ய உள்ளது.

ஜெயலலிதா மீதான சொத்துகுவிப்பு வழக்கில் கர்நாடக சிறப்பு நீதிமன்றம் அவருக்கும், இந்த வழக்கில் குற்றம் சாட்டப்பட்ட ஜெயலலிதா, சசிகலா, சுதாகரன், இளவரசி ஆகியோருக்கும் 4 வருடங்கள் சிறை தண்டனை விதித்தது.

Karnataka to file petition in SC to delete Jayalalithaa's name from asset case

கர்நாடக சிறப்பு நீதிமன்ற தீர்ப்பிற்கு எதிராக ஜெயலலிதா உள்ளிட்டோர் கர்நாடக உயர்நீதிமன்றத்தில் மேல்முறையீடு செய்தனர். கர்நாடக உயர்நீதிமன்றத்தில் குற்றம்சாட்டப்பட்ட அனைவரையும் விடுதலை செய்து தீர்ப்பு வழங்கியது.

இதனையடுத்து கர்நாடக அரசு உயர்நீதிமன்றத்தின் தீர்ப்புக்கு ஏதிராக உச்சநீதிமன்றத்தில் மேல்முறையீடு செய்தது . மேல்முறையீட்டு வழக்கில் விசாரணை முடிவடைந்துள்ளநிலையில் அடுத்த வாரத்திலேயே தீர்ப்பு வழங்கப்படும் என அறிவிக்கப்பட்டு உள்ளது.

இந்த நிலையில் வழக்கின் முதல் குற்றவாளியான ஜெயலலிதா கடந்த டிசம்பர் மாதம் 5ம் தேதி உயிரிழந்ததால் அவரது பெயரை வழக்கில் இருந்து நீக்குமாறு கர்நாடக அரசு உச்சநீதமன்றத்தில் இன்று மனு தாக்கல் செய்ய உள்ளது.

English summary
Karnataka to file petition in Supreme court to delete Jayalalithaa's name from assets case today.
 
 
 
உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X