வெள்ளத்தில் தத்தளித்த 1 லட்சம் பேரை காப்பாற்றிய கேரளா "ரியல் ஹீரோக்களுக்கு" உற்சாக வரவேற்பு
திருவனந்தபுரம்: கேரளத்தில் வெள்ளத்தில் தத்தளித்த ஒரு லட்சம் பேரை காப்பாற்றிய அம்மாநிலத்துக்கு மீனவர்கள் மீட்பு பணிகளை முடித்து கொண்டு சொந்த ஊர் திரும்பினர். அங்கு அவர்களுக்கு உற்சாக வரவேற்பு அளிக்கப்பட்டது.
கேரளாவில் வரலாறு காணாத மழை பெய்தது. இதனால் அந்த மாநிலமே வெள்ளத்தால் தத்தளித்தது. அங்கு மீட்பு பணிகள் தீவிரமடைந்தன.
இந்த வெள்ளம் மற்றும் நிலச்சரிவால் 300-க்கும் மேற்பட்டோர் பலியாகிவிட்டனர். ஏராளமானோர் தங்கள் உடைமைகளையும் வீட்டையும் இழந்துள்ளனர்.
|
மீட்பு பணிகள்
படகில் சென்று மீட்க முடிந்தவர்களை படகின் மூலமும், தண்ணீர் அதிகரித்ததால் வீட்டின் மொட்டை மாடிக்கு தஞ்சமடைந்தவர்களை ஹெலிகாப்டர் மூலமும் மீட்பு பணிகள் நடைபெற்றன.

சொந்த ஊர்
மீட்பு பணிகளில் முப்படை வீரர்களும் உள்ளூர் மீனவர்களும் ஈடுபட்டிருந்தனர். தற்போது மழை முடிந்து வெள்ளம் நீர் ஓரளவுக்கு வடிந்த இடங்களில் இருந்து மீனவர்கள் தங்கள் சொந்த ஊருக்கு திரும்பினர். அவர்களுக்கு சொந்த ஊரில் உற்சாக வரவேற்பு அளிக்கப்பட்டது.

1 லட்சம் பேர்
இந்த மீனவர்கள் அதிக தண்ணீர் இருந்த பகுதிகளிலும் சீற்றத்தோடு பொங்கி எழுந்த தண்ணீரிலும் தங்கள் உயிரையும் துச்சமாக கருதி மக்களை மீட்டனர். இவர்கள் இதுவரை 1 லட்சம் பேரை மீட்டுள்ளனர்.

உதவியை மறக்கவே முடியாது
இவர்களின் உதவிக்கு கேரளா முதல்வர் பினராயி விஜயனும் மிகப் பெரிய நன்றியை தெரிவித்துள்ளார். இவர்கள்தான் எங்கள் மாநிலத்தின் ராணுவ வீரர்கள் என்றும், மீனவர்கள் செய்த உதவியை மறக்கவே முடியாது என்றும் அவர் நெகிழ்ச்சியுடன் தெரிவித்தார் என்பது குறிப்பிடத்தக்கது.
-
Indoor Plants: வீட்டின் காற்றைச் சுத்திகரித்து ஆக்ஸிஜன் அளவை அதிகரிக்கும் இன்டோர் செடிகள்! -
தேசிய அளவில் பலவீனமடையும் பாஜக எதிர்ப்பு.. காங்கிரஸ் செயலால் திட்டத்தை மாற்றும் திமுக! -
திருச்சி கிழக்கு இடைத்தேர்தல்.. தவெக வேட்பாளராக சிரஞ்சீவி? மேடையில் முதல்வர் விஜய் தந்த செம ஹிண்ட் -
நன்றி மறக்காத விஜய்.. தவெகவின் முதல் ராஜ்யசபா எம்பி யார்? ரேசில் முன்னணியில் ’லெஃப்ட் - ரைட்’ ஹேண்ட் -
“தவெகவுக்கு ஓட்டு போடாத தென்காசி மக்களும் பாதிக்கப்படுகிறோம்”.. நள்ளிரவில் எழுந்த திடீர் போராட்டம்! -
"பச்சை துரோகம்.. வாக்கு அறுவடை முடிந்ததும் ரிசர்வ் வங்கியை காரணம் காட்டுவதா?" தங்கம் தென்னரசு தாக்கு -
திமுகவிற்கு விஜய் சொன்ன 'நோ'.. ஸ்விட்ச் ஆப் ஆன போன்.. மேஜைக்கு வந்த உளவுத்துறை ரிப்போர்ட்! -
SP Velumani: வேலுமணிக்கு வில்லனாக மாறிய முனுசாமி.. பதவிக்கு விழுந்த வேட்டு! -
கொ*யில் முடிந்த பார் டான்ஸ்.. கொதித்துப் போன கோயம்பேடு! யான்சிக்கு இப்படியா சாவு வரனும்! ஷாக்! -
Annamalai New Party LIVE:தனிக் கட்சி தொடங்குகிறார் அண்ணாமலை? பிறந்தநாளன்று வெளியாகும் அப்டேட்? -
விஜய்க்கு பெரிய தலைவலி.. ஒரே நாளில் வீட்டுக்கு போன 5000 ஊழியர்கள் ஓய்வு! ஆட்டம் காணும் அரசு துறைகள் -
நான் பார்த்துகிறேன் நண்பா.. உறுதியாக சொன்ன விஜய்.. அஜித் தாய் மறைந்த இரவு.. நடந்தது என்ன?












Click it and Unblock the Notifications