கச்சத்தீவை மீட்கக்கோரி கருணாநிதி வழக்கு: உச்சநீதிமன்றம் ஒத்திவைப்பு

Subscribe to Oneindia Tamil

டெல்லி: கச்சத்தீவை மீட்கக் கோரி திமுக தலைவர் கருணாநிதி தொடர்ந்த வழக்கு 2 வாரத்துக்கு ஒத்திவைக்கப்பட்டுள்ளது.

மத்திய, மாநில அரசுகளின் மனுவுக்கு பதில் தர கருணாநிதி தரப்பில் அவகாசம் கோரப்பட்டது. இதையடுத்து உச்சநீதிமன்றம் விசாரணையை ஒத்திவைத்தது.

கச்சத்தீவை மீட்க கோரி தி.மு.க. தலைவர் கருணாநிதி, உச்சநீதிமன்றத்தில் வழக்கு தொடர்ந்து இருந்தார். அதில், கச்சத்தீவை இலங்கைக்கு வழங்கும் வகையில் 1974ம் ஆண்டு, இந்தியா-இலங்கை இடையே ஒப்பந்தம் கையெழுத்தானது.

Katchatheevu issue: SC grants time to Karunanidhi to respond

இந்த ஒப்பந்தத்தால் தமிழக மீனவர்களின் வாழ்வாதாரம் பாதிக்கப்படுவதால் கச்சத்தீவை இலங்கையிடமிருந்து மீட்க வேண்டும் என்ற கோரிக்கை, தமிழகத்தில் பல ஆண்டுகாக எழுப்பப்பட்டு வருகிறது.

இதனிடையே கச்சத்தீவு ஒப்பந்தத்தை ரத்து செய்து, அப்பகுதியை இலங்கையிடமிருந்து மீட்கக் கோரியிருந்தார். இன்று அந்த வழக்கு விசாரணைக்கு வந்தது.

அப்போது மத்திய, மாநில அரசுகளின் மனுக்களுக்கு விளக்கம் அளிக்க மனுதாரர் தரப்பில் அவகாசம் கேட்கப்பட்டது.

இதையடுத்து இந்த வழக்கு விசாரணையை 2 வார காலம் உச்சநீதிமன்றம் தள்ளி வைத்தது.

கோடை விடுமுறைக்குப் பிறகு, மீண்டும் விசாரணை நடை பெறும் என்று அறிவிக்கப்பட்டுள்ளது.

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+