தேசிய கீதம் பாடுகையில் மேடையில் இருந்து கிளம்பிய கர்நாடக ஆளுநர்
பெங்களூர்: ராஜ் பவனில் நடந்த நிகழ்ச்சியில் தேசிய கீதம் பாடுகையில் கர்நாடகா ஆளுநர் வாஜுபாய் வாலா மேடையில் இருந்து நடந்து சென்றது சர்ச்சையை கிளப்பியுள்ளது.
கர்நாடக உயர் நீதிமன்ற நீதிபதியாக ராகவேந்திர சிங் சவுஹானுக்கு அம்மாநில ஆளுநர் வாஜுபாய் வாலா செவ்வாய்க்கிழமை பதவிப்பிரமாணம் செய்து வைத்தார். இந்த நிகழ்ச்சி பெங்களூரில் உள்ள ராஜ் பவனில் நடைபெற்றது. சவுஹானுக்கு பதவிப்பிரமாணம் செய்து வைத்த உடன் நிகழ்ச்சியின் நிறைவாக தேசிய கீதம் பாடப்பட்டது.

அப்போது நிகழ்ச்சியில் கலந்து கொண்ட அனைவரும் எழுந்து நின்று தேசிய கீதத்திற்கு மரியாதை அளித்தனர். ஆனால் ஆளுநர் வாஜுபாய் தேசிய கீதம் பாடிக் கொண்டிருக்கையில் மேடையில் இருந்து கிளம்பிச் சென்றார். இதை பார்த்த அனைவரும் அதிர்ச்சி அடைந்தனர்.
உடனே வாஜுபாயின் உதவியாளர்கள் அவரிடம் தேசிய கீதம் ஓடிக் கொண்டிருப்பதை தெரிவித்ததும் அவர் மீண்டும் வந்து மேடையில் நின்றார். வாஜுபாயின் செயலை பார்த்து மேடையில் இருந்த கர்நாடக உயர் நீதிமன்ற தலைமை நீதிபதி டி.ஹெச். வகேலா, நீதிபதி சவுஹான், தலைமைச் செயலாளர் கௌசிக் முகர்ஜி ஆகியோர் அதிர்ச்சி அடைந்தனர்.
ஆளுநரின் செயல் குறித்து ராஜ் பவன் விளக்கம் அளிக்கவில்லை. ஆளுநர் தேசிய கீதம் பாடுகையில் நடந்து சென்றது டிவி சேனல்களில் ஒளிபரப்பப்பட்டது.
-
ஆள் மட்டுமில்லை.. கட்சியையே தவெகவில் இணைக்கும் புகழேந்தி.. புஸ்ஸி - செங்கோட்டையனுடன் சந்திப்பு -
ரேஷன் கார்டுதாரர்களுக்கு ஹேப்பி நியூஸ்.. ஜூன் 2, 3ல் வீடு தேடி வரும் சர்ப்ரைஸ்.. கலெக்டர் அதிரடி -
பசிக்கு இரண்டு சமோசா.. கல்வி கடன்.. ஐஐடி-யில் தோற்றவர் துபாயில் சரித்திரம் படைத்த இந்திய இளைஞன் -
கோயம்புத்தூர்-க்கு ஓடிவரும் ராகுல் ப்ரீத் சிங்.. ரேஸ் கோர்ஸ் சாலையில் புது ஆரம்பம்! -
பிறந்தநாளன்று புதிய கட்சி அறிவிப்பு? பாஜக மேலிடத்திடம் டைம் கேட்ட அண்ணாமலை.. ரகசிய மூவ்! -
தாய் பத்திரம் தொலைஞ்சிருச்சா? ஆன்லைனில் ஈஸியாக ஒரிஜினலை மீட்க 6 ஆவணங்கள் என்ன? சிம்பிள் ஸ்டெப்ஸ் -
முக்கோணப் போட்டியில் தமிழ்நாடு.. 112 ஐ நெருங்கும் விஜய்? மாஸ் கம்பேக்கில் திமுக.. பதற்றத்தில் அதிமுக -
பனையூர் பாபுவுக்கு ஸ்கெட்ச்! அடுத்து ஆளூர் ஷாநவாஸை நோக்கி குரைக்கிறார்கள்! சிந்தனைச் செல்வன் -
கப்பு முக்கியம் பிகிலு.. விடாபிடியாய் நிற்கும் விஜய்.. ஓசூர்-க்கு ஜாக்பாட்! -
அரசியலுக்கு முழுக்கு.. திமுக பொதுச்செயலாளர் பதவியில் இருந்து விலகும் துரைமுருகன் -
தந்தை இறப்பில் நடந்தது மீண்டும் வேண்டாம்.. தாயார் மறைவில் அஜித் குடும்பம் எடுத்த முடிவு! வருத்தத்தில் ரசிகர்கள் -
தமிழக பள்ளி – கல்லூரி மாணவர்களுக்கு அரசு பஸ்சில் இலவச பயணம்.. அறிவித்தார் போக்குவரத்து அமைச்சர்












Click it and Unblock the Notifications