இதய அறுவை சிகிச்சை செய்த 3 வயது சிறுமியை பலாத்காரம் செய்த 15வயது சிறுவன்

Subscribe to Oneindia Tamil

Karnataka gram panchayat member's son raped a 3 year old girl
பெங்களூர்: பெங்களூர் அருகே 3வயது சிறுமி பலாத்காரத்திற்கு உட்படுத்தப்பட்டுள்ள சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

பெங்களூரிலுள்ள முன்னணி பள்ளியொன்றில் ஆறு வயது மாணவி, பலாத்காரம் செய்யப்பட்ட சம்பவம் நடந்த காயம் மக்கள் மனதில் இன்னும் ஆறவில்லை. இந்நிலையில் பெங்களூர் அடுத்த கனகபுரா தாலுகா, தலகுப்பே கிராமத்தில் 3வயது சிறுமி பலாத்காரம் செய்யப்பட்டுள்ளார்.

பக்கத்து வீட்டில் வசிக்கும், அக் கிராமத்தின் பஞ்சாயத்து உறுப்பினர் ஒருவரின் 15வயது மகன் சிறுமியை பலாத்காரம் செய்ததாக கூறப்படுகிறது. சிறுமியின் பெற்றோர் வெளியே சென்றிருந்த நேரத்தில் வீடுபுகுந்த சிறுவன் இந்த துர்செயலில் ஈடுபட்டுள்ளான்.

சிறுவன் வீட்டில் இருந்தபோது, சிறுமியின் பெற்றோர் திடீரென வீடு திரும்பியுள்ளனர். எதற்காக இங்கு வந்தாய் என்று கேட்டதற்கு, சிறுமி சிறுநீர் கழிக்க உதவி செய்ய வந்ததாக கூறிவிட்டு சென்றுள்ளான்.

ஆனால் சிறுமி தொடர்ந்து அழுது கொண்டிருந்ததால் மருத்துவமனையில் அவளது பெற்றோர் காண்பித்தபோதுதான் பலாத்காரம் நடந்துள்ளது தெரியவந்தது. இச்சிறுமி ஏற்கனவே இதய அறுவை சிகிச்சை செய்யப்பட்டவளாகும். எனவே இந்த சம்பவத்தால், சிறுமி நிலைமை கவலைக்கிடமாகியுள்ளது.

மேல் சிகிச்சைக்காக பெங்களூர் செயின்ட் ஜான்ஸ் மருத்துவமனையில் சேர்க்கப்பட்டுள்ளாள். இதுகுறித்து போலீசார் வழக்குப்பதிவு செய்து தலைமறைவான பஞ்சாயத்து தலைவர் மகனை தேடி வருகிறார்கள்.

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+