தேர்தல் முடியும் வரை வாரணாசி தான்... கங்கணம் கட்டிக் கொண்டு ரயிலில் கிளம்பிய கெஜ்ரிவால்
Subscribe to Oneindia Tamil
வாரணாசி: தேர்தல் முடியும் வரை வாரணாசியிலேயே தங்கியிருந்து தேர்தல் பணிகளை கவனிப்பது என ஆம் ஆத்மி கட்சித் தலைவரும், வாரணாசி லோக்சபா தொகுதி வேட்பாளாருமான அரவிந்த் கெஜ்ரிவால் முடிவு செய்துள்ளாராம்.

வாரணாசி லோக்சபா தொகுதிக்கான தேர்தல் வரும் 12ம் தேதி நடைபெற உள்ளது. அத்தொகுதியில் தான் பாஜக பிரதமர் வேட்பாளரான மோடி போட்டியிடுகிறார். அவரை எதிர்த்து காங்கிரஸ் கட்சி சார்பில் அஜய் ராய் களமிறங்குகிறார்.
இவர்கள் இருவரையும் எதிர்த்து ஆம் ஆத்மி கட்சித் தலைவரும் முன்னாள் டெல்லி முதல்வருமான அரவிந்த் கெஜ்ரிவால் அங்கு போட்டியிடுகிறார். இதனால் அங்கு தங்கியிருந்து பிரச்சாரம் செய்ய அவர் முடிவு செய்துள்ளாராம்.
அதற்கான இன்று ரயில் மார்க்கமாக கிளம்பி வாரணாசி சென்றடைகிறார் கெஜ்ரிவால்.












Click it and Unblock the Notifications