Get Updates
Get notified of breaking news, exclusive insights, and must-see stories!

கேரளாவில் மீண்டும் கிஸ் ஆப் லவ் போராட்டம்.... ஹனுமன் சேனாவினர் தாக்குதல் நடத்தியதால் பரபரப்பு!

Subscribe to Oneindia Tamil

கோழிக்கோடு: கேரளாவின் கோழிக்கோட்டில் கிஸ் ஆப் லவ் போராட்டத்தை நடத்தியவர்கள் மீது ஹனுமன் சேனா என்ற அமைப்பினர் தாக்குதல் நடத்தியதால் பெரும் பரபரப்பு ஏற்பட்டது.

கேரளாவின் கோழிக்கோட்டில் காபி கடை ஒன்றில் காதல் ஜோடிகள் மீது ஒரு கும்பல் கொடூரமாக தாக்குதல் நடத்தியது. இதைக் கண்டித்து நடுத்தெருவில் முத்தமிடும் போராட்டத்தை பல்வேறு அமைப்பினர் நடத்தினர்.

Kerala: Hanuman Sena Workers Clash With 'Kiss Street' Organisers

கிஸ் ஆப் லவ் என்ற பெயரில் நடத்தப்பட்ட இந்த போராட்டத்தில் தீவிரமாக இருந்தது மாடல் ரஷ்மி நாயர், அவரது கணவர் ராகுல் பசுபாலன். இப்போராட்டத்துக்குப் பின்னர் இருவரும் பிரபலமாகிவிட்டனர்.

ஆனால் இந்த பிரபலத்தை பயன்படுத்தி இருவரும் பாலியல் தொழிலில் ஈடுபட போலீசில் சிக்கி சிறையில் உள்ளனர். இந்நிலையில் கோழிக்கோட்டில் நேற்று மீண்டும் கிஸ் ஆப் லவ் என்ற பெயரில் நடுத்தெருவில் கட்டிப்பிடித்து முத்தமிட்டுக் கொள்ளும் போராட்டம் நடைபெற்றது.

இதைக் கேள்விபட்டு அங்கு வந்த ஹனுமன் சேனா என்ற இந்துத்துவா அமைப்பினர் நடுத்தெருவில் கட்டிப்பிடித்து முத்தமிட்டவர்களை தாக்கத் தொடங்கினர். இதனால் இருதரப்புக்கும் இடையே மோதல் வெடித்தது.

இதனைத் தொடர்ந்து அங்கு விரைந்து வந்த போலீசார் தடியடி நடத்தி கலவரத்தைக் கட்டுப்படுத்தினர். இதன் பின்னர் இரு அமைப்பைச் சேர்ந்தவர்களையும் போலீசார் கைது செய்தனர்.

More From
Prev
Next
Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+