இருமுறை வெளிநாடு போகவாவது அனுமதியுங்கள்.. உச்சநீதிமன்றத்தில் கார்த்தி சிதம்பரம் கோரிக்கை
உச்சநீதிமன்றத்தை அணுகியுள்ள கார்த்தி சிதம்பரம், நவம்பர் மற்றும் டிசம்பரில் இருமுறை வெளிநாடு செல்ல உள்ளதால் அதற்கு அனுமதி தர கோரியுள்ளார்.
டெல்லி: வரும் நவம்பர் மற்றும் டிசம்பரில் வெளிநாடு செல்லவிருப்பதால் அதற்கு அனுமதி வழங்குமாறு, கார்த்தி சிதம்பரம் உச்சநீதிமன்றத்தை நாடியுள்ளார்.
ஐஎன்எக்ஸ் மீடியாவுக்கு 2007ம் ஆண்டு அனுமதி வழங்கியதில் முறைகேடு நடந்துள்ளதாக எழுந்த குற்றச்சாட்டின்பேரில் சிபிஐ மற்றும் அமலாக்கத்துறையின் விசாரணை வளையத்திற்குள் கார்த்தி சிதம்பரம் கொண்டுவரப்பட்டுள்ளார்.

கார்த்தி சிதம்பரம் வெளிநாடு தப்பிச் செல்லாமல் இருக்க அவருக்கு எதிராக சிபிஐ லுக்அவுட் நோட்டீஸ் விடுத்துள்ளது. இதனால் அவர் வெளிநாடுகளுக்கு செல்ல முடியாத நிலை உள்ளது.
இதுதொடர்பாக கார்த்தி சிதம்பரம் உச்சநீதிமன்றத்தில் வழக்கு தொடர்ந்து, தனக்கு எதிரான லுக்அவுட் நோட்டீசை ரத்து செய்ய கோரினார். ஆனால் நீதிமன்றம் மறுத்துவிட்டது.
இந்த நிலையில், மீண்டும் உச்சநீதிமன்றத்தை அணுகியுள்ள கார்த்தி சிதம்பரம், நவம்பர் மற்றும் டிசம்பரில் இருமுறை வெளிநாடு செல்ல உள்ளதால் அதற்கு அனுமதி தர கோரியுள்ளார். இதுதொடர்பாக தாக்கல் செய்துள்ள பிரமாண பத்திரத்தில், கார்த்தி கூறுகையில், நவம்பர் 10ம் தேதி, கேம்ப்ரிட்ஜ் பல்கலைக்கழகத்தில், உரை நிகழ்த்த உள்ளதாகவும், டிசம்பர் மாதம் தனது மகள் படிப்பு அட்மிஷன் தொடர்பாக கேம்ப்ரிட்ஜ் செல்ல வேண்டும் என்றும் தெரிவித்துள்ளார்.
மற்றொரு பிரமாண பத்திரத்தில், அமலாக்கத்துறையின் விசாரணை முறை குறித்து புகார் தெரிவித்துள்ளார்.
-
1700 ஏக்கர் சிப்காட் பூங்கா ஒரு சர்வதேச விமான நிலையத்திற்கு இணையான வளர்ச்சியை கொடுக்குமா?- ஒரு அலசல் -
யூ-டர்ன் அடிக்கும் விஜய்.. டெல்லி-க்கு மீண்டும் பயணம்.. சொன்னது யார் தெரியுமா? -
பெரிய திமிங்கலம் வருதே.. தவெகவில் ஐக்கியமாகும் அண்ணாமலை? மோடி அரசை விமர்சிப்பது ‘இதனால்’ தானா? -
அமித் ஷா நோ சொன்னதால்.. கடைசி வரை ராகுல், சோனியாவை சந்திக்காமல் திரும்பிய விஜய்.. என்ன நடந்தது? -
ஆபாசம்.. ஆபாசம்.. யூடியூபர்கள் கிருஷ் ஐஷ்வர்யா மீது கோவை சைபர் க்ரைம் போலீஸில் புகார் -
கிளாம்பாக்கத்திற்கு பதில் கோயம்பேடு... ஆம்னி பஸ் போல் அரசு பஸ்சும் புறப்படுமா? அமைச்சர் தந்த பதில் -
கிரிக்கெட் கடவுளே சொல்லிட்டாரு.. வைபவ் சூர்யவன்ஷியின் பேட்டிங் ஸ்டைலை புகழ்ந்த சச்சின் டெண்டுல்கர்! -
சென்னையில் நாளை மாலை ‘GenZ DMK’ பிரம்மாண்ட நிகழ்ச்சி.. களமிறங்கும் திமுக உணர்வுள்ள இளைஞர்கள்! -
மரண ஓலம்.. 5 லட்சம் பேர் உயிரிழப்பு.. எங்கு திரும்பினாலும் கதறும் பொதுமக்கள்.. நிலைமை மோசம் -
தமிழ்த்தாய் வாழ்த்து விவகாரத்தை கையில் எடுத்த விஜய்.. உள்துறை அமைச்சகத்திடம் சொல்லுங்க.. விஜய் வைத்த கோரிக்கை! -
தவெகவில் இணையும் 2 அதிமுக எம்எல்ஏக்கள்! ஒருவர் சி.வி.சண்முகம்! இன்னொருவர்.. வெல்லமண்டி நடராஜன் தகவல் -
அதிமுகவில் அடுத்த விக்கெட்? சி.வி.சண்முகத்துக்கு இப்படியொரு லட்டு சான்ஸ்? போட்டு தாக்குதே தவெக












Click it and Unblock the Notifications