ஜெ. வழக்கில் மேல்முறையீடு: கர்நாடகாவுக்கு அதிகரிக்கிறது நெருக்கடி.. 21ம் தேதி சஸ்பென்ஸ் ஓவர்!
பெங்களூர்: ஜெயலலிதா மீதான சொத்துக்குவிப்பு வழக்கில், சுப்ரீம்கோர்ட்டில் மேல்முறையீடு செய்ய சட்ட வல்லுநர்களிடமிருந்து கர்நாடக அரசுக்கு நெருக்கடி அதிகரித்துள்ளது.
சொத்துக்குவிப்பு வழக்கிலிருந்து கடந்த 11ம் தேதி ஜெயலலிதாவை விடுதலை செய்து கர்நாடக ஹைகோர்ட் உத்தரவிட்டது.

தீர்ப்பில் பிழை?
இந்த தீர்ப்பில் கூட்டல் கணக்கில் பிழை இருப்பதாக அரசு சிறப்பு வக்கீல் ஆச்சாரியா பகிரங்கமாக தெரிவித்தார். மேலும், கர்நாடக அரசு இந்த தீர்ப்பை எதிர்த்து சுப்ரீம்கோர்ட்டில் மேல்முறையீடு செய்ய வேண்டும் என்று கடந்த 14ம்தேதி ஆச்சாரியா பரிந்துரை செய்தார்.

அட்வகேட் ஜெனரல்
இந்நிலையில், மூத்த வழக்கறிஞர்களுடன், கர்நாடக அட்வகேட் ஜெனரல் ரவிவர்மகுமார் தீவிர ஆலோசனை நடத்தி வந்தார். இந்த ஆலோசனைக்கு பிறகு, ஜெயலலிதா வழக்கில் சுப்ரீம்கோர்ட்டில் கர்நாடக அப்பீல் செய்வது நல்லது என்ற முடிவுக்கு அவர் வந்துள்ளார். இதையடுத்து, இன்று, கர்நாடக அரசுக்கு தனது பரிந்துரையை அவர் அளித்தார். சில பிழைகள் மற்றும், சாதகமான அம்சங்களை சுட்டிக் காட்டி இந்த வழக்கு மேல்முறையீட்டுக்கு உகந்தது என்று ரவிவர்மகுமார் சிபாரிசு செய்துள்ளார்.

அமைச்சர் ஆலோசனை
ஆச்சாரியா மற்றும் ரவிவர்மகுமார் ஆகியோரின் சிபாரிசுகளால், ஜெயலலிதா வழக்கில் அப்பீல் செய்ய கர்நாடக அரசுக்கு நெருக்கடி அதிகரித்துள்ளது. ரவிவர்மகுமார் சிபாரிசு கிடைத்த சில மணி நேரங்களிலேயே கர்நாடக சட்ட அமைச்சர் ஜெயச்சந்திரா, சட்ட வல்லுநர்களிடம் ஆலோசனை நடத்தினார்.

அமைச்சரவையில் கிளைமேக்ஸ்
இந்த ஆலோசனைகள் மற்றும் பரிந்துரைகளை, வரும் 21ம் தேதி நடைபெறும் கர்நாடக அமைச்சரவை கூட்டத்தின்போது, ஜெயச்சந்திரா முன்வைப்பார். இதற்கு அமைச்சரவையில் பெரும்பாலான அமைச்சர்கள் ஒப்புதல் அளித்தால், அப்பீலுக்கு செல்லும் முடிவு எடுக்கப்படும். அதுகுறித்து அமைச்சரவை கூட்டம் முடிந்ததும் ஜெயச்சந்திரா அறிவிப்பார்.
-
சிம்பிளாக பதவியேற்பு.. கர்நாடகாவில் கவனத்தை ஈர்க்கும் டி.கே.சிவகுமார்! காரணம் இதுதான்! -
இர்ஃபானின் ரூ. 3650 பிரியாணியை வறுத்தெடுத்த யூடியூப்பர்.. ப்ளூ சட்டை மாறனுடன் ஒப்பிட்டு கலாய் -
எல்பிஜி சிலிண்டர் பயன்படுத்துபவர்களுக்கு..நாளை முதல் புதிய கட்டுப்பாடுகள்! PNGக்கு மாற்றம் கட்டாயம்? -
வங்கி கணக்கில் வரும் ரூ.3000.. விஜய் அனுப்பும் ஜூன் மாத தொகை.. 3 திட்டங்களில் கிடைக்கும் பணம் -
கப்பு முக்கியம் பிகிலு.. விடாபிடியாய் நிற்கும் விஜய்.. ஓசூர்-க்கு ஜாக்பாட்! -
இந்தா ஆரம்பிச்சுட்டாங்கல்ல.. திருச்சி இடை தேர்தலில் திமுகவில் சீட் யாருக்கு! ரேசில் அன்பில் - இனிகோ! -
Indoor Plants: வீட்டின் காற்றைச் சுத்திகரித்து ஆக்ஸிஜன் அளவை அதிகரிக்கும் இன்டோர் செடிகள்! -
தேசிய அளவில் பலவீனமடையும் பாஜக எதிர்ப்பு.. காங்கிரஸ் செயலால் திட்டத்தை மாற்றும் திமுக! -
திருச்சி கிழக்கு இடைத்தேர்தல்.. தவெக வேட்பாளராக சிரஞ்சீவி? மேடையில் முதல்வர் விஜய் தந்த செம ஹிண்ட் -
"விஜய்" பெயரை யாரும் சொல்லக் கூடாது.. வார்த்தையைவிட்ட துணை சபாநாயகர்.. பத்திரிகையாளர் சொன்ன பதில்! -
திமுகவை தோற்கடித்த 8 அதிர்ச்சி காரணங்கள்.. ஸ்டாலின் மேஜைக்கு போன இறுதி ரிப்போர்ட்.. உள்ளே ஷாக்! -
தவெகவின் முதல் ராஜ்யசபா எம்.பி யார்? 4 பேரில் ஒருவர் பெயரை 'டிக்' அடிக்க ரெடியாகும் விஜய்!












Click it and Unblock the Notifications