ஐஎஸ் அமைப்பில் சேர ஆப்கானிஸ்தான் சென்ற இந்தியர் ட்ரோன் தாக்குதலில் பலி
திருவனந்தபுரம்: ஐஎஸ்ஐஎஸ் தீவிரவாத அமைப்பில் சேர கேரளாவில் இருந்து ஆப்கானிஸ்தான் சென்ற வாலிபர் ஆளில்லா விமான தாக்குதலில் கொல்லப்பட்டார்.
கேரளாவை சேர்ந்தவர் ஹபீஸ்(21). கடந்த ஆண்டு கேரளாவை சேர்ந்த 21 பேர் திடீர் என மாயமாகினர். அதில் ஹபீஸும் ஒருவர். கடந்த ஆண்டு மட்டும் காசரகோட்டை சேர்ந்த 17 பேர் மற்றும் பாலக்காட்டை சேர்ந்த 4 பேர் மாயமாகினர்.

அதில் 4 பெண்கள் மற்றும் 3 குழந்தைகள் அடக்கம். அவர்கள் ஆப்கானிஸ்தான் சென்று ஐஎஸ்ஐஎஸ் தீவிரவாத அமைப்பில் சேர்ந்ததாக கூறப்பட்டது. இந்நிலையில் ஆப்கானிஸ்தானில் நடந்த ஆளில்லா விமான தாக்குதலில் ஹபீஸ் இறந்துவிட்டதாக அந்நாட்டு அதிகாரிகள் ஹபீஸின் குடும்பத்தாருக்கு தகவல் தெரிவித்துள்ளனர்.
இருப்பினும் இந்த தகவலை இந்திய அரசு இன்னும் உறுதி செய்யவில்லை. ஆப்கானிஸ்தான் அரசு அதிகாரிகளுடன் இது குறித்து தொடர்பில் இருப்பில் இருப்பதாக இந்தியா தரப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
ஹபீஸ் ஞாயிற்றுக்கிழமை இறந்ததாக தெரிவிக்கப்பட்டுள்ளது.












Click it and Unblock the Notifications