சியாச்சின் பனிச்சரிவில் உயிர்நீத்த கேரள ராணுவ வீரர் குடும்பத்துக்கு ரூ.25 லட்சம் இழப்பீடு
திருவனந்தபுரம்: சியாச்சின் பனிச்சரிவில் சிக்கி வீரமரணம் அடைந்த கேரள மாநிலத்தை சேர்ந்த ராணுவ வீரர் சுதேஷ்சின் குடும்பத்துக்கு மாநில அரசின் சார்பில் ரூ.25 லட்சம் இழப்பீடு வழங்கப்படும் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.
உலகின் மிக உயரமான பனிச்சரிவான சியாச்சினில் கடந்த 3ம் தேதி பனிச்சரிவு ஏற்பட்டது. இதில் பாதுகாப்பு பணியில் ஈடுபட்டிருந்த மெட்ராஸ் ரெஜிமண்ட் படையைச் சேர்ந்த 10 ராணுவ வீரர்கள் சிக்கிக் கொண்டனர். அவர்களில் 9 பேர் சம்பவ இடத்திலேயே இறந்தனர்.

இதையடுத்து ராணுவ ஹலிகாப்டர் மூலம் வீரர்களை தேடும் பணி தீவிரமாக நடந்தது. அப்போது கர்நாடகாவை சேர்ந்த ஹனுமந்தப்பா என்ற வீரர் 6 நாட்களுக்குப்பின் கடந்த 9-ந் தேதி உயிருடன் மீட்கப்பட்டார். மருத்துவமனையில் தீவிர சிகிச்சைப்பிரிவில் அனுமதிக்கப்பட்டு இருந்த அவரும் நேற்று உயிரிழந்தார்.
இந்த நிலையில் சியாச்சின் பனிச்சரிவில் சிக்கி உயிரிழந்தவர்களில், கேரளாவைச் சேர்ந்த பி.சுதேஷ் என்பவரும் அடங்குவார். அவரது மறைவுக்கு மாநில அரசு ஆழ்ந்த இரங்கல் தெரிவித்து உள்ளதுடன், அவரது குடும்பத்துக்கு ரூ.25 லட்சம் இழப்பீடும் நேற்று அறிவித்தது. மேலும் ராணுவ வீரர் பி.சுதேஷின் மனைவிக்கு அரசு வேலையும் வழங்கப்படும் என அறிவிக்கப்பட்டு உள்ளது.












Click it and Unblock the Notifications