காவிரி.. உச்சநீதிமன்ற உத்தரவுக்கு எதிராக கர்நாடகா சீராய்வு மனு
Subscribe to Oneindia Tamil
டெல்லி: அக்டோபர் 1ம் தேதி முதல் 7 நாட்களுக்கு தினமும் 6 ஆயிரம் கன அடி நீரை தமிழகத்திற்கு காவிரியிலிருந்து திறந்துவிட உச்சநீதிமன்றம் கடந்த வெள்ளிக்கிழமை பிறப்பித்த உத்தரவுக்கு எதிராக கர்நாடகா இன்று சீராய்வு மனு தாக்கல் செய்துள்ளது.
கர்நாடகாவில் குடிக்க மட்டுமே தண்ணீர் இருப்பதால் தமிழகத்திற்கு தண்ணீர் திறக்க முடியாத சூழ்நிலை நிலவுவதாக அந்த சீராய்வு மனுவில் கர்நாடகா சுட்டிக் காட்டியுள்ளது.

இதனிடையே, கர்நாடக சட்டசபையின் சிறப்பு ஒருநாள் கூட்டம் இன்று கூடியுள்ளது. அதில் உச்சநீதிமன்ற தீர்ப்பை மதித்து சிறிதளவு தண்ணீரை தமிழகத்திற்கு திறந்துவிட முடிவு செய்யப்படும் என கூறப்படுகிறது.
இதன்மூலம், உச்சநீதிமன்றத்தை திருப்திப்படுத்தியபடி, தங்களது, வாதத்திற்கு வலு சேர்க்க கர்நாடகா முயலும் என கூறப்புடகிறது.












Click it and Unblock the Notifications