கேரள டிஜிபி ஜேக்கப் தாமஸ் சஸ்பென்ட்.. மாநில அரசு அதிரடி உத்தரவு!
கேரள டிஜிபி ஜேக்கப் தாமஸை பணியிடை நீக்கம் செய்து அம்மாநில அரசு உத்தரவிட்டு இருக்கிறது.
Subscribe to Oneindia Tamil
திருவனந்தபுரம்: கேரள டிஜிபி ஜேக்கப் தாமஸை பணியிடை நீக்கம் செய்து அம்மாநில அரசு அதிரடி உத்தரவிட்டு இருக்கிறது.
கேரளா டிஜிபியாக இருந்த ஜேக்கம் தாமஸ் அம்மாநில அரசால் பணியிடை நீக்கம் செய்யப்பட்டு இருக்கிறார். இவர் மீது வந்த தொடர் புகார்களின் அடிப்படையில் இந்த நடவடிக்கை எடுக்கப்பட்டு இருக்கிறது.

அவர் கேரளா மாநில அரசுக்கு எதிராகவே செயல்பட்டதாக குற்றச்சாட்டு இருக்கிறது. இந்த குற்றத்தின் காரணமாகவே அவர் பணியிடை நீக்கம் செய்யப்பட்டு இருக்கிறார்.
மேலும் அவர் மாநில அரசுக்கு எதிராக எந்த மாதிரியான குற்றங்கள் செய்தார் என்பது குறித்த தகவல்கள் இதுவரை வெளியாகவில்லை.
மாநில டிஜிபி ஒருவரே அம்மாநில அரசுக்கு எதிராக செயல்பட்டதும், தற்போது அவர் பணியிடை நீக்கம் செய்யப்பட்டதும் அம்மாநில காவல்துறையினர் இடையே பெரும் பரபரப்பை ஏற்படுத்தி இருக்கிறது.












Click it and Unblock the Notifications