கர்நாடகாவில் 2 கழுதைகளுக்கு விருது வழங்கிய வாட்டாள் நாகராஜ்
பெங்களூர்: கர்நாடகாவில் 2 கழுதைகளின் கடின உழைப்பு, நேர்மை ஆகியவற்றை பாராட்டி அவைகளுக்கு உயரிய விருதான விருது வழங்கி கௌரவிக்கப்பட்டுள்ளது.
சாம்ராஜ்நகர் முன்னாள் எம்.எல்.ஏ.வான கன்னட சலுவாலி வாட்டாள் பக்ஷா தலைவர் வாட்டாள் நாகராஜ் இரண்டு கழுதைகளின் கடின உழைப்பு, நேர்மை ஆகியவற்றை பாராட்டி அவற்றுக்கு ராஜ்யோத்சவா விருது வழங்கி கௌரவித்துள்ளார்.

பெங்களூரில் நடந்த விழாவில் கழுதைகளுக்கு விருது வழங்கப்பட்டுள்ளது. குளிப்பாட்டிய இரண்டு கழுதைகளுக்கு நாகராஜ் பொன்னாடை அணிவித்து ரோஜா இதழ்களை அவற்றின் மீது தூவினார்.
இது குறித்து அவர் கூறுகையில்,
கழுதைகள், நாய்கள், எருமைமாடுகள், பசுக்கள் ஆகியவை மனிதர்களை விட நேர்மையாகவும், ஒழுக்கமாகவும் இருப்பதுடன் கடினமாக உழைக்கின்றன. அதனால் அவற்றுக்கு விருது வழங்கி கௌரவிப்பது என்று முடிவு செய்துள்ளேன்.
ஒவ்வொறு மாதமும் விலங்குகளை கௌரவிக்க உள்ளேன். பசுக்களை வணங்குவதும், வீட்டில் உள்ள விலங்குகளின் மீது அக்கறை காட்டுவதும் நம் கலாச்சாரம் என்றார்.












Click it and Unblock the Notifications