142 அடியை எட்டிய முல்லைப் பெரியாறு அணை... வயிற்றெரிச்சலில் மீண்டும் சுப்ரீம் கோர்ட் போகிறது கேரளா!!
டெல்லி: முல்லைப் பெரியாறு அணை மீண்டும் 142 அடியை எட்டுவதால் கூடுதல் நீரை தமிழக அரசு வெளியேற்றி வருகிறது. ஆனால் நீர் திறப்பதற்கு முன்னதாக தங்களுக்கு முன்னெச்சரிக்கை விடுக்கவில்லை என குற்றம்சாட்டியுள்ள கேரளா உச்சநீதிமன்றத்தில் இதுகுறித்து முறையிடப் போவதாக கூறியுள்ளது.
முல்லைப் பெரியாறு அணையின் நீர்பிடிப்பு பகுதிகளில் தொடர்ச்சியாக மழை பெய்தது. இதனால் அணையின் நீர்மட்டும் கிடுகிடுவென உயர்ந்தது.

அணையின் நீர்மட்டம் 141 அடியை தாண்டி உச்சநீதிமன்றம் அனுமதித்த அளவான 142 அடியை எட்டிக் கொண்டிருக்கிறது. இதனால் அணையில் இருந்து கடந்த சில நாட்களாக உபரிநீர் வெளியேற்றப்பட்டு வருகிறது.
இன்று காலை அணையின் நீர்மட்டம் 141.67 அடியாக இருந்தது. இன்று வினாடிக்கு 2,100 கன அடி நீர் திறக்கப்பட்டு வருகிறது. இதனால் தமிழகத்தின் தேனி மாவட்டத்தில் வெள்ள அபாய எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது.
முல்லைப் பெரியாறு அணையில் 142 அடி நீரை தேக்க கேரளா கடும் எதிர்ப்பு தெரிவித்து வந்தது. இதனை எதிர்த்து தமிழகம் தொடர்ந்த வழக்கில் கடந்த 2014ஆம் ஆண்டு உச்சநீதிமன்ற முல்லைப் பெரியாறு அணையில் 142 அடி நீரைத் தேக்கலாம் என அனுமதி அளித்தது. இதன்படி கடந்த ஆண்டும் 142 அடிக்கு நீர் தேக்கப்பட்டது. இதேபோல் தற்போதும் 142 அடியை எட்டும் நிலையில் நீர் தேக்கப்பட்டு வருகிறது. இது கேரளாவை வயிற்றெரிச்சல் பட வைத்துள்ளது.
இது தொடர்பாக கேரளா சட்டசபையிலும் விவாதம் நடைபெற்றது. அப்போது முல்லைப் பெரியாறு அணையின் பாதுகாப்பு தொடர்பாக பிரதமரை விரைவில் உம்மன்சாண்டி சந்திப்பார் என தெரிவிக்கப்பட்டது.
இந்நிலையில் முல்லைப் பெரியாறு அணையில் நீரை திறப்பதற்கு 12 மணி நேரத்துக்கு முன்னதாக தங்களுக்கு தமிழக அரசு எச்சரிக்கை விடுக்கவில்லை என புது புகாரை முன்வைக்கிறது கேரளா.
இதனால் உச்சநீதிமன்றத்தை நாடப்போடவதாகவும் கேரளா தெரிவித்துள்ளது. இது குறித்து கேரளா முதல்வர் உம்மன்சாண்டி கூறுகையில், தமிழகம் கேரளாவுடன் பேச்சுவார்த்தை நடத்துவதற்கு தமிழகம் இணக்கமான ஒரு சூழ்நிலையில் இல்லை என கூறியிருந்தார்.
கேரளா நீர்ப்பாசனத்துறை அமைச்சர் பி.ஜே. ஜோசப், முல்லைப் பெரியாறு அணையில் நீரை திறந்துவிடுவதற்கு 12 மணிநேரத்துக்கு முன்னதாக கேரளாவுக்கு எச்சரிக்கை விடுக்க வேண்டும். ஆகையால் இதை தமிழகம் பின்பற்றவில்லை. இது குறித்து மத்திய நீர்வள ஆணையத்திடம் முறையிட்டுள்ளோம். விரைவில் உச்சநீதிமன்றத்தையும் நாட உள்ளோம் என்றார்.
-
Indoor Plants: வீட்டின் காற்றைச் சுத்திகரித்து ஆக்ஸிஜன் அளவை அதிகரிக்கும் இன்டோர் செடிகள்! -
தேசிய அளவில் பலவீனமடையும் பாஜக எதிர்ப்பு.. காங்கிரஸ் செயலால் திட்டத்தை மாற்றும் திமுக! -
திருச்சி கிழக்கு இடைத்தேர்தல்.. தவெக வேட்பாளராக சிரஞ்சீவி? மேடையில் முதல்வர் விஜய் தந்த செம ஹிண்ட் -
நன்றி மறக்காத விஜய்.. தவெகவின் முதல் ராஜ்யசபா எம்பி யார்? ரேசில் முன்னணியில் ’லெஃப்ட் - ரைட்’ ஹேண்ட் -
“தவெகவுக்கு ஓட்டு போடாத தென்காசி மக்களும் பாதிக்கப்படுகிறோம்”.. நள்ளிரவில் எழுந்த திடீர் போராட்டம்! -
"பச்சை துரோகம்.. வாக்கு அறுவடை முடிந்ததும் ரிசர்வ் வங்கியை காரணம் காட்டுவதா?" தங்கம் தென்னரசு தாக்கு -
திமுகவிற்கு விஜய் சொன்ன 'நோ'.. ஸ்விட்ச் ஆப் ஆன போன்.. மேஜைக்கு வந்த உளவுத்துறை ரிப்போர்ட்! -
SP Velumani: வேலுமணிக்கு வில்லனாக மாறிய முனுசாமி.. பதவிக்கு விழுந்த வேட்டு! -
கொ*யில் முடிந்த பார் டான்ஸ்.. கொதித்துப் போன கோயம்பேடு! யான்சிக்கு இப்படியா சாவு வரனும்! ஷாக்! -
Annamalai New Party LIVE:தனிக் கட்சி தொடங்குகிறார் அண்ணாமலை? பிறந்தநாளன்று வெளியாகும் அப்டேட்? -
விஜய்க்கு பெரிய தலைவலி.. ஒரே நாளில் வீட்டுக்கு போன 5000 ஊழியர்கள் ஓய்வு! ஆட்டம் காணும் அரசு துறைகள் -
நான் பார்த்துகிறேன் நண்பா.. உறுதியாக சொன்ன விஜய்.. அஜித் தாய் மறைந்த இரவு.. நடந்தது என்ன?












Click it and Unblock the Notifications