பெண்ணின் ஆவேசத்தில் சிக்கி "அறுபட்ட" கேரள சாமியார்.. உச்சா போக முடியாமல் அவதி!
திருவனந்தபுரம்: திருவனந்தபுரத்தில் இளம் பெண்ணின் ஆவேசத்தில் சிக்கி ஆணுறுப்பை பறி கொடுத்த சாமியாரின் நிலைமை மேம்பட்டு வருவதாக டாக்டர்கள் கூறினாலும் கூட அவரால் சிறுநீர் கழிக்க முடியாத நிலை ஏற்பட்டுள்ளது. இதையடுத்து அவருக்கு ஆபரேஷன் மூலம் மாற்று ஏற்பாடுகளை டாக்டர்கள் செய்துள்ளனர்.
கொல்லத்தைச் சேர்ந்த இந்த சாமியாரின் பெயர் கங்கேசானந்தா என்கிற ஸ்ரீஹரியாகும். இவர் 23 வயதான சட்ட மாணவியை தொடர்ந்து 6 வருடமாக பாலியல் ரீதியாக கொடுமைப்படுத்தி வந்துள்ளார். அவரது குடும்பத்தினரிடமும் முறைகேடாக பணம் பறித்து வந்ததாகவும் கூறப்படுகிறது.
இந்த நிலையில் கடந்த வெள்ளிக்கிழமையன்று இரவு, மாணவியை பாலியல் ரீதியாக சித்திரவதை செய்ய முயன்றுள்ளார் சாமியார். இதற்கு மேலும் பொறுக்க முடியாது என்று முடிவு செய்த அந்த மாணவி, கத்தியை எடுத்து சாமியாரின் ஆணுறுப்பை ஆவேசமாக அறுத்துத் தள்ளி விட்டார்.

கதறிய சாமியார்
துடிதுடித்துக் கதறிய சாமியாரை மருத்துவமனைக்குக் கொண்டு சென்றனர். அங்கு அவருக்கு தீவிர சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது. அவரது நிலையில் முன்னேற்றம் ஏற்பட்டுள்ளதாம்.

ஆணுறுப்பே இல்லை
அவரது உயிருக்கு ஆபத்து இல்லை. ஆனால் ஆணுறுப்பை முழுமையாக துண்டித்து எறியப்பட்டு விட்டதால் அவர் பெரும் சிக்கலுக்குள்ளாகியுள்ளார்.

உச்சா போக முடியலை
சிறுநீர் கழிக்க முடியாமல் அவர் தவித்து வருகிறார். அவருக்கு அறுவைச் சிகிச்சை மூலம் மாற்று ஏற்பாட்டை மருத்துவர்கள் செய்துள்ளனர். அவர் தொடர்ந்து சிகிச்சையில் இருந்து வருகிறார்.

வாங்கிக் கட்டிக் கொண்ட தரூர்
சம்பந்தப்பட்ட மாணவியின் செயலுக்கு முதல்வர் பினரயி விஜயன் உள்ளிட்ட பலரும் பாராட்டு தெரிவித்துள்ளனர். அதேசமயம், சசி தரூர் போன்ற சிலர் இதற்குக் கண்டனம் தெரிவித்து மக்களிடம் வாங்கிக் கட்டிக் கொண்டுள்ளனர்.












Click it and Unblock the Notifications