டெல்லி துணை நிலை ஆளுநர் மாளிகையில் 6-வது நாளாக முதல்வர் கேஜ்ரிவால் உள்ளிருப்புப் போராட்டம்
டெல்லி ஆளுநர் மாளிகையில் 6-வது நாளாக கேஜ்ரிவால் போராட்டம் நடத்தி வருகிறார்.
Subscribe to Oneindia Tamil
டெல்லி: தமது அரசின் திட்டங்களுக்கு ஒப்புதல் தர வலியுறுத்தி டெல்லி முதல்வர் அரவிந்த் கேஜ்ரிவால், துணை நிலை ஆளுநர் பைஜால் மாளிகை சோபாவில் அமர்ந்து 6-வது நாளாக உள்ளிருப்புப் போராட்டம் நடத்தி வருகிறார்.
ரேஷன் பொருட்களை வீடுகளுக்கே நேரடியாக சென்று தரும் திட்டத்துக்கு ஒப்புதல் தேவை; ஐஏஎஸ் அதிகாரிகள் ஸ்டிரைக்கை முடிவுக்கு கொண்டுவர வேண்டும் என்பது டெல்லி அரசின் கோரிக்கைகள். இந்த கோரிக்கைகளை வலியுறுத்தி ஆளுநர் மாளிகை அலுவலகத்தில் அமர்ந்து முதல்வர் கேஜ்ரிவால் மற்றும் அமைச்சர்கள் உள்ளிருப்புப் போராட்டத்தில் ஈடுபட்டு வருகின்றனர்.

இந்த உள்ளிருப்புப் போராட்டம் இன்று 6-வது நாளை எட்டியுள்ளது. தங்களது போராட்டத்தை முறியடிக்க மத்திய அரசு திட்டமிட்டுள்ளதாகவும் தங்களை வலுக்கட்டாயமாக வெளியேற்ற முயற்சிப்பதாகவும் கேஜ்ரிவால் ட்விட்டரில் புகார் தெரிவித்துள்ளார்.












Click it and Unblock the Notifications