கேரள வெள்ளத்திற்கு நாங்கள் காரணமல்ல... உச்சநீதிமன்றத்தில் தமிழக அரசு பதில் மனு
கேரள வெள்ளத்திற்கு அம்மாநில அரசு தான் காரணம் என தமிழக அரசு உச்சநீதிமன்றத்தில் பதில் மனுத்தாக்கல் செய்துள்ளது.
டெல்லி: கேரள வெள்ளத்திற்கு அம்மாநில அரசு தான் காரணம் என தமிழக அரசு உச்சநீதிமன்றத்தில் பதில் மனுத்தாக்கல் செய்துள்ளது.
கேரளாவில் கனமழை காரணமாக அம்மாநில அணைகள் வேகமாக நிரம்பின. இதைத்தொடர்ந்து முல்லைப் பெரியாறு அணையின் நீர்மட்டத்தை குறைக்குமாறு தமிழக முதல்வருக்கு கேரள முதல்வர் பினராயி விஜயன் கடிதம் எழுதினார்.
ஆனால் அணை பாதுகாப்பாக உள்ளது நீர்மட்டத்தை குறைக்க தேவையில்லை என முதல்வர் எடப்பாடி பழனிச்சாமி பதில் தெரிவித்தார். இதையடுத்து நீர்மட்டத்தை குறைக்குமாறு உச்சநீதிமன்றத்தில் கேரள அரசு மனுத்தாக்கல் செய்தது. இதுதொடர்பான விசாரணை நடைபெற்று வருகிறது.

கேரள அரசு குற்றச்சாட்டு
இந்நிலையில் கேரள வெள்ள பாதிப்பிற்கு தமிழகமும் ஒரு காரணம் என உச்ச நீதிமன்றத்தில் கேரள அரசு நேற்று பிரமாண பத்திரம் தாக்கல் செய்தது. முல்லைப் பெரியாறு அணையில் இருந்து திடீரென வெளியேற்றப்பட்ட நீரும் கேரளாவின் இடுக்கி பகுதியில் ஏற்பட்ட வெள்ள பாதிப்புகளுக்கான காரணங்களில் ஒன்று என்றும் கேரள அரசு குற்றம்சாட்டியது.

3 அடி குறைக்க உத்தரவு
முல்லைப் பெரியாறு அணையின் நீர்மட்டத்தை குறைக்க தமிழக அரசு ஒத்துழைக்கவில்லை என்றும் கேரள அரசு குற்றம்சாட்டியது. இதைத்தொடர்ந்து முல்லைப்பெரியாறு அணையின் நீர்மட்டத்தை 3 அடி குறைக்க முல்லைப்பெரியாறு துணை கண்காணிப்புக்குழு உத்தரவிட்டது.

தமிழகம் காரணமல்ல
இந்நிலையில் கேரள அரசின் குற்றச்சாட்டு தொடர்பாக தமிழக அரசு உச்சநீதிமன்றத்தில் பதில் மனுத்தாக்கல் செய்துள்ளது. அதில் கேரள வெள்ளத்திற்கு தமிழகம் காரணமல்ல என தெரிவித்துள்ளது.

கேரளாதான் தண்ணீர் திறந்தது
இடுக்கி வெள்ளத்திற்கு கேரள அரசுதான் காரணம் என்றும் தமிழக அரசு தனது பதில் மனுவில் தெரிவித்துள்ளது. தமிழகம் தண்ணீர் திறப்பதற்கு 2 நாட்களுக்கு முன்பே கேரளா தண்ணீர் திறந்துவிட்டது என்றும் மனுவில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

14 டிஎம்சி திறந்தது
இடுக்கி முல்லைப்பெரியாறு அணையில் இருந்து தமிழகத்திற்கு 2 டிஎம்சி தண்ணீர் தான் திறக்கப்பட்டது. ஆனால் அதற்கு முன்னரே கேரளா 14 டிஎம்சி தண்ணீரை திறந்துவிட்டது.

குற்றச்சாட்டை ஏற்க முடியாது
முல்லைப்பெரியாறு அணையின் 13 மதகுகளில் கேரள அரசு தான் தண்ணீர் திறந்தது. வெள்ளத்திற்கு காரணம் தமிழக அரசுதான் என்ற கேரளாவின் குற்றச்சாட்டை ஏற்க முடியாது என்றும் தமிழக அரசு தனது பதில் மனுவில் தெரிவித்துள்ளது.
-
ஆபாசம்.. ஆபாசம்.. யூடியூபர்கள் கிருஷ் ஐஷ்வர்யா மீது கோவை சைபர் க்ரைம் போலீஸில் புகார் -
சென்னையில் நாளை மாலை ‘GenZ DMK’ பிரம்மாண்ட நிகழ்ச்சி.. களமிறங்கும் திமுக உணர்வுள்ள இளைஞர்கள்! -
அதிமுகவில் அடுத்த விக்கெட்? சி.வி.சண்முகத்துக்கு இப்படியொரு லட்டு சான்ஸ்? போட்டு தாக்குதே தவெக -
சிவகுமார் போட்ட மாஸ்டர் ஸ்கெட்ச்.. ராகுலுக்கு நேரமில்லை? டெல்லியில் மிஸ்டர் விஜய்னு கூப்பிட்டது யாரு -
விசில் அடித்து முன்னேறும் கர்நாடகா, ஆந்திரா.. இனி தமிழ்நாடு வேடிக்கை பார்க்கணும்! விஜய் போட்ட பிரேக் -
ஆரம்பமே அடி சறுக்கல்.. சிங்கப்பெண் அதிரடிப்படை திட்டத்தின் தொடக்க விழா ரத்து! -
மாடுகளை பலியிட தடை.. நீதிபதி ஜி.ஆர்.சுவாமிநாதன் உத்தரவு! விஜய்க்கு சிபிஎம் வைத்த முக்கிய கோரிக்கை! -
பாஜகவில் இருந்து விலகி அண்ணாமலை தனிக்கட்சி தொடங்குகிறார்? ரஜினி ஆதரவுடன் திருச்சி கிழக்கில் போட்டி? -
பூந்தமல்லி டூ வடபழனி இனி 20 நிமிடங்களில்.. ஆளில்லா மெட்ரோ ரயில் சேவைக்கு கிடைத்த பச்சை சிக்னல் -
விஜய் கொடுத்த வாக்குறுதி.. தவெகவில் இணைந்தது ஏன்.. உண்மையை உடைத்த அதிமுக எக்ஸ் எம்எல்ஏ -
GH-ல் கடைநிலை ஊழியர்கள் மீது நடவடிக்கை எடுத்த ரமேஷுக்கு அர்ச்சகர்கள் மீது ஆக்ஷன் எடுக்க தாமதம் ஏன்? -
சிங்கப்பெண் படையை தொடங்கிவைக்கவே முடியாத விஜய் எப்படி பெண்கள் பாதுகாப்பை உறுதிசெய்வார்?: TTV தினகரன்












Click it and Unblock the Notifications