தமிழகத்துக்கு "அம்மா".. கர்நாடகத்திற்கு "அன்னா"... 5 ரூபாய்க்கு இட்லி, வடை வாங்கி சாப்பிடலாம்!
பெங்களூரு: தமிழகத்தில் வெற்றிகரமாக அமல்படுத்தப்பட்டு வரும் அம்மா உணவகத்தைப் போல கர்நாடகத்தில் மலிவு விலை "அன்னா" திட்டத்தை அறிவித்துள்ளது அந்த மாநில அரசு.
அன்னா என்றால் கன்னடத்தில் சாப்பாடு என்று அர்த்தம்.
ஏழைகளுக்கும், தொழிலாளர்களுக்கும் மலிவு விலையில் உணவு அளிக்கும் வகையில் முதலில் சென்னையில் அம்மா உணவகத்தை சென்னை மாநகராட்சி தொடங்கியது. அப்போது முதல்வராக இருந்த ஜெயலலிதா இதைத் தொடங்கி வைத்தார். இங்கு மலிவு விலையில் பொங்கல், இட்லி, வடை, லெமன் ரைஸ், தயிர் சாதம், சப்பாத்தி, பூரி உள்ளிட்ட பல வகையான உணவுகள் வழங்கப்படுகின்றன.
இந்தத் திட்டம் வெற்றி பெற்றதைத் தொடர்ந்து தமிழகம் முழுவதும் அனைத்து மாநகராட்சிகளிலும் இது விரிவுபடுத்தப்பட்டு அமோகமாக நடந்து வருகிறது. இந்தத் திட்டம் பிற மாநிலங்களையும் ஈர்த்துள்ளது. பல மாநிலங்களைச் சேர்ந்த அதிகாரிகள் அம்மா உணவகங்களுக்கு வந்து நேரில் பார்த்துச் செல்கின்றனர்.

கர்நாடகத்தில் அன்னா
இந்த நிலையில் அம்மா உணவகத்தைக் காப்பி அடித்து தற்போது கர்நாடகத்தில் அன்னா திட்டத்தை அந்த மாநில அரசு அமல்படுத்தவுள்ளது.

5 ரூபாய்க்கு உப்புமா, சாதம், இட்லி
அந்த வகையில், இந்த அன்னா உணவகத் திட்டத்தின் கீழ் 5 ரூபாய்க்கு இட்லி, உப்புமா, சாதம் போன்றவை வழங்கப்படும்.

சி.எம்.இப்ராகிம்
இந்தத் திட்டத்தை மாநில திட்டக் கமிஷன் துணைத் தலைவர் சி.எம்.இப்ராகிம் முன்வைத்துள்ளார். செய்தியாளர்களிடம் இந்த அன்னா திட்டம் குறித்தும் இப்ராகிம் விவரித்தார்.

வருடத்திற்கு ரூ. 60 கோடி செலவு
இந்தத் திட்டத்திற்காக மாநில அரசு வருடத்திற்கு ரூ. 60 கோடி செலவிடவுள்ளது என்று கூறிய இப்ராகிம், இந்தத் திட்டத்தின் கீழ் வழங்கப்படும் உணவு வகைகள் குறித்தும் பட்டியலிட்டார்.

என்னென்ன தருவார்கள்...!
5 ரூபாய் விலைக்கு உப்புமா, சித்திரான்னா (அதாவது எலுமிச்சம் சாதம்), புளியோதரை, தயிர் சாதம் ஆகியவை விற்பனை செய்யப்படும். இந்த மலிவு விலை உணவகங்கள் காலை 6 மணி முதல் இரவு 11 மணி வரை செயல்படும்.

பட்ஜெட்டில் சேர்க்கப்படும்
இந்த அன்னா உணவகத் திட்டத்தை இந்த மாதம் தாக்கல் செய்யப்படும் பட்ஜெட்டிலேயே சேர்க்க அரசு நடவடிக்கை எடுக்கும் என்றும் இப்ராகி்ம் தெரிவித்தார்.

எங்கெங்கு உணவகம்
முதலில் தலைநகர் பெங்களூருவில் 20 உணவகங்கள் அமைக்கப்படும். தொடர்ந்து மங்களூரு, மைசூரு, ஹூப்பள்ளி (ஹூப்ளி) - தார்வாட் மற்றும் கலபரகி ஆகிய நகரங்களில் இந்த உணவகங்கள் திறக்கப்படுமாம்.

மருத்துவமனை அருகே
மருத்துவமனைகள், அரசுப் பள்ளிகள், பஸ் நிலையங்களுக்கு அருகே இந்த உணவகங்கள் திறக்கப்படும். இந்த உணவகங்கள் மூலமாக 2000 பேருக்கு வேலைவாய்ப்பும் கிடைக்கும் என்றும் இப்ராகிம் தெரிவித்தார்.
-
அவ்வளவு தூரம் சொன்ன டெல்லி மேலிடம்.. "முடியவே முடியாது.." திட்டவட்டமாக மறுத்த சித்தராமையா.. ட்விஸ்ட் -
100 எம்எல்ஏக்கள் ஆதரவு இருந்தும் முதல்வர் பதவியை விட்டு கொடுத்த சித்தராமையா.. ஏன் தெரியுமா? பின்னணி! -
"முதல்வர் பதவி ராஜினாமா".. அறிவித்ததுமே சித்தராமையா காலில் விழுந்து ஆசி வாங்கிய டிகே சிவக்குமார் -
கர்நாடக அரசியலில் அதிரடி.. 1 முதல்வர், 4 துணை முதலமைச்சர்கள்.. டிகே.சிவக்குமார் மாஸ்டர் பிளான்! -
டி.கே.சிவகுமாருக்கு செக்! கடைசி நேரத்தில் சாதி வாரிக் கணக்கெடுப்பு அறிக்கையை பெற்ற சித்தராமையா! -
பிரியங்காவால் கர்நாடகா முதல்வர் பதவியை இழக்கும் சித்தராமையா.. டிகே சிவக்குமார் வென்றது இப்படித்தான் -
கர்நாடகா முதல்வராகிறார் டிகே சிவக்குமார்.. ஜூன் 3ம் தேதி பதவியேற்பு.. சித்தராமையா மகனுக்கு ‘ஜாக்பாட்' -
கர்நாடகா முதல்வர் பதவியில் இருந்து விடைபெற்ற சித்தராமையா.. ராஜினாமா செய்த பின் உருக்கமான பதிவு -
கடைசி நேரத்தில் ஆளுநர் மிஸ்ஸிங்.. ராஜினாமா கடிதத்தோடு சித்தராமையா வெயிட்டிங்! கர்நாடகாவில் ட்விஸ்ட் -
கர்நாடகா முதல்வர் பதவியிலிருந்து சித்தராமையா ராஜினாமா? டி.கே.சிவகுமார் புதிய முதல்வராகிறார்! -
மேகதாது அணை விவகாரம்: தேசிய பசுமை தீர்ப்பாயத்தை நாடிய தமிழக அரசு! அடுத்த கட்ட 'மூவ்’ என்ன? -
பெங்களூர், ஹைதராபாத்-யிடம் தோற்றுப்போகும் சென்னை.. தலையெழுத்தை மாற்றுவாரா விஜய்!












Click it and Unblock the Notifications