லோக்-ஆயுக்தா நீதிபதியை பதவி நீக்கம் செய்ய சிறப்பு சட்டசபை கூட்டம்: கர்நாடக அரசு அதிரடி முடிவு
பெங்களூர்: கர்நாடக லோக்ஆயுக்தா நீதிபதி பாஸ்கர் ராவ் மகன் மீதான ஊழல் புகாரை தொடர்ந்து அவரை பதவியை விட்டு தூக்க மாநில அரசு சிறப்பு சட்டப்பேரவை கூட்டத்தை கூட்ட திட்டமிட்டுள்ளது.
ஊழல் புகாரில் சிக்கியோர்களிடம், லஞ்சம் வாங்கிக்கொண்டு லோக்ஆயுக்தா ரெய்டு நடத்தாமல் தடுப்பதாக அந்த அமைப்பின் நீதிபதியான பாஸ்கர் ராவ் மகன், அஸ்வின் ராவ் மீது ஊழல் புகார் எழுந்தது. இதுகுறித்த பல கட்ட விசாரணைகளில் புகாரில் உண்மை இருப்பது தெரியவந்தது.
எனவே பாஸ்கர் ராவை பதவி விலக கோரியும், அல்லது மாநில அரசே அவரது பதவியை பறிக்க கோரியும் எதிர்க்கட்சிகள் போராட்டம் நடத்தின.

ஏற்கனவே இருந்த சட்டத்தில், லோக்ஆயுக்தா நீதிபதி பதவியை பறிக்க இடமில்லை. எனவே, கடந்த மாதம், கர்நாடக லோக்ஆயுக்தா திருத்த சட்டம்-2015 என்ற பெயரிலான சட்டத்திருத்தத்தை பேரவையில் நிறைவேற்றியது ஆளும் காங்கிரஸ் அரசு. இதன்மூலம், பேரவையில் 3ல் 2 பங்கு உறுப்பினர் ஆதரவு இருந்தால், லோக்ஆயுக்தா நீதிபதி பதவியை பறிக்க முடியும்.
எனவே, அடுத்த மாதம், சிறப்பு சட்டசபை கூட்டத்தை கூட்டி, பாஸ்கர் ராவ் பதவியை பறிக்க மாநில அரசு திட்டமிட்டுள்ளது. தற்போது பாஸ்கர் ராவ் விடுப்பில் உள்ளார். இம்மாதம் 31ம் தேதிவரை அவர் விடுப்பில் சென்றுள்ளார். பணிக்கு திரும்பியதும் அவரே ராஜினாமா செய்வார் என்று எதிர்பார்க்கப்படுகிறது. அல்லது அரசு சிறப்பு பேரவை கூட்டம் நடத்தி பதவியை பறித்து நாட்டுக்கு முன்மாதிரியான நடவடிக்கையை எடுக்கும்.
-
100 விஜய் வந்தாலும் மேகதாது அணையை தடுக்க முடியாது.. சவால் விட்ட கர்நாடகா காங்கிரஸ் எம்எல்ஏ -
"தமிழகம் என்ன வேண்டுமானாலும் செய்து கொள்ளட்டும்!" மேகதாது விவகாரத்தில்.. வாயை விட்ட டிகே சிவக்குமார் -
டி.கே.சிவக்குமார் Vs சித்தராமையா.. சர்ப்ரைஸ் என்ட்ரியாக வரும் கார்கே.. கர்நாடகாவில் அரசியல் சுனாமி! -
மகளிர் உரிமைத் தொகை ரூ.2500 இருக்கட்டும், புதிய பயனாளிகளுக்கு அடுத்த விண்ணப்பம் எப்போது -
224 யூனிட்டுகளுக்கு 200 யூனிட் இலவசம் என்றால் 112 தானே வரனும்.. ஏன் 312 காட்டுகிறது.. விளக்கம் -
ஒரு கூட்டு கிளியாக ஒரு தோப்பு குயிலாக! கோபத்தில் குட்டி சிறுத்தைகள்! வெள்ளைக் கொடியோடி தாய் சிறுத்தை -
சரண்டரான சி.வி.சண்முகம் டீம்.. மீண்டும் இணைகிறது அதிமுக.. எடப்பாடி போட்ட கண்டிஷன்! -
கூண்டோடு காலியாகிறது.. விசிக டாப் தலைகள் மொத்தமாக திமுகவில் ஐக்கியம்? சில்லு சில்லாக சிதறுது! -
கிண்டலுக்குள்ளாகும் தவெக அமைச்சர்கள் பிரஸ் மீட்.. நடிகர் சரத்குமார் தந்த அறிவுரை -
நடிகை ரம்பா வீட்டில் ஏற்பட்ட துயரம்.. "உலகமே வெறுமையாகி விட்டது” என உருக்கமான பதிவு -
கோவை சூலூர் சிறுமியை கொன்றது ஏன்? குற்றவாளி கார்த்தி பரபரப்பு வாக்குமூலம் -
சஞ்சு சாம்சன் மூலமாக சிஎஸ்கே அணிக்குள் நுழைய முயற்சிக்கும் அஸ்வின்.. பின்னணியில் நடப்பது என்ன?












Click it and Unblock the Notifications