சிறுமி பாலியல் பலாத்காரம்.. கேரள கத்தோலிக்க பாதிரியாருக்கு இட்டை ஆயுள் தண்டனை
கொச்சி: சிறுமியை பாலியல் பலாத்காரம் செய்த வழக்கில் குற்றம்சாட்டப்பட்ட கத்தோலிக்க மதக் குருவுக்கு இரட்டை ஆயுள் தண்டனை விதித்து கொச்சி நீதிமன்றம் வியாழக்கிழமை பரபரப்பான தீர்ப்பை அளித்துள்ளது.
கொச்சியில் உள்ள லத்தின் கத்தோலிக்க திருச்சபையில் குருவாக இருப்பதுடன் அந்தப் பகுதயின் கிராமப் புரோகிதராகவும் எட்வின் பிகார்ஸ் என்பவர் இருந்து வருகிறார்.

இவர் கடந்த 2015-ம் ஆண்டு ஜனவரி முதல் மார்ச் வரையில் அங்குள்ள சிறுமியை ஏமாற்றி பலமுறை பாலியல் பலாத்காரம் செய்துள்ளார்.
இந்த கொடூரம் குறித்து அந்த சிறுமியின் தாயார் காவல் நிலையத்தில் புகார் அளித்தார். அதன்பேரில் வழக்குப் பதிவு செய்யப்பட்டு விசாரணை நடத்தப்பட்டது. சம்பந்தப்பட்ட கத்தோலிக்க மதக் குரு தலைமறைவாகி பின்னர் கைது செய்யப்பட்டார்.
இந்த வழக்கு விசாரணை எர்ணாகுளம் சிறப்பு நீதிமன்றத்தில் நடந்து வந்தது.
விசாரணை முடிவடைந்த நிலையில் வழக்கில் குற்றம் சாட்டப்பட்ட மதக்குரு எட்வின் பிகார்ஸ்க்கு இரட்டை ஆயுள் தண்டனை விதித்து சிறப்பு நீதிமன்ற நீதிபதி பரபரப்பு தீர்ப்பளித்தார். மேலும், ரூ.2 லட்சத்து 15 அபராதமும் விதிக்கப்பட்டது.
இந்த வழக்கில் எட்வினுக்கு உதவியாக இருந்த அவரது சகோதரருக்கு ஒரு வருடம் சிறைத் தண்டனையும், 5000 ரூபாய் அபராதமும் விதிக்கப்பட்டது.












Click it and Unblock the Notifications