அரவிந்த் கேஜ்ரிவால், சிசோடியா சி.ஐ.ஏ. ஏஜெண்டுகளா? - பாஜக கேள்வி

டெல்லி பிரதேச பாஜக தலைவர் ஹர்ஷ் வர்தன் நேற்று செய்தியாளர்களிடம் கூறியதாவது:
அரசியல் கட்சி தொடங்கும் முன்பு பரிவர்த்தன், சம்பூர்ண பரிவர்த்தன், கபீர் ஆகிய தொண்டு நிறுவனங்களின் பெயரில் அமெரிக்க ஃபோர்டு ஃபவுண்டேஷனிடமிருந்து லட்சக்கணக்கான டாலர்களை அரவிந்த் கேஜ்ரிவாலும் மணீஷ் சிசோடியும் பெற்றிருந்தனர்.
ஃபோர்டு ஃபவுண்டேஷன் என்பது அமெரிக்க உளவு நிறுவனமான சி.ஐ.ஏ. ஆதரவுடன் இயங்கிவருவதாகும். வளரும் நாடுகள், வளர்ச்சி பெறாத நாடுகளில் தொண்டு நிறுவனங்கள் மூலம் அரசியல் நிலையற்ற தன்மையை ஏற்படுத்துவதும், ஆட்சியை சீர்குலைப்பதும் அதன் பணி. அப்படியானால் அரவிந்த் கேஜ்ரிவாலும் மணீஷ் சிசோடியாவும் சிஐஏ ஏஜெண்டுகளா? என்பதை தெளிவுபடுத்த வேண்டும்.
டெல்லி போன்ற சிறிய பிரதேசத்தை ஆட்சி செய்ய இயலாதவர்கள், நாட்டை எப்படி ஆட்சி செய்ய முடியும்? நாட்டில் குழப்பத்தை ஏற்படுத்தும் ஆம்ஆத்மியின் கொள்கைகள் ஆபத்தானவை.
இவ்வாறு ஹர்ஷ்வர்தன் தெரிவித்தார்.












Click it and Unblock the Notifications